Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 573 வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து. பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா தகவல்

Print PDF
தினத்தந்தி        04.04.2013

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 573 வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து. பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா தகவல்


நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதற்காக பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து போது மக்களிடமும் பள்ளி மாணவர்களிடமும் வணிகர்களிடமும், வியாபாரிகளிடமும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும் கடைகள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பிளாஸ்டிக் கை பைகளை பயன்படுத்துவதற்கும் நகராட்சி சார்பில் ஈ.ஐ.டி.பாரி மற்றும் லோட்டே மிட்டாய் தொழிற்சாலை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா தலைமை தாங்கி பேசியதாவது:–

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் 573 வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளிலிருந்து பிளாஸடிக் பொருட்களை தரம் பிரித்து பிளாஸ்டிக் சாலை மற்றும் மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே விழிப்புணர்வு


இது மட்டுமின்றி ஈ.ஐ.டி. பாரி சார்பில் 10 ஆயிரம் துணி பைகள் தயார் செய்யப்பட்டு இலவசமாக பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது. இவ்வாறு பேசினார் இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு துணிப்பைகளை வழங்கினார். பின்னர் ஈ.ஐ.டி. பாரி துணை பொது மேலாளர் சுனில்வர்கீஸ், லோட்டே மிட்டாய் தொழிற்சாலை மேலாளர் விஜயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் கவுன்சிலர்கள் கலியபெருமாள், வெங்கடேசன், தலைமை ஆசிரியர் அதிசயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மடிவில் துப்புரவு அலுவலர் பரமசிவம் நன்றி கூறினார்.
 

வைகை ஆற்றில் "ஆயில் புல்லிங்' மாநகராட்சியின் அடுத்த "அஸ்திரம்'

Print PDF
தினமலர்        03.04.2013

வைகை ஆற்றில் "ஆயில் புல்லிங்' மாநகராட்சியின் அடுத்த "அஸ்திரம்'

மதுரை:மதுரையில், கொசு உற்பத்தியை தடுக்க முடியாமல் திணறி வரும் மாநகராட்சியின் அடுத்த அஸ்திரமாக,"ஆயில் புல்லிங்' முறையை கையில் எடுத்துள்ளது.

"டெங்கு' பாதிப்பிற்கு பின், கொசுக்கள் மீதான அச்சம், மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கொசு உற்பத்திக்கு வைகையில் தேங்கும் கழிவுநீரும் ஒரு காரணம்.

இதை ஒழிக்க டாக்டர்கள் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டும், கட்டுப்படுத்த முடியவில்லை. கொசு மருந்து, புகை, ஆயில் பால் உள்ளிட்ட பல்வேறு அஸ்திரங்களை பயன்படுத்தியும், அழிக்க முடியவில்லை. இறுதியில் "ஆயில் புல்லிங்' முறையை பயன்படுத்தி, கொசுக்களை அழிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

முன்னோட்டமாக, வைகை ஆற்றில் ஆகாயத் தாமரையை அகற்றி, ஆயில் புல்லிங் மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இது பலனளிக்கும்பட்சத்தில்,வார்டுகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.

இம்முறையால், கொசுப்புழுக்களின் சுவாசம் தடுக்கப்பட்டு, வளர்ச்சி பெறும் முன் அவை இறப்பை சந்திக்கும். அதிகாரிகளின் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
 

சுகாதாரச் சீர்கேடு: பன்றிகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்

Print PDF
தினமணி       03.04.2013

சுகாதாரச் சீர்கேடு: பன்றிகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்

திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த 8 பன்றிகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட தென்னம்பாளையம், ஜம்மனைப்பள்ளம், சங்கிலிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் பட்டி அமைத்து பன்றிகள் வளர்த்து வருகின்றனர்.  பன்றிகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிப்பதாக கடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மேலும், பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இந்நிலையில், மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் பன்றிகளைப் பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். திங்கள்கிழமை தென்னம்பாளையம் பகுதியில் 5 பன்றிகளை பிடித்தனர். ஜம்மனைபள்ளத்தில் சுற்றித்திரிந்த 3 பன்றிகளை செவ்வாய்க்கிழமை பிடித்தனர்.
 


Page 70 of 519