Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இலவச சீருடை

Print PDF
தினமணி         08.05.2013

நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இலவச சீருடை


கடலூர் நகராட்சியில், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை மற்றும் உபகரணங்களை, தனியார் அமைப்பு, இலவசமாக வழங்கியுள்ளது.

வாலாஜா அக்ரோ நிறுவனம் இத்தொழிலாளர்களுக்கு சீரூடை, கையுறை, மண்வெட்டி உள்ளிட்ட துப்புரவுப் பணிக்குத் தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கியுள்ளது. கடலூர் நகராட்சியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் குமரகுருபரன் இதை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

வாலாஜா அக்ரோ நிறுவன பிரதிநிதிகள் பாலசுப்பிரமணியன், உத்தரவேல், கார்த்திகேயன், நகராட்சி துப்புரவு உதவி ஆய்வாளர் எஸ்.பாக்கியநாதன், மேற்பார்வையாளர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

செங்கத்தில் நாய்களுக்கு கருத்தடை

Print PDF
தினமணி        07.05.2013

செங்கத்தில் நாய்களுக்கு கருத்தடை


செங்கம் பேரூராட்சிப் பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களுக்கு திங்கள்கிழமை கருத்தடை செய்யப்பட்டது.

செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட 18-வார்டுகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகாமாக இருந்து வந்தது. இதனால் இந்த நாய்களை பிடித்து அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில், செங்கம் துக்காப்பேட்டை, புதிய பஸ்நிலையம், சந்தைமேடு, பஜார் வீதி, ராஜ வீதி, பெருமாள் கோயில் தெரு, மில்லத் நகர், தளவாநாய்க்கன்பேட்டை ஆகிய பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களை பேரூராட்சிப் பணியாளர் பிடித்து கருத்தடை செய்தனர்.

மேலும் தொடர்ந்து நாய்கள் பிடிக்கும் பணி நடைபெறும் என்றும், சொந்த நாய் வைத்திருப்பவர்கள் பேரூராட்சியில் தடுப்பூசி போட்ட சான்றுகளை காட்டி உரிமம் பெறவேண்டுமெனவும் செயல் அலுவலர் தெரிவித்தார்.
 

மம்சாபுரம் பேரூராட்சியில் 38 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Print PDF
தினமணி          06.05.2013

மம்சாபுரம் பேரூராட்சியில் 38 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை


ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நாய்களுக்கான சிறப்பு கருத்தடை சிகிச்சை முகாமில் 38 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பேரூராட்சி தலைவர் ஆர்.ராஜா, துணைத் தலைவர் வழக்குரைஞர் பி.அய்யனார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மம்சாபுரம் பேரூட்சியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, செயல் அலுவலர் பா.ஜெயச்சந்திரசேகரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் உதவியுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த முகாமில் 38 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் சுப்பிரமணி, துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் ஆகியோர் அறுவை சிகிச்சை முகாமை நடத்தினர்.
 


Page 60 of 519