Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குடிநீர்தொட்டி சுத்தம் செய்யாவிட்டால் பணிநீக்கம் ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை

Print PDF

தினகரன் 24.12.2009

குடிநீர்தொட்டி சுத்தம் செய்யாவிட்டால் பணிநீக்கம் ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை

அரியலூர், : அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரியலூர் மாவட்டத் தில் அனைத்து கிராம ஊ ராட்சிகளில் பன்றிகளால் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படாத வகையில் அவைகளை அப்புறப்படுத்த ஊராட்சி தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து குளாரினேசன் செய்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை (ஆபரேட்டர் கள்) பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்ய நேரிடும். சம்மந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மீதும் குற்றவியல் உள்ளி ட்ட சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 24 December 2009 06:13
 

சாலையில் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் நிச்சயம்

Print PDF

தினகரன் 24.12.2009

சாலையில் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் நிச்சயம்

பழநி: பழநி நகராட்சி அலுவலகத்தில் வியாபார கடைகள், மடங்கள், ஓட்டல்கள், லாட்ஜ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர்மன்றத்தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். ஆணையர் சித்திக், நகரமைப்பு அலுவலர் உத்திரபதி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வியாபார கடைகள், மடங்கள், ஓட்டல்கள், லாட்ஜ்கள் குப்பை சேகரிப்பு தொட்டிகள் ஏற்படுத்தி, குப்பைகளை அதில் சேகரித்து நகராட்சி வாகனங்களில் கொட்ட வேண்டும். மீறி சாலைகளில் குப்பை கொட்டுவோருககு ரூபாய் 5ஆயிரம் அளவிற்கு அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பேருந்து நிலையம் எதிர்புறம், தேவர்சிலை பின்புறம், ஆண்டவன் பூங்கா சாலை என 3 பகுதிகளில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்க திருக்கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. துப்புரவு பணிக்காக 51 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கூடுதலாக மேலும் 50 பணியாளர்கள் என 101 பணியாளர்கள் 16 மணி நேரம் தொடர்ந்து பணிபுரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சையது அபுதாகீர், மணிகண்டன், அனீபா, நெடுமாறன், மதுரைவீரன், பி.மணிகண்டன் செய்திருந்தனர்.

Last Updated on Thursday, 24 December 2009 06:16
 

காய்ச்சிய குடிநீரை குடியுங்கள்: நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 23.12.2009

காய்ச்சிய குடிநீரை குடியுங்கள்: நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

கடலூர்:பொது மக்கள் காய்ச்சிய குடிநீரையே பருக வேண் டும் என கடலூர் நகராட்சி கமிஷனர் குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகரப்பகுதிகளில் மழை நீர் தேக்கம் அடைந்து சுகாதார பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற்ற செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.இந்நிலையில் குடிநீர் குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரினை பாதுகாப்பு கருதி பொது மக்கள் காய்ச்சி பருகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. மேலும் நகர பகுதிகளிலுள்ள அனைத்து ஓட்டல் களிலும் காய்ச்சிய குடிநீர் வழங்க உத்தரவிடப்பட் டுள்ளது. சுகாதார நலன்கருதி சாலையோரங்களில் விற்கும் உணவுகளை உண்ண வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

 


Page 413 of 519