Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பண்ருட்டி குப்பைகளை கொட்ட இடம் தயார்: டி.ஆர்.ஓ.

Print PDF

தினமணி 11.12.2009

பண்ருட்டி குப்பைகளை கொட்ட இடம் தயார்: டி.ஆர்..

பண்ருட்டி, டிச. 10: பண்ருட்டி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட தனியாரிடமிருந்து நிலம் வாங்கப்பட உள்ளது. இதற்கான மதிப்பறிக்கை ஒரு வாரத்திற்குள் நகராட்சியிடம் அளிக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் புதன்கிழமை கூறினார்.

÷பண்ருட்டி விழமங்கலம் பகுதியில் வாந்தி-பேதி ஏற்பட்டதில் முதியவர் ரங்கநாதன் (65) செய்வாய்க்கிழமை இறந்தார். 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ÷

தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் நோய் பாதித்த விழமங்கலம் பகுதியை புதன்கிழமை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து கெடில நதி, சுடுகாடு ஆகிய பகுதிகளில் குப்பை கொட்டப்படும் இடங்களை அவர் பார்வையிட்டார். நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி உடனிருந்தார்.

÷அப்போது அப்பகுதியில் வசிப்பவர்களும், வண்ணான் துறையில் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்களும், குப்பைகளில் இருந்து வரும் துர் நாற்றத்தால் பாதிக்கப்படுவதாக புகார் கூறினர். ÷

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், ""பண்ருட்டியில் குப்பை கொண்ட இடம் இல்லை. நகரப் பகுதியில் உள்ள நகராட்சி இடத்தில் குப்பை கொட்டினால் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே சேமக்கோட்டையில் குப்பை கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனியார் வசமுள்ள அந்த நிலத்தை நகராட்சி வாங்க இருக்கிறது. இந்த நிலத்திற்கான மதிப்பீடு அறிக்கை தயாரித்து அளிக்கும்படி வருவாய்த் துறையிடம் கோரியுள்ளோம்'' என்றார். ÷அப்போது உடனிருந்த மாவட்ட வருவாய் அலுவலர், அந்த நிலத்துக்கான மதிப்பீடு அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தயாரித்து, அனுப்பி வைக்கப்படும் என்றார். மேலும் அந்த இடத்தை வாங்குவதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளும்படி அவர் நகராட்சி ஆணையரிடம் கூறினார்.

÷வட்டாட்சியர் ஆர்.பாபு, சுகாதார அலுவலர் பாலச்சந்திரன் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.

 

பாதாள சாக்கடைத் திட்டத்தில் மக்களை இணைப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Print PDF

தினமணி 10.12.2009

பாதாள சாக்கடைத் திட்டத்தில் மக்களை இணைப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி, டிச. 9: பாதாள சாக்கடைத் திட்டத்தில் மக்களை இணைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன் தொடக்கிவைத்தார்.

இம் மாநகராட்சியில் ரூ. 52 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் மூலம் 20,403 வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 16,485 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 3,918 இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டியுள்ளன.

இந்த இணைப்புகளை பொதுமக்களுக்கு கொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாதாள சாக்கடைத் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன் தலைமை வகித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்துப் பேசும்போது, வார்டுதோறும் நிகழ்ச்சி நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மாநகரப் பொறியாளர் கே.பி. ஜெய்சேவியர், செயற்பொறியாளர் வி. நாராயணன் நாயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர சுகாதார அலுவலர் கலுசிவலிங்கம், உதவி ஆணையர்கள் தெ. சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள், ஒவ்வொரு தெருவாகச் சென்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

Last Updated on Thursday, 10 December 2009 06:56
 

கூவத்தை சீரமைக்க முதல்கட்ட பணி

Print PDF

தினமலர் 09.12.2009

 


Page 425 of 519