Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குப்பையை தானம் செய்வீர் : 'ராக்' புதிய திட்டம் துவக்க விழா

Print PDF

தினமலர் 17.12.2009

 

பழனி அடிவாரம் பகுதியில் குப்பைபோட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

Print PDF

தினமணி 17.12.2009

பழனி அடிவாரம் பகுதியில் குப்பைபோட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

பழனி டிச.16, பழனி அடிவாரம் பகுதி சாலைகளில் குப்பைகளைக் கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.

பழனி நகராட்சி அலுவலகத்தில் தைப்பூசம் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் வள்ளலார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், கோயில் இணை ஆணையர் இராஜமாணிக்கம், நகராட்சி ஆணையர் சித்திக் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் ஆட்சியர் பேசியதாவது: பழனி அடிவாரம் மற்றும் கிரிவீதி பகுதியில் பக்தர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் விதத்தில் சாலையில் குப்பைகளைக் கொட்டினால், சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும்.

மேலும் பழனி பேருந்து நிலையம் முதல் அடிவாரம் வரையில் 4 இடங்களில் கழிப்பிடங்கள் அமைக்கப்படும். சுகாதாரப் பணியில் புதன்கிழமை முதல் கூடுதலாக 50 பணியாளர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளன.

அடிவாரம் போக்குவரத்து காவல்நிலையம் அருகே சுற்றுலாத்துறை மூலம் ரூ. 49 லட்சம் செலவில் தகவல் மையம் அமைக்கப்படவுள்ளது. கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தினால், சுகாதாரத்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். உணவு விடுதிகளில் விலைப்பட்டியல் வைக்கப்படவேண்டும். ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை சாலையில் உள்ள பள்ளங்கள் விரைவில் சீர் செய்யப்படும். வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், பழனி அடிவாரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.

Last Updated on Thursday, 17 December 2009 08:42
 

காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க நடவடிக்கை- ஆட்சியர்

Print PDF

தினமணி 17.12.2009

காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க நடவடிக்கை- ஆட்சியர்

விருதுநகர், டிச.16: விருதுநகர் மாவட்டத்தில் சிக்குன் குனியா மற்றும் பருவ மாறுதலால் வரக்கூடிய காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் ஆட்சியர் சிஜி தாமஸ்வைத்யன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:

காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் எடுத்து வருகிறது. நகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிக்காக தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வார்டுகளை ஆறு பகுதிகளாகப் பிரித்து, தினமும் மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை துப்புரவுப் பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

நகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுக் கட்டடங்கள், செப்டிக் டேங்க் மற்றும் காற்றுப் போக்கு குழாய்களில் நைலான் வலைகளைக் கட்டி, கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் காலை,மாலையில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சுகாதார மேம்பாட்டுóக்குழு மூலம் நியமிக்கப்பட்டுள்ள தாற்காலிக பணியாளர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெறும். இதற்கு ஊராட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் அவர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திடட் அலுவலர் ராமமூர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் சரோஜா, மருத்துவத்துறை துணை இயக்குநர் வடிவேலன், பாலசுப்பிரமணியன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கதிர்வேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜராஜேஸ்வரி, அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 17 December 2009 08:39
 


Page 420 of 519