Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தருமபுரி கடைகளில் நகராட்சி அலுவலர்கள் சோதனை

Print PDF
தினமணி         16.03.2013

தருமபுரி கடைகளில் நகராட்சி அலுவலர்கள் சோதனை


தருமபுரியில் பல்வேறு கடைகளில் நகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருள்க பறிமுதல் செய்யப்பட்டன.

தருமபுரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 40 மைக்ரான் அளவுக்குக் குறைவான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) குருசாமி ஆலோசனையின் பேரில், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நகரக் கடைகளில் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

ராஜகோபால் கவுண்டர் பூங்கா தெரு, முகமது அலி கிளப் சாலை, சித்த வீரப்ப செட்டி தெரி, பி.ஆர். சீனிவாசன் தெரு, சின்னசாமி நாயுடு தெரு, நாச்சியப்பா வீதி, சேலம் புறவழிச் சாலை ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வணிக வளாகம், பல்பொருள் அங்காடி, ஹோட்டல், மளிகைக் கடை, பெட்டிக் கடை, டீ கடை, உணவுப் பொருள் விற்பனையகங்கள் என பல்வேறு கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக, அந்தந்தக் கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 முதல் ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் எச்சரித்தனர்.
 

நாய்கள் தொல்லை: நடவடிக்கை தேவை

Print PDF
தினமணி         16.03.2013

நாய்கள் தொல்லை: நடவடிக்கை தேவை

கோபி நகராட்சிப் பகுதிகளில் நாய்களின் தொல்லைகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வீதியிலும் குறைந்தபட்சம் 10 தெரு நாய்கள் திரிகின்றன. வீதிகளில் நடந்து செல்பவர்களையும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களையும் இவை துரத்துகின்றன. சில நேரங்களில் குடும்பத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள் நாய்கள் துரத்துவதால் கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் நாய்கள் ஊளையிடுவதால் தூங்க முடிவதில்லை என்று பலர் புகார் கூறுகிறார்கள். நாய்க்கடிக்கு அஞ்சி, குழந்தைகளை வெளியில் அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். நகராட்சிக் கூட்டத்தில் இதுகுறித்து பேசுகையில், உடனடியாக நாய்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று நகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

நகராட்சி நிர்வாகங்கள் புளூகிராஸ் அமைப்புடன் சேர்ந்து தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கோபி நகரில் திரியும் நாய்களை நகராட்சி நிர்வாகம் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

891 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

Print PDF
தினமணி                 16.03.2013

891 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை


காஞ்சிபுரத்தில் 891 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் உள்ள தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தவிர நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் நாய்களையும், ஊனமுற்ற நாய்களையும் நகராட்சியே பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2012-13-ஆம் ஆண்டுக்கான நாய்கள் கணக்கெடுப்பின்படி காஞ்சிபுரத்தில் 1,786 தெரு நாய்கள் உள்ளன. நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்ட நாய்களின் எண்ணிக்கை 198 ஆக உள்ளது.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் புளு கிராஸ் அமைப்புடன், நகராட்சி இணைந்து இதுவரை 891 நாய்கள் பிடிக்கப்பட்டு வெறிநாய் தடுப்பூசியும், கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளன.

வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு அதன் உரிமையாளர்கள் நகராட்சியில் உரிமங்களை கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும். தெருநாய் தொல்லை அதிகாமாக இருந்தாலோ, வெறிநாய் மற்றும் நீண்டநாள் நோய்ப்பட்ட தெருநாய்கள் இருந்தாலோ அது குறித்து பொதுமக்கள் நகராட்சியில் புகார் தெரிவிக்கலாம்.

அதன்படி 044-27222801 என்ற தொலைபேசி எண்ணிலோ, 93677 08833 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் என். விமலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டறிக்கை விநியோகத்தை நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார்.
 


Page 81 of 519