Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Print PDF
தினமணி        14.03.2013

தெரு நாய்களுக்கு  கருத்தடை சிகிச்சை


திருவத்திபுரம் நகராட்சி சார்பில் தெரு நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

நகராட்சிப் பகுதிகளில் திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்து அதன் இனப்பெருக்கத்தை குறைக்குமாறு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதன் பேரிலும் நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் புதன்கிழமை மேற்கண்ட பணி செய்யாறில் நடைபெற்றது.

திருவத்திபுரம் நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பி.கே.ரமேஷ் ஆகியோர் பணியை மேற்பார்வையிட்டனர்.

சுகாதார ஆய்வாளர் கே.மதனராசன் தலைமையில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 25 நாய்களை பிடித்தனர். கால்நடை மருத்துவர் எம்.அன்பழகன், நாய்களுக்கு ரேபீஸ் நோய் தடுப்பூசி போட்டு கருத்தடை சிகிச்சை அளித்தார்.
 

உலக சிறுநீரக தினம்: மாநகராட்சி சார்பில் இன்று இலவசப் பரிசோதனை

Print PDF
தினமணி        14.03.2013

உலக சிறுநீரக தினம்: மாநகராட்சி சார்பில் இன்று இலவசப் பரிசோதனை


உலக சிறுநீரக தினத்தையொட்டி இலவச சிறுநீரக பரிசோதனை முகாம்களை சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை நடத்துகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூர் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற சிறுநீரக பரிசோதனையில் 1,709 மாணவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஆண்டும் உலக சிறுநீரக தினத்தில் (மார்ச் 13) நுங்கம்பாக்கம், பெரம்பூரில் ரத்தம், சிறுநீர் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் காலில் வீக்கம் உள்ளவர்கள் இந்த பரிசோதனைகளை செய்து, நோயின் தொடக்கத்திலேயே சிகிச்சை பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அடையாறு ஆற்றில் மணல் திட்டுகளை அகற்ற எதிர்ப்பு

Print PDF
தினமணி        14.03.2013

அடையாறு ஆற்றில் மணல் திட்டுகளை அகற்ற எதிர்ப்பு


அடையாறு ஆற்றில் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வந்த தூர் வாரும் பணிகள் பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கொசுக்களை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சியும் பொதுப்பணித் துறையும் இணைந்து அடையாறு ஆற்றில் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக இருக்கும் மணல் மேடுகளையும் நீரில் படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரை செடிகளையும் அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த மணல் மேடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியும், கட்டுமரங்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியும் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள மணல் மேடுகளை அகற்ற ஊழியர்கள் புதன்கிழமை முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இது கடற்கரை ஒழுங்குமறை மண்டலத்தில் வருவதால் மணல் மேடுகளை அகற்ற அந்தப் பகுதி மீனவர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பின் காரணமாக மணல் மேடுகளை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
 


Page 82 of 519