Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை விற்றதாக 4 உணவகங்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினமணி 17.11.2009

சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை விற்றதாக 4 உணவகங்களுக்கு நோட்டீஸ்

மதுரை, நவ. 16: சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்ததாக, மதுரையில் உள்ள 4 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி சுகாதாரக்குழு உத்தரவிட்டது.

மதுரை மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவர் ராலியாபானு, உதவி ஆணையர் (தெற்கு) . தேவதாஸ் ஆகியோரது தலைமையிலான குழுவினர், நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, முந்திரித் தோப்பு அருகே வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க சுகாதாரக் குழு அறிவுறுத்தியது.

இக்குழு அழகர்கோவில் சாலை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள 4 உணவகங்களுக்குச் சென்று சமையல் செய்யும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.

அப்போது அந்த உணவகங்களில் சமையல் கூடங்கள், சுகாதாரமின்றி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 உணவகங்களுக்கும் நோட்டீஸ் வழங்கி, மேல்நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆய்வின்போது, உதவி நகர் நல அலுவலர் டாக்டர் யசோதாமணி, சுகாதாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் உணவு ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

Last Updated on Tuesday, 17 November 2009 07:19
 

நாமக்கல்லில் கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரம்

Print PDF

தினமணி 17.11.2009

நாமக்கல்லில் கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரம்

நாமக்கல், நவ. 16: மலேரியோ, சிக்குன்-குனியா உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தவும், கொசுக்களை ஒழிக்கும் வகையில் நாமக்கல் நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் சிக்குன்-குனியா காய்ச்சல் பரவ துவங்கியுள்ளதால் அனைத்து நகராட்சிகளையும் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தியுள்ளது.

இதன்படி, நாமக்கல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் நீர் தேங்கும் பகுதிகளில் அபேட் மருந்து தெளிக்கப்படுகிறது. இவைதவிர, கிணறுகள், மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள், வீடுகளில் கட்டப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி ஆகியவற்றிலும் அபேட் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மாலை நேரத்தில் வீதிகள் தோறும் நகராட்சி வாகனத்தின் மூலம் கொசு மருந்து புகை அடிக்கும் பணியும் நடைபெறுகிறது. நகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Last Updated on Tuesday, 17 November 2009 05:14
 

குன்னூர் நகராட்சியில் சீரமைப்பு பணிகள்

Print PDF

தினமலர் 16.11.2009

 


Page 441 of 519