Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருப்பூர் மாநகராட்சி பாறைக்குழியை பராமரிக்க கண்கானிப்பு குழு அமைப்பு

Print PDF

தினமலர் 05.11.2009

 

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 3 நகராட்சிகள் தேர்வு

Print PDF

தினமணி 5.11.2009

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 3 நகராட்சிகள் தேர்வு

திருவண்ணாமலை, நவ.4: திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டத்தின் கீழ் செய்யாறு, ஆரணி, வந்தவாசி நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பிரசவம், அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் சோதனை செய்யப்படுகின்றன.

நகரங்களில் அரசு மருத்துவமனைகள் இருந்தாலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது போன்ற சிகிச்சை கிடைப்பதில்லை. எனவே ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை வருவாய் மாவட்டம், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட செய்யாறு, ஆரணி, வந்தவாசி நகராட்சிகளில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படுகின்றன.

இதுதொடர்பாக செய்யாறு சுகாதார துணை இயக்குநர் டாக்டர் தேவபார்த்தசாரதி கூறியது:

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு டாக்டர், 5 செவிலியர்கள், மருந்தாளுநர், லேப் டெக்னிஷியன், துணை சுகாதார செவிலியர் என மொத்தம் 12 பேர் நியமிக்கப்படுவர்.

தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் மூலம் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான ஊதியம், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் தருவிக்கப்படும் என்றார் தேவபார்த்தசாரதி.

Last Updated on Thursday, 05 November 2009 06:34
 

வீடுகள்தோறும் தனிநபர் கழிப்பறை - ஆட்சியர்

Print PDF

தினமணி 5.11.2009

வீடுகள்தோறும் தனிநபர் கழிப்பறை - ஆட்சியர்

நாமக்கல், நவ. 4: கிராமப்புற வீடுகள் தோறும் தனிநபர் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளை ஆட்சியர் சகாயம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் கூறியது: திறந்த வெளியில் மலம் கழிப்பதாலேயே பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன.

குறிப்பாக கொசு உற்பத்தியை அதிகமாகி காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டிய நிலையுள்ளது. தொற்று நோய்களில் 30 முதல் 40 சதம் திறந்த வெளியில் மலம் கழிப்பதாலேயே பரவுகிறது.

இதனைத் தவிர்க்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். தனிநபர் கழிப்பறை அவசியத்தை உணர்ந்து அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக அரசு மானியம் வழங்குகிறது. இதனை பயன்படுத்தி குக்கிராமங்களிலும் வீடுகள் தோறும் கழிப்பறை அமைக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகள், 15 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடை செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர்.

 


Page 459 of 519