Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை

Print PDF
தினத்தந்தி            25.03.2013

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை


நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

இதுகுறித்து நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் ரகீம் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:– நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக இருப்பதால் மாவட்டத்தின் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார். அதன்படி அனைத்து வகையான பிளாஸ்டிக் கேரி பைகள் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் மூடப்பட்ட பேப்பர் பிளேட்டுகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது.

அபராதம் விதிப்பு

பிளாஸ்டிக் கவர் மீது அதனை தயாரித்த நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவை அச்சிடப்பட வேண்டும். பிளாஸ்டிக் கவர்களில் 40 மைக்ரான் எடை உள்ளவை என்ற தகவல் அச்சிடப்பட வேண்டும். 40 மைக்ரான் மற்றும் அதற்கும் மேல் உள்ள பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தும் போது, அதனை தயாரித்த நிறுவனத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் முறையான பதிவேட்டினை அனைத்து கடை உரிமையாளர்களும் பராமரிக்க வேண்டும்.

மண்டல அலுவலர்கள் ஆய்வின் போது, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் முதன் முறையாக பயன்படுத்தும் ஒவ்வொரு அரை கிலோ பிளாஸ்டிக் பைகளுக்கும் 500 ரூபாய் வீதமும், 2–வது முறையாக அதே கடையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ஒவ்வொரு அரை கிலோ பிளாஸ்டிக் பைகளுக்கும் ரூ.750 வீதமும், 3–வது முறையாக பயன்படுத்தினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

கடை உரிமம் ரத்து

இதையும் மீறி கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தினால் கடையின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தினால் அவர்களுக்கும் ரூ.100 வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
 

மகப்பேறு உதவித் திட்டம்: 84% பேருக்கு தொகை வழங்கல்

Print PDF

தினமணி        25.03.2013

மகப்பேறு உதவித் திட்டம்: 84% பேருக்கு தொகை வழங்கல்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தில் கோவை மாநகராட்சிப் பகுதியில் 83.58 சதவீதம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ.4,000 வீதம் 3 தவணைகளில் ரூ.12 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கோவை மாநகராட்சியில் நடப்பு ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5.33 கோடி. இதில் பிப்ரவரி மாதம் முடிய ரூ.3.90 கோடி அரசு கருவூலத்தில் இருந்து பெறப்பட்டு கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ரூ.1.43 கோடி நிதியில் கருவுற்ற தாய்மார்களின் பணப் பயனுக்குத் தகுதி வாய்ந்த விவரங்கள் கணினி மூலம் பதியப்பட்டுள்ளது. இந்த விவரங்களைக் கருவூலத்தில் செலுத்த ரூ.55.76 லட்சத்துக்கான பயனாளிகள் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. கோவை மாநகராட்சியில் 83.58 சதவீதம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீட்டில் மீதியுள்ள ரூ.88 லட்சத்துக்காக கர்ப்பிணிகளின் தகுதி வாய்ந்த விவரங்கள் நகர் நல மையப் பகுதி சுகாதார செவிலியர்கள், கணினி மூலம் பதிவு செய்து பயனாளிகள் பட்டியல் தயார் செய்ய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Last Updated on Monday, 25 March 2013 09:39
 

தெரு நாய்களுக்கு கருத்தடை: ஆணையர் தகவல்

Print PDF
தினமணி          25.03.2013

தெரு நாய்களுக்கு கருத்தடை: ஆணையர் தகவல்  


மதுரை மாநகரப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த இரு மாதங்களில் 692 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை சிகிச்சைகள்  செய்யப்பட்டுள்ளன. விலங்குகள் நலவாரிய விதிமுறைகளின்படி முறையாக பிடிக்கப்படும் இந்த தெரு நாய்கள், மாநகராட்சி நாய்கள் கருத்தடை மையத்தில் சிகிச்சை செய்து, வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு, முறையாக உணவு மற்றும் மருந்துகள் கொடுத்து பராமரிக்கப்பட்டு, மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடப்படுகிறது.

மேலும், பொதுமக்களால் புகார் கூறப்படும் இடங்களில் தெரு நாய்கள் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
 


Page 75 of 519