Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சென்னையில் கால்வாய் தூர்வார ரூ. 4 கோடி: கருணாநிதி உத்தரவு

Print PDF

தினமணி 12.09.2009

சென்னையில் கால்வாய் தூர்வார ரூ. 4 கோடி: கருணாநிதி உத்தரவு

சென்னை, செப். 11: சென்னையில் கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதற்காக, ரூ. 4 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

""பருவ மழை தொடங்குவதற்கு முன்பு, சென்னைப் பெருநகர் பகுதிகளில் அமைந்துள்ள நீர்வழிப் பாதைகள் சீரமைக்க ரூ. 4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வடக்கு பக்கிங்காம் கால்வாய் ரூ. 72 லட்சத்திலும், மத்திய பக்கிங்காம் கால்வாய் ரூ. 43 லட்சத்திலும், தெற்கு பக்கிங்காம் கால்வாய் ரூ. 61 லட்சத்திலும், கூவம் ஆறு ரூ. 17 லட்சத்திலும் தூர்வாரப்படுகிறது.

மேலும், ஓட்டேரிநல்லா தூர்வாரும் பணிக்காக ரூ. 28 லட்சமும், விருகம்பாக்கம் - அரும்பாக்கம் பகுதிகளில் மழை நீர்வடிகால்கள் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ. 24 லட்சமும், திருவள்ளூர் மாவட்டத்தில் குசஸ்தலையாறு படுகை பிரிவு சீரமைப்புப் பணிகளுக்கு ரூ. 1.25 கோடியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு கீழ்வடிநிலப் பிரிவு சீரமைப்புக்கு ரூ. 20 லட்சமும், கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்டப்பகுதியின் சீரமைப்புக்கு ரூ. 9 லட்சமும் என மொத்தம் 91 பணிகளுக்கு ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பணிகளை நிறைவேற்றுதற்காகத் திறந்தநிலை ஒப்பந்தப் புள்ளி கோரும் முறையில் ஒப்பந்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிகள் தரமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காகப் பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளரால் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் கண்காணிக்கப்படும்'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

z

 

வெளி மாநிலங்களில் இருந்து கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை

Print PDF

தினகரன் 11.09.2009

 

பாண்டிச்சேரியில் கடற்கரை தூய்மை தினம்

Print PDF

தினமலர் 11.09.2009

 


Page 483 of 519