Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட்டுக்கு தடை

Print PDF

தினமலர் 24.09.2009

 

ரூ. 20 லட்சம் செலவில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் கட்டிட பணி துணை மேயர் தொடங்கி வைத்தார்

Print PDF

மாலைமலர் 24.09.2009

ரூ. 20 லட்சம் செலவில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் கட்டிட பணி துணை மேயர் தொடங்கி வைத்தார்

கோவை, செப். 24-

கோவை மாநகராட்சி 16-வது வட்டம் பீளமேடு பி.எஸ்.ஜி.வி. நகரில் சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிட பணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

மாநகராட்சி துணை மேயர் கார்த்திக் கட்டிட பணியை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம். சாமி, உதவி பொறியாளர் ஹேமலதா, தொழில் நுட்ப உதவியாளர் தியாகராஜன், சுகாதார ஆய்வாளர் முருகா, தி.மு.. வட்ட செயலாளர் ஆர்.செல்வராஜ், போர்வாள் ராஜேந்திரன், ஆர். மணிகண்டன், நாராயணன்.

கவுன்சிலர் தன்ராஜ் மற்றும் விஸ்வநாதன், பி.கே. முருகேசன், ராமதாஸ், பூவை ரவி, கமல் மனோகரன், .எஸ். நடராஜ், எம்.செல்வராஜ், வாசு, எல்.ஜி. தர்மராஜ், கா.சம்பத், சந்திரன், அண்ணா நகர் கருப்புசாமி, ரங்கத்துரை, முருகேசன் மற்றும் வார்டு பொதுமக்கள் ஏராளமானபேர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 24 September 2009 11:48
 

ஹோட்டல்களில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

Print PDF

தினமணி 24.09.2009

ஹோட்டல்களில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, செப். 23: சுகாதாரத் துறையினர் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஹோட்டல்களில் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல்களில் வட்டாட்சியர் ப.அன்பரசன் தலைமையில் நகராட்சி செயல் அலுவலர் சேகர், சுகாதார ஆய்வாளர் மகாலிங்கம், மருத்துவ அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

தியாகதுருகத்தில் பேருராட்சி செயல் அலுவலர் பி.பழனி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Last Updated on Thursday, 24 September 2009 06:58
 


Page 471 of 519