Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருவாரூர் நகரில் 62 நாய்களுக்கு கருத்தடை–தடுப்பூசி நகராட்சி ஆணையர் தகவல்

Print PDF
தினத்தந்தி          24.03.2013

திருவாரூர் நகரில் 62 நாய்களுக்கு கருத்தடை–தடுப்பூசி நகராட்சி ஆணையர் தகவல்


திருவாரூர் நகரில் 62 நாய்களுக்கு கருத்தடைதடுப்பூசி போடப்பட்டதாக நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் தெரிவித் துள்ளார்.

திருவாரூர் நகராட்சி ஆணையர்(கூடுதல் பொறுப்பு) கலைச்செல்வன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

கருத்தடை

திருவாரூர் நகராட்சி பகுதி யில் 1,515 நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், வெறிநாய் தடுப்பூசி போடவும் தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 15ந் தேதி முதல் 21ந் தேதி வரை ஒரு வாரகாலம் திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன் மற்றும் வெறிநாய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 32 நாய் களுக்கு ஆபரேசனும், 30 நாய் களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி யும் கால்நடை மருத்துவ அலு வலர்கள் ஆறுமுகம் மற்றும் சுப்பையன் மேற்பார்வையில் நடத்தப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டு இருந்தது.
 

குடிநீர் தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்

Print PDF
தினமணி         24.03.2013

குடிநீர் தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்


மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நீரினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

நீரினால் பரவும் பல்வேறு நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை அழிப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டம் 2023-ன்படி 2015 ஆம் ஆண்டுக்குள் பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரம் மற்றும் தனி நபர் கழிவறைகள் கட்டுவதற்கான புள்ளி விவர சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் பாஸ்கரன்.மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க. வரதராஜன், நகர்மன்றத் தலைவர்கள் சாவித்திரி கோபால், (தஞ்சாவூர்), ரத்னா சேகர் (கும்பகோணம்), ஜவகர்பாபு (பட்டுக்கோட்டை) உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.
 

பிளாஸ்டிக் கழிவைச் சேகரிக்க வீட்டுக்கு ஒரு பை!

Print PDF
தினமணி         23.03.2013

பிளாஸ்டிக் கழிவைச் சேகரிக்க வீட்டுக்கு ஒரு பை!


கோபியில் பிளாஸ்டிக் கழிவைச் சேகரிக்க வீட்டுக்கு ஒரு பை வழங்கும் திட்டத்தை, கோபி நகராட்சித் தலைவர் ரேவதிதேவி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.

கோபி நகராட்சியில் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், அனைத்து வகையான பிளாஸ்டிக் டம்பர்கள் விற்கவும், உபயோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி உபயோகிப்போருக்கு ரூ.100-ம், பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.1,000-ம், மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.2,000, தயாரிப்பாளர்களுக்கு ரூ.5,000-ம் அபராதமாக விதிக்கப்படுகிறது.

தொடர்ந்து மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டால் வியாபார உரிமம் ரத்து செய்யப்பட்டு வழக்கும் பதியப்படுகிறது. 40 மைக்ரான் அளவுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் ஸ்பான்சர் மூலமாக பை வழங்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் கழிவைப் போட்டு வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6, 11, 20-ஆவது வார்டுகளில் 1,700 பைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நகராட்சித் தலைவர் ரேவதிதேவி கூறியது:

பசுமை நகரமான கோபி நகராட்சியில் பிளாஸ்டிக் பை ஒழிப்பில் தீவிரமாக உள்ளோம். குப்பையோடு பிளாஸ்டிக் கழிவு சேர்வதால் குப்பை மட்குவதில்லை. இதனால், பிளாஸ்டிக் கழிவை தனியாக வைப்பதற்காக, ஒவ்வொரு வீடுக்கும் பை வழங்குகிறோம். சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு சாலை அமைக்கப் பயன்படும் என்றார்.

நகராட்சி ஆணையாளர் ஜான்சன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், தமிழ்ச்செல்வன், சையதுகாதர் உள்பட பலர் பங்கேற்றனர்.
 


Page 77 of 519