Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

6 மாநகராட்சி ஆணையர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Print PDF
தினமணி       04.04.2013

6 மாநகராட்சி ஆணையர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பாக தில்லி, பெங்களூர், சென்னை, ஆக்ரா, ஜெய்ப்பூர், பரீதாபாத் ஆகிய 6 மாநகராட்சி ஆணையர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில், ""60 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, நாள்தோறும் 15,342 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இவற்றில் 9,205 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 6,137 டன் (40 சதவீத) பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் சிதறிக் கிடக்கின்றன'' என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ""இந்தப் புள்ளிவிவரங்கள் அச்சம் தருவதாக உள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள் இந்தத் தலைமுறையை மட்டுமின்றி எதிர்வரும் தலைமுறைகளையும் பாதிக்கக் கூடியவை என்பதால் இவ்விஷயத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட வேண்டியுள்ளது. முதற்கட்டமாக, தில்லி, பெங்களூர், சென்னை, ஆக்ரா, ஜெய்ப்பூர், பரீதாபாத் ஆகிய 6 நகரங்களில் பிளாஸ்டிக் கழிவு அகற்றும் திட்டத்தை நாங்கள் பரிசீலிக்க வேண்டியுள்ளது'' என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக பதிலளிக்குமாறு இந்த நகரங்களின் ஆணையர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
 

உடுமலை நகரில் ரூ.56 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசு அனுமதி

Print PDF
தினமணி       04.04.2013

உடுமலை நகரில் ரூ.56 கோடியில்  பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசு அனுமதி


உடுமலை நகரில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

உடுமலை நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்காக உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டி கிராமத்தில் 2.50 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. திட்டத்தை செயல்படுத்த ரூ.39 கோடி செலவாகும் என அப்போது கணக்கிடப்பட்டது. கட்டுமான பொருட்கள் விலையேற்றம் மற்றும் நிர்வாகத்தில் காலதாமதம் என பல்வேறு காரணங்களால் திட்ட மதிப்பீடு படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.56 கோடிக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டுகள் மற்றும் இணைப்புக் கட்டணம் வசூலிக்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதன்படி குடியிருப்புகள், வணிக அடிப்படையிலான கட்டடங்கள் ஆகியவற்றிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து கட்டண வசூலில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.

பாதாளச் சாக்கடை திட்டம் வரும் முன்னரே கடந்த 5 ஆண்டுகளாக டெபாசிட்டுகள் வசூலிக்கப்பட்டு வந்ததால் மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டு வந்தது. ஆனாலும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து மானியங்கள் பெறப்படும் என நகராட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நிர்வாக அங்கீகாரம் கொடுத்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாக அங்கீகாரத்தை குடிநீர் வடிகால் வாரிய உதவிக் கோட்ட பொறியாளர் சுப்பிரமணியம், உடுமலை நகராட்சி ஆணையர் பொ.கண்ணையாவிடம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது (படம்). உடுமலை நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 

பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் விவகாரம்: சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு நோட்டீசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Print PDF
தினத்தந்தி                04.04.2013

பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் விவகாரம்: சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு நோட்டீசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நாடு முழுவதும் தினமும் 15 ஆயிரத்து 343 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில் 40 சதவீத கழிவுகள் சேகரிக்கப்படுவது இல்லை’ என்று கூறி இருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:–

இந்த புள்ளி விவரம் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள், இந்த தலைமுறையை மட்டுமின்றி அடுத்த தலைமுறையையும் பாதிக்கும். எனவே, நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில், டெல்லி, பெங்களூர், சென்னை, ஆக்ரா, ஜெய்ப்பூர், பரிதாபாத் ஆகிய 6 மாநகராட்சிகளில் பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியை ஆய்வு செய்வோம். மேற்கண்ட 6 மாநகராட்சிகளின் கமிஷனர்களும் 4 வார காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீசு அனுப்பப்படுகிறது. அதுபோல், மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும் 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை மே 3–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 


Page 69 of 519