Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வெளியேறும் நச்சு வாயு அபாயகரமானது குப்பைகளை எரித்தால் ஹார்ட் அட்டாக் வரும் இதய சிகிச்சை நிபுணர் ஷாக் தகவல்

Print PDF
தமிழ் முரசு                  29.04.2013

வெளியேறும் நச்சு வாயு அபாயகரமானது குப்பைகளை எரித்தால் ஹார்ட் அட்டாக் வரும் இதய சிகிச்சை நிபுணர் ஷாக் தகவல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: குப்பைகளை எரிப்பதால் உருவாகும் நச்சுவாயு, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் ஒவ்வொரு நாளும் சராசரியாக

4500 டன் வரை குப்பைகள் சேருகின்றன. குப்பைகள் சேரும் இடங்களில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு சில நாட்கள் வரையும் தீ எரியும் நிலையும் காணப்படுகிறது. குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் நச்சுவாயுவால் மாரடைப்பும் வரும்
என்ற அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் சரோஜா பாரதி. இந்திய வம்சாவளியை சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர். சென்னையில் இதய நோய் சிகிச்சை அரங்கு திறப்பு விழா ஒன்றுக்கு வந்துள்ள இவர், கடந்த 1970&ம் ஆண்டில் இருந்து தனது மருத்துவ அனுபவங்கள், இதய அறுவை சிகிச்சைகள், தான் சந்தித்த சிக்கலான அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு, அதை இதய நோய் சிகிச்சை அரங்கு நிர்வாகிகளிடம் அளித்துள்ளார்.

புத்தகத்தில் தான் எழுதியிருப்பது குறித்து சரோஜா பாரதி கூறியதாவது:

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் மாசுகளால் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அதே போல குப்பைகளும் மக்களுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன.

குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் நச்சுவாயு உடனடியாக ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. இந்தியாவில் இதயம் தொடர்பாக பல்வேறு விதமான நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதய நோய்களால் ஏற்படும்

இறப்புகளும் அதிகளவில் உள்ளன. எனவே குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும். குப்பைகளை எரிப்பது மிகமிக ஆபத்தானது.

 

தெருநாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு!

Print PDF
தினமணி        21.04.2013

தெருநாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு!


மஞ்சூர் பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்களை "ஐபான்' தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.

மஞ்சூர் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன. தெருக்களில் சுற்றித் திரியும் இவைகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இப்பகுதியில் காட்டுப் பன்றிகளின் தொல்லையும் அதிக அளவில் உள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் கொட்டப்படும் உணவுக் கழிவுகள், கோழிக் கடைகளில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் ஆகியவற்றை உண்ண வரும் காட்டுப் பன்றிகள், தெருநாய்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது.

உணவுக்காக குடியிருப்புப் பகுதிக்கு வரும் காட்டுப் பன்றிகளும், தெருநாய்களும் மோதிக் கொள்வதால் குழந்தைகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள்களாக கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து தெருநாய்களை பிடித்து அவைகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. "ஐபான்' அமைப்பைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர்கள், மஞ்சூர் பகுதியில் சுற்றித் திரிந்த 25-க்கும் மேற்பட்ட தெருநாய்களை பிடித்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர்.
Last Updated on Tuesday, 23 April 2013 07:19
 

திருப்பத்தூர் பேரூராட்சி கடைகளில் உணவுப் பொருள்கள் ஆய்வு

Print PDF
தினமணி        18.04.2013

திருப்பத்தூர் பேரூராட்சி கடைகளில்  உணவுப் பொருள்கள் ஆய்வு


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியில் கடைகளில் உணவுப் பொருள் பாதுகாப்பு கருதி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களால் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தூர் பேரூராட்சிகுள்பட்ட கடைவீதிகள் மற்றும் பேருந்து நிலைய வணிக வளாகங்களிலும் உணவுப் பாதுகாப்பு சட்டப்படி காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் பற்றிய ஆய்வினை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் மரு. அருள்நம்பி தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ம. சுரேஷ், ஆர்.ஜெய்சங்கர் ஆகியோர் மேற்கொண்டனர். இவ்ஆய்வின் போது கடைகளில் போலியாகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருள், உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி, முதலியன குறிப்பிடப்பட்டுள்ளனவா என்று சரிபார்த்தனர். அவ்வாறு இல்லாத உணவுப் பொருள் மற்றும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.5 ஆயிரம் மதிப்பிலான உணவு பண்டங்கள், பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

ஆய்வின் போது பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பாலச்சந்திரன் உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள் பணியினை மேற்கொண்டனர். மேலும் அனைத்துக் கடைகளுக்கும் உணவுப் பொருள்களின் தரமும் மற்றும் சுகாதார முறையில் விற்பனை மேற்கொள்ளுதல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது.
 


Page 62 of 519