காலாவதியான பொருள் விற்பனை: அதிகாரிகள் திடீர் ஆய்வு
Monday, 21 December 2009 06:42
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 21.12.2009 காலாவதியான பொருள் விற்பனை: அதிகாரிகள் திடீர் ஆய்வு கோபி, டிச.20: கோபி நகராட்சிப் பகுதியில் கலப்படப் பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்தனர். கோபி நகராட்சி துப்புரவு அலுவலர் ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், சையத்காதர் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், கோபி அரசு மருத்துவமனை வீதி, கடை வீதி, கோபி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 12 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கடைகளில் காலாவதியான மஞ்சள்தூள், சாம்பார் தூள் ஆகியவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு கடையிலிருந்த சில பொருள்களின் மாதிரிகளை எடுத்து, கோவையில் உள்ள உணவு கலப்படப் பொருள் கண்டறியும் மையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் பொருள்களை வாங்கும்போது அவற்றின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் நாள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். காலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Last Updated on Monday, 21 December 2009 06:49
|
மளிகைக் கடைகளில் நகராôட்சி அலுவலர்கள் ஆய்வு
Monday, 21 December 2009 06:36
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 21.12.2009 மளிகைக் கடைகளில் நகராôட்சி அலுவலர்கள் ஆய்வு திருவாரூர், டிச. 20: திருவாரூர் நகராட்சி பகுதிகளில் உணவுப் பொருள்கள் கலப்படம் குறித்து நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு உணவுப் பொருள்கள் கலப்படத் தடுப்பு இணை இயக்குநரகத்தின் உத்தரவுக்கிணங்க, திருவாரூர் நகராட்சி ஆணையர் க. சரவணன், சுகாதார அலுவலர் எஸ். விஜயகுமார், உணவு ஆய்வாளர் க. மணாழகன், சுகாதார ஆய்வாளர்கள் வி. பழனிசாமி, ஆர். பாலமுருகன், வி. அருள்தாஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து, ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து ஆணையர் க. சரவணன் கூறியது: பொதுவாக மிளகாய் தூளில் செங்கல் தூள், சுதான் சாயம் போன்ற பொருள்கள் கலக்கப்படுகின்றன. இதனால், வயிற்று உபாதைகள் முதல் குடல் புற்று நோய்கள் வரை ஏற்படுகிறது. மல்லித் தூளைப் பொருத்தவரையில் பழைய கொத்துமல்லியில் ஒரு வித கந்தகம் பூசி புதிய சரக்கு போன்று மாற்றப்படுகிறது. இந்த மல்லியை கையில் எடுத்து நசுக்கினால் சாயம் கைகளில் ஒட்டிக் கொள்ளும். இதேபோல, மஞ்சள்தூளில் ஒருவகை சுண்ணாம்பு கலக்கப்படுகிறது. இதனால் ரத்தசோகை, குறை பிரசவம், கை, கால் வாதம், மூளை பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படும். இத்தகைய பொருள்களை உணவு கலப்படத் தடைச்சட்டத்தின் படி அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். சில்லறையில் விற்பனை செய்யக் கூடாது. தற்போது எடுக்கப்பட்டுள்ள உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை கலப்படமானது என தெரியவந்தால் அந்த விற்பனை மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு மூன்று மாத சிறை தண்டனையும், ரூ.5,000 வரை அபராதமும் விதிக்கப்படும் என்றார் சரவணன்.
Last Updated on Monday, 21 December 2009 06:49
ரூ.7 கோடி செலவில் கழிவுநீர் இறைக்கும் நிலையம்
Saturday, 19 December 2009 12:18
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 19.12.2009 ![](/images/stories/new16.63.jpg)
|
|
|
|
Page 415 of 519 |