Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

"தினமணி' செய்தி எதிரொலி: சிந்தாதிரிப்பேட்டை சுகாதார மேம்பாட்டுக்கு ரூ.5 லட்சத்தில் அவசரப் பணி

Print PDF

தினமணி 25.08.2009

"தினமணி' செய்தி எதிரொலி: சிந்தாதிரிப்பேட்டை சுகாதார மேம்பாட்டுக்கு ரூ.5 லட்சத்தில் அவசரப் பணி"


சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சுகாதார சீர்கேடுகள் குறித்து "தினமணி'யில் திங்கள்கிழமை வெளியான செய்தியைத் தொடர்ந்து மேயர் மா.சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி
சென்னை, ஆக. 24: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சுகாதார சீர்கேடுகள் குறித்து "தினமணி'யில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, ரூ.5.76 லட்சத்தில் அவசரப் பணிகளை மேற்கொள்ள மேயர் மா. சுப்பிரமணியன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

முதல்வர் கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை வடக்கு கூவம் ஆறு, நெடுஞ்செழியன் நகர் ஆகிய பகுதிகளில் அள்ளப்படாத குப்பைகள், தெருக்களில் ஓடும் கழிவு நீர் ஆகிய சுகாதார சீர்கேடுகள் குறித்த செய்தி "தினமணி'யில் திங்கள்கிழமை வெளியானது.

இச்செய்தியைத் தொடர்ந்து சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு அந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று சுகாதார சீர்கேடுகளை ஆய்வு செய்தனர்.

சென்னை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் அங்கு ஏற்பட்ட கழிவு நீர் அடைப்புகளை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர்.

தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் நீல் மெட்டல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கொசு மருந்து தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் அடிப்பது போன்ற பணிகள் நடைபெற்றதோடு, 2 மருத்துவக் குழுக்கள் மூலம் மருத்துவ முகாமும் நடைபெற்றது.

தெருக்களில் கிடந்த கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டன. நெடுஞ்செழியன் நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் குப்பைகளை அகற்றி, ரூ.5.76 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்க மேயர் உடனடியாக உத்தரவிட்டார்.

மேலும் பல நாட்களாக குப்பைகள் தேங்கிக் கிடந்ததற்காக, நீல் மெட்டல் நிறுவன ஊழியர்களிடம் அதிருப்தி தெரிவித்த மேயர் சுப்பிரமணியன், அந்த வார்டு மாநகராட்சி கவுன்சிலரிடம், குப்பை அள்ளும் பணிகளை நாள்தோறும் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

"தினமணி' செய்தியைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த உடனடி நடவடிக்கைகளால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

எனினும் குப்பைகளை அள்ளுவதும், கழிவு நீர் அடைப்புகளை சரி செய்வதும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Last Updated on Tuesday, 25 August 2009 06:25
 

ரூ.13 கோடி செலவில் தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரி நவீனமாகிறது

Print PDF

மாலை மலர் 24.08.2009

ரூ.13 கோடி செலவில் தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரி நவீனமாகிறது: மு..ஸ்டாலின் 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரி ரூ.13 கோடி செலவில் நவீனப்படுத்தப்படுகிறது. 27-ந் தேதி துணை முதல்- அமைச்சர் மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

இதுபற்றி மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரியில் தற்போது 100 படுக்கைகள் உள்ளது. இந்த ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்து நவீனப்படுத்தப்பட உள்ளது. ரூ.13.53 கோடி செலவில் புதியகட்டிடங்கள் கட்டப்படுகிறது.

இதற்கான விழா தண்டையார் பேட்டை ஆஸ்பத்திரி முன்பு 27-ந் தேதி மாலையில் நடக்கிறது. துணைமுதல்- அமைச்சர் மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

அதே நிகழ்ச்சியில் வடசென்னையில் ரூ.12 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள், சத்துணவு கூடங்கள் உள்பட 80 புதிய கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.

இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

 

பெரியகுளம் நகராட்சியில் நவீன இறைச்சிக்கூடம்

Print PDF

தினமலர் 24.08.2009

 


Page 498 of 519