தினமலர் 18.04.2013
மாமல்லபுரத்தில் தெரு நாய்கள் சுற்றிவளைப்பு
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், தெரு நாய்களை, பேரூராட்சி நிர்வாகம் பிடித்தது.
மாமல்லபுரம், சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவ கலைச் சின்னங்களை கண்டுகளிக்க, சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் சென்றுவரும் பகுதிகளில், ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன.
பயணிகளை கண்டதும், அவை குரைத்து விரட்டி செல்கின்றன. அவர்கள் அலறி ஓடுகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுகின்றன.
நாய் தொல்லை அதிகரித்துவந்த நிலையில், அனைத்து பேரூராட்சிகளிலும், நாய்களை பிடிக்க, பேரூராட்சிகள் இயக்குனரகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், "புளூ கிராஸ்' அமைப்பினருடன் சேர்ந்து, நேற்று நாய்களை பிடித்தனர்.
இரண்டு நாட்களில், 56 நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை அறுவை சிகிச்சைக்காக, சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன என, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் தெரு நாய்கள் சுற்றிவளைப்பு
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், தெரு நாய்களை, பேரூராட்சி நிர்வாகம் பிடித்தது.
மாமல்லபுரம், சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவ கலைச் சின்னங்களை கண்டுகளிக்க, சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் சென்றுவரும் பகுதிகளில், ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன.
பயணிகளை கண்டதும், அவை குரைத்து விரட்டி செல்கின்றன. அவர்கள் அலறி ஓடுகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுகின்றன.
நாய் தொல்லை அதிகரித்துவந்த நிலையில், அனைத்து பேரூராட்சிகளிலும், நாய்களை பிடிக்க, பேரூராட்சிகள் இயக்குனரகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், "புளூ கிராஸ்' அமைப்பினருடன் சேர்ந்து, நேற்று நாய்களை பிடித்தனர்.
இரண்டு நாட்களில், 56 நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை அறுவை சிகிச்சைக்காக, சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன என, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் செல்வராஜ் தெரிவித்தார்.