Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திடீர் நகரில் மக்கள் சீரமைத்த பொதுக் கழிப்பறை திறப்பு

Print PDF

தினமணி 03.12.2009

திடீர் நகரில் மக்கள் சீரமைத்த பொதுக் கழிப்பறை திறப்பு

மதுரை, டிச. 2: ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்பு நிதியின் மூலம் மதுரை திடீர் நகரில் சீரமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையை மேயர் கோ. தேன்மொழி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.

ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை நகரில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, திடீர் நகரின் சுகாதாரச் சூழலைக் கருத்தில்கொண்டு, இப்பகுதி மக்களின் கோரிக்கை மாநகராட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீண்டகாலமாய் பயனற்றுக் கிடந்த பொதுக் கழிப்பறையை, திடீர் நகர் பகுதி பொதுமக்களோடு இணைந்து தென்மதுரை வட்டாரக் களஞ்சியம் புனரமைத்துள்ளது.

சமூகப் பங்கேற்புத் திட்டத்தின் மூலம், தென்மதுரை வட்டாரக் களஞ்சியத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 10 லட்சத்தில் கழிவுகளில் மண் புழு உரம் தயாரிப்புக் கூடம், குப்பை வண்டிகள் ஆகியவற்றோடு தற்போது பொதுக் கழிப்பறையும் சிறப்பான முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது.

கழிப்பறையைப் பேணுதல், தொடர் நிர்வாகம் ஆகியவற்றை திடீர் நகர் பகுதியை சார்ந்த களஞ்சிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் மேற்கொள்ளப்படும்.

திறப்பு விழாவில், துணை மேயர் மன்னன், மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின், தலைமைப் பொறியாளர் சக்திவேல், தானம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் மா.. வாசிமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Thursday, 03 December 2009 08:04
 

சிக்-குன் குனியா: பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்

Print PDF

தினமணி 03.12.2009

சிக்-குன் குனியா: பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்

தேனி, டிச.2: தேனி மாவட்டத்தில் சிக்-குன் குனியா, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.முத்துவீரன் உத்தரவு பிறப்பித்து கேட்டுக் கொண்டுள்ளார்.

தேனியில் புதன்கிழமை சிக்-குன் குனியா தடுப்பு நடவடிக்கைகள் குறிóத்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமைவகித்து அவர் பேசியதாவது:

மாவட்டத்தில் சிக்-குன் குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலாக உள்ளதாகக் கண்டறியப்பட்டு, சுகாதாரத் துறை மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுபடுகிறது.

இந் நோயைக் கட்டுப்படுத்த வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சிக்-குன் குனியைவைப் பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுவை ஒழிக்க சுகாதாரத் துறை அலுவலர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் இணைந்து அபேட் மருந்து தெளிக்க வேண்டும். புகை மருந்து அடிக்க வேண்டும்.

நகர் மற்றும் கிராமப்புறங்களில் குடிநீரை முறையாகச் சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான அளவு பிளிச்சிங் பவுடர் கலந்து குடிநீர் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் குடிநீர்க் குழாய்களில் தண்ணீரை குடித்து பிளிச்சிங் பவுடர் கலந்துள்ளதா என்பதை அறிய வேண்டும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, சிக்-குன் குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்களிடையே தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தினசரி மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பிரதி வாரம் புதன்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டத்திலும் தடுóப்பு நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும்.

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த வேண்டும். இதேபோல், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்த வேண்டும்.

பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு காய்ச்சல் வந்தால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் பணியில் இருக்க வேண்டும். சிக்-குன் குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளது என்றார் ஆட்சியர். கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் செல்லத்துரை, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவாஜி, மற்றும் ஆணையர்கள், செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 03 December 2009 08:03
 

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு மேலும் ரூ.26 கோடி

Print PDF

தினமணி 03.12.2009

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு மேலும் ரூ.26 கோடி

கடலூர், டிச. 2: கடலூர் நகர பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு மேலும் ரூ.26 கோடி வழங்கும் வகையில் திருத்திய மதிப்பீட்டுக்கு கடலூர் நகராட்சி புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

÷கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.40.40 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இத்திட்டம், 3 ஆண்டுகள் ஆகியும் முடிக்கப்படவில்லை. 60 சதம் பணிகள் முடிந்து விட்டதாக குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்து உள்ளது.

ஆனால், 50 சதம் பணிகள் கூட முடிவடையவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள், பள்ளங்கள் முறையாக மூடப்படாததாலும் சாலைகள் போடப்படாததாலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதாளச் சாக்கடை திட்டம் மீதே மக்களுக்கு பெரிதும் வெறுப்பு நிலவி வருகிறது.

÷இந்த நிலையில் அத் திட்டத்துக்கான மதிப்பீட்டை ரூ.66.03 கோடியாக உயர்த்தி அதாவது மேலும் ரூ.25.63 கோடி ஒதுக்க அரசு முடிவு செய்து உள்ளது.

இந்த முடிவுக்கு கடலூர் நகராட்சி புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. திருத்திய மதிப்பீட்டின்படி இத்திட்டத்தின் ஆண்டு பராமரிப்புச் செலவு 20.79 லட்சம். இத்திட்டத்தில் வீடுகளை இணைக்க வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மக்கள் வைப்புத் தொகை செலுத்த வேணடும்.

மாதம்தோறும் ரூ.70 முதல் ரூ.100 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வணிக நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டும். மாதக் கட்டணம் ரூ.140 முதல் ரூ. 1,200 வரை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

÷பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கு நகராட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆனந்த், சரளா, காங்கிரஸ் உறுப்பினர் சர்தார், அ.தி.மு.க. உறுப்பினர் குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 60 சதம் பணிகள் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்கள்.

முடிவுற்ற பணிகளே திருப்தியாக இல்லை. அப்படி இருக்க மீதம் உள்ள 40 சதம் பணிக்கு ரூ.26 கோடி கூடுதலாக ஒதுக்குவது முறையல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.

÷பதில் அளித்துப் பேசிய நகராட்சித் தலைவர் து.தங்கராசு, திட்டத்தில் பல மாறுதல்களை அரசு செய்து உள்ளது. ரூ.3 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது ரூ.12 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது. கழிவு நீரை நவீன முறையில் சுத்திகரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.

எனவே திட்ட மதிப்பீடு உயர்ந்து இருக்கிறது என்றார். ÷இதை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் ஆனந்த், சரளா ஆகியோர் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு, அவையின் முன்னால் அமர்ந்தனர். அவர்ளை தி.மு.. உறுப்பினர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இரு உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Thursday, 03 December 2009 08:00
 


Page 428 of 519