Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பன்றிக் காய்ச்சல்: 6 மாவட்டங்களில் வீடு வீடாக பரிசோதனை

Print PDF

தினமணி 30.11.2009

பன்றிக் காய்ச்சல்: 6 மாவட்டங்களில் வீடு வீடாக பரிசோதனை

சென்னை, நவ. 29: பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் வீடு வீடாக மருத்துவ சோதனை செய்ய பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 2,300 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

சென்னையில் மட்டும் 1,400 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய உள்ளனர். இதற்காக 20,000 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் எஸ். இளங்கோ தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு...: கோவை, ஊட்டியில் உள்ள சர்வதேச பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி தங்களது சொந்த நாட்டுக்குச் சென்று வருகின்றனர்.

இதையடுத்து, இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று தமிழகத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு குறித்த அறிவுறுத்தலை பொது சுகாதாரத் துறை அனுப்பியுள்ளது. அண்மையில் வெளிநாடு சென்று திரும்பிய பிறகு, காய்ச்சல் உள்பட பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ள ஊழியர்கள் குறித்து உடனடியாக பொது சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் டாக்டர் இளங்கோ.

 

பன்றிக் காய்ச்சல்: 6 மாவட்டங்களில் வீடு வீடாக பரிசோதனை

Print PDF

தினமணி 30.11.2009

பன்றிக் காய்ச்சல்: 6 மாவட்டங்களில் வீடு வீடாக பரிசோதனை

சென்னை, நவ. 29: பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் வீடு வீடாக மருத்துவ சோதனை செய்ய பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 2,300 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

சென்னையில் மட்டும் 1,400 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய உள்ளனர். இதற்காக 20,000 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் எஸ். இளங்கோ தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு...: கோவை, ஊட்டியில் உள்ள சர்வதேச பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி தங்களது சொந்த நாட்டுக்குச் சென்று வருகின்றனர்.

இதையடுத்து, இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று தமிழகத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு குறித்த அறிவுறுத்தலை பொது சுகாதாரத் துறை அனுப்பியுள்ளது. அண்மையில் வெளிநாடு சென்று திரும்பிய பிறகு, காய்ச்சல் உள்பட பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ள ஊழியர்கள் குறித்து உடனடியாக பொது சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் டாக்டர் இளங்கோ.

 

குப்பைகள் அகற்ற ஏற்பாடு: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை தினமும் 6 மணி நேரம் மூட முடிவு

Print PDF

தினமணி 26.11.2009

குப்பைகள் அகற்ற ஏற்பாடு: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை தினமும் 6 மணி நேரம் மூட முடிவு


சென்னை, நவ.25: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிப்பதற்காக, தினமும் 6 மணி நேரம் நுழைவு வாயில்களை மூட சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்தத் திட்டம் டிசம்பர் 1}ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பழம் மற்றும் மலர் அங்காடிகளிலிருந்து தினமும் 150 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் தேங்குகின்றன. இந்த குப்பைகள் சரிவர அப்புறப்படுத்தப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்தன. குப்பைகள் அகற்றப்படாததால், கடந்த சில தினங்களாக பெய்த மழையால், மழை நீர் தேங்கி வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தியது.

புகார்களைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டை ஆய்வு செய்த அதிகாரிகள், குப்பைகளை அகற்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் விக்ரம் கபூர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

மொத்த வியாபாரம் நடைபெறும் கோயம்பேடு மார்க்கெட்டில், நாள் முழுவதும் தொடர்ந்து வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால் குப்பைகள் அகற்றும் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாக அடிப்படையில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

எனவே, மார்க்கெட் வளாகத்தின் விற்பனை நேரத்தை முறைப்படுத்தி காய்கறி, பழம் மற்றும் மலர் அங்காடி வளாகங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஏற்றபடி குறிப்பிட்ட நேரத்தில் அந்தந்த நுழைவு வாயில்களை மூடி, குப்பைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி காய்கறி அங்காடி நுழைவு வாயில் எண் 7, 9, 14 ஆகியவை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மூடப்படும். காய்கறி அங்காடி நுழைவு வாயில் எண். 5, இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மூடப்படும்.

பழ அங்காடிகள் உள்ள நுழைவு வாயில் எண் 3, 4, 18 ஆகியவை இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மூடப்படும். இதுபோல் மலர் அங்காடியும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மூடி வைக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 26 November 2009 07:30
 


Page 430 of 519