Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

துப்புரவு பணியாளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம் வெளியீடு

Print PDF
தினமலர்                30.05.2013

துப்புரவு பணியாளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம் வெளியீடு


சிவகங்கை:""இளையான்குடி பேரூராட்சியில், துப்புரவு பணியாளர் காலிபணியிடங்களுக்கு, பதிவு மூப்பு விபரம் வெளியிடப்படும்,'' என, வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் தெரிவித்தார். கல்வி தகுதி, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருத்தல் அவசியம். வயது: குறைந்த பட்சம் 1.1.2013ல் 18 ஆகவும், அதிக பட்சம் 1.1.2013ல் பகிரங்க போட்டியினர் 30ம், பிற்பட்ட, மிக பிற்பட்டோர் 32, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 35க்கு மிகாமல் இருக்க வேண்டும். இனச்சுழற்சி, மிக பிற்பட்டோருக்கான முன்னுரிமையற்றோர். இத்தகுதியுள்ள பதிவுதாரர்கள், மே 31 அன்று, காலை 10 மணிக்கு, கல்விசான்று, ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் நேரில் வந்து, பதிவு மூப்பு விபரங்களை தெரிந்துகொள்ளலாம்,' என்றார்.
 

பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு முகாம்

Print PDF
தினமணி         30.05.2013

பிளாஸ்டிக் குறித்த  விழிப்புணர்வு முகாம்


போளூர் பேரூராட்சியில் அமைதி அறக்கட்டளை மற்றும் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

 முகாமுக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் பாபு தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வன், செயல் அலுவலர் நிஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைதி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ராஜாராம் பேசும்போது, "புற்றுநோய், குழந்தை பிறப்புக் கோளாறு, மரபுத் தன்மை மாற்றம், மூச்சுக் குழாய் அடைப்பு, கண்களில் எரிச்சல், தோல் நோய்கள், சுவாச சிக்கல் என பல்வேறு நோய்களுக்கு காரணமாக பிளாஸ்டிக் விளங்குகிறது. இதனால் துணிப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்.

 இளநிலை உதவியாளர் பன்னீர்செல்வம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயவேல், கவுன்சிலர்கள் சுந்தர், பார்த்திபன், லட்சுமி ஏழுமலை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

துப்புரவுப் பணியாளர் பணியிடம்: பதிவு மூப்பு பட்டியலைச் சரிபார்க்க நாளை கடைசி நாள்

Print PDF
தினமணி         30.05.2013

துப்புரவுப் பணியாளர் பணியிடம்: பதிவு மூப்பு பட்டியலைச் சரிபார்க்க நாளை கடைசி நாள்


இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ள துப்புரவுப் பணியாளர் காலி பணியிடத்துக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தகுதியுடையோர் மே 31-ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு, பதிவு மூப்பு பட்டியலைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கி. தொண்டீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 


Page 57 of 519