Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பண்ருட்டி நகரில் தீவிர பராமரிப்புப் பணி

Print PDF

தினமணி 10.11.2009

பண்ருட்டி நகரில் தீவிர பராமரிப்புப் பணி

பண்ருட்டி,நவ. 9: கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளை பண்ருட்டி நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு, பராமரிப்புப் பணிகளை தீவிரப்படுத்தினார்.

இடைவிடாத பருவ மழையால் பண்ருட்டி நகரில் பல்வேறு இடத்தில் தண்ணீóர் தேங்கியுள்ளது. நீர் தேங்கிய பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் இருந்த அடைப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.

மழை நீர் தேங்கி நின்ற அம்பேத்கர் நகர், சாமியார் தர்கா, மேலப்பாளையம, திருவதிகை உள்ளிட்ட பல பகுதிகளை நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினார். அதிமுக கவுன்சிலர்கள் எம்.எம்.கமலக்கண்ணன், எஸ்.பி.ரமேஷ், கார்த்திக் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 10 November 2009 07:38
 

நெல்லை மாநகர் பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்க 25 ஆயிரம் கிலோ "ப்ளிச்சிங் பவுடர்

Print PDF

தினமணி 10.11.2009

நெல்லை மாநகர் பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்க 25 ஆயிரம் கிலோ "ப்ளிச்சிங் பவுடர்

திருநெல்வேலி, நவ. 9: மழை, வெள்ளத்தால் சுகாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு 25 ஆயிரம் கிலோ "ப்ளிச்சிங் பவுடர்' தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மக்களை மீட்பதற்கு, திருநெல்வேலி மாநகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன் தலைமையில் வெள்ள மீட்பு மற்றும் சுகாதாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு மாநகர்ப் பகுதி தாமிரபரணியில் அதிக வெள்ளம் ஏற்பட்டால் சிந்துபூந்துறை, வேடுவர் காலனி, கணேசபுரம், பாரதிநகர், கைலாசபுரம், மீனாட்சிபுரம் கிழக்கு, புளியந்தோப்பு தெரு, கொக்கிரகுளம், சி.என். கிராமம், மேலநத்தம் உள்ளிட்ட 26 பகுதிகள் பாதிக்கப்படும் என கண்டறிந்துள்ளது.

இதேபோல, அதிக மழை பெய்தால் பாதிக்கப்படும் என அழகநேரி, பாலபாக்கியாநகர், திம்மராஜபுரம், சக்திநகர், கோட்டூர் ரோடு, மனகாவலம்பிள்ளைநகர், சாந்திநகர், சேவியர் காலனி உள்பட 16 பகுதிகளை கண்டறிந்துள்ளது.தாமிரபரணியில் அதிக வெள்ளம் ஏற்படும்போது பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்குவதற்காக, அந்தந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளை மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது. திங்கள்கிழமை தாமிரபரணியில் ஏற்பட்ட அதிக வெள்ளத்தில், இந்த பள்ளிகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் அங்கு மக்களுக்கு தேவையான உணவு,மருத்துவ வசதிகளை செய்துகொடுப்பதற்கு மாநகராட்சி முழு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதேபோல மழை, வெள்ளச் சேதங்களில் சிக்கும் மக்களை மீட்பதற்கு, மாநகராட்சி ஊழியர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தினால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படாத வகையில் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக 25 ஆயிரம் கிலோ ப்ளீச்சிங் பவுடரும், 400 லிட்டர் "பினாயிலும்', 10 ஆயிரம் கிலோ சுண்ணாம்பு பவுடரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுகாதாரக் குழு மாநகராட்சி சுகாதார அலுவலர் கலுசிவலிங்கம் தலைமையில் செயல்படுகிறது. அவ்வபோது அந்தந்தப் பகுதி மாநகராட்சி அதிகாரிகள், மழை, வெள்ளச் சேதங்களை கணக்கீட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுவதற்கு, அந்தந்த மண்டல உதவி ஆணையர் தலைமையில் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்துக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Last Updated on Tuesday, 10 November 2009 07:35
 

54 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்: மேயர் மா. சுப்பிரமணியன்

Print PDF

தினமணி 10.11.2009

54 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்: மேயர் மா. சுப்பிரமணியன்

சென்னை, நவ. 9: சென்னையில் மழை கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 54 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன; இம் முகாம்களில் இதுவரை 10 ஆயிரத்து 249 பேருக்கு மருத்துவப் பரிசோதனை அளிக்கப்பட்டது என்று மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வட சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, திங்கள்கிழமை ஆய்வு செய்தபின் அவர் கூறியதாவது:

மாநகராட்சியின் 10 மண்டலங்களிலும் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. போஜராஜ நகர், கொண்டித்தோப்பு, காந்தி நகர், டி.பி. சத்திரம், இந்திரா காந்தி நகர், கணேசபுரம் உள்ளிட்ட 30 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இம் முகாம்களில் 75 மருத்துவர்கள், 50 துணை மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். சளி, இருமல், தோல், ஒவ்வாமை, காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இம் முகாம்களில் 6,812 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதவிர தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடுவீடாகச் சென்று கடந்த 2 நாள்களில் மட்டும் இதுவரை 78 ஆயிரத்து 808 குளோரின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன.சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.இப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணியில் 130 புகை பரப்பும் இயந்திரங்களும், 154 தெளிப்பான்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மழைநீர் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த, இதுவரை 2.70 லட்சம் பேருக்கு மாநகராட்சி சார்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.சென்னையில் மழையால் சேதமுற்ற 366 சாலைகளில் 7,355 சதுர மீட்டர் அளவுக்கு சீரமைக்கப்பட்டுள்ளது.தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிக்காக 123 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் மேயர் மா.சுப்பிரமணியன்.

Last Updated on Tuesday, 10 November 2009 09:02
 


Page 451 of 519