Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தெருநாய்கள் இருந்தால் தொலைபேசியில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்

Print PDF
தினமணி               19.03.2013

தெருநாய்கள் இருந்தால் தொலைபேசியில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்


தெருநாய்கள் அதிகமாக இருந்தால் தொலைபேசியில் நகராட்சிக்கு தெரிவித்தால் நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவைசிகிச்சை செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியது. அதன்படி கடலூர் நகராட்சி சார்பில் பாபு கலையரங்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ரூ.2.90 லட்சம் செலவில் கருத்தடை அறுவை சிகிச்சை அரங்கு கட்டி செயல்பாட்டுக்கு வந்த சில மாதங்களில் மூடப்பட்டது.

இதனால் கடலூர் நகரில் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. நாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகமானது. அதைத் தொடர்ந்து தெருநாய்களுக்கு மீண்டும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, ஏற்கெனவே பாபு கலையரங்கத்தில் கட்டிய, அறுவை சிகிச்சைக் கூடம் ரூ2.5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு, தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவி கூறுகையில், "தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி கடந்த 15-ம் தேதி தொடங்கப்பட்டது.

இரண்டு கால்நடை மருத்துவர்கள், நாய்களைப் பிடிக்க மூன்று ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தெருநாய்கள் அதிகம் இருந்தால் உடனடியாக 230021 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9788553300 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், உடனடியாக அப்பகுதியில் உள்ள நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவைசிகிச்சை செய்யப்படும் என்றார்.
 

மாநகராட்சி சிறப்பு முகாம்: 268 பேருக்கு சிறுநீரகப் பரிசோதனை

Print PDF
தினமணி               19.03.2013

மாநகராட்சி சிறப்பு முகாம்: 268 பேருக்கு சிறுநீரகப் பரிசோதனை


சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற முகாமில் 268 பேருக்கு சிறுநீரகப் பரிசோதனை செய்யப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நுங்கம்பாக்கம் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெரம்பூர் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த முகாம்களில் மொத்தம் 268 பேருக்கு சிறுநீரக பரிசோதனை செய்யப்பட்டது.

நுங்கம்பாக்கத்தில் மட்டும் 142 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த முகாமில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் பி. செüந்தரராஜன் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் முகாமை பார்வையிட்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் 2 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம்

Print PDF
தினமணி               19.03.2013

மேலும் 2 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம்


சென்னையில் மேலும் இரண்டு இடங்களில் புதிதாக நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்தார்.

சென்னையில் நாய்களின் தொல்லை பெருகி வருகிறது. குழந்தைகளை நாய் கடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று ஆணையர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: சென்னையில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் நாய்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. நாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 8 நாய் பிடிக்கும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாள்களில் மட்டும் 650 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள நாய்களின் எண்ணிக்கை குறித்து விரிவான கணக்கெடுப்பு எடுக்கப்படும்.

சென்னையில் இப்போது 4 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் இரண்டு இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும்.

இப்போது ஒரு நாளைக்கு 80 முதல் 100 நாய்கள் வரை பிடிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 200 நாய்களை வரை பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தாண்டுக்குள் சுமார் 60,000 நாய்கள் வரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையில் கூடிய விரைவில் நாய்த் தொல்லை கட்டுப்படுத்தப்படும் என்றார் விக்ரம் கபூர்.
 


Page 80 of 519