Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தாம்பரம் பகுதியில் நம்ம டாய்லெட்டுக்கு மக்கள் வரவேற்பு

Print PDF
தினகரன்             07.03.2013

தாம்பரம் பகுதியில் நம்ம டாய்லெட்டுக்கு மக்கள் வரவேற்பு


தாம்பரம், : தமிழகத்தில் முதன்முறையாக தாம்பரம் நகராட்சி சார்பில் ‘நம்ம டாய்லெட்’ என்ற பெயரில் ரூ.6 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிப்பறை முற்றிலும் பைபரால் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு என தனித்தனியாக உள்ளது. இதற்கு கட்டணம் கிடையாது. இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். கழிப்பறைக்கு வருபவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள், இந்த கழிப்பறை திட்டத்தை வரவேற்று எழுதியுள்ளனர்.

இந்த கழிப்பறையை அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று பார்வையிட்டார். மேலும், புத்தகத்தில் பொதுமக்கள் எழுதியுள்ள கருத்துகளை படித்தார். அமைச்சர் சின்னையா, தாம்பரம் நகர மன்ற தலைவர் கரிகாலன், ஆணையர் சிவசுப்பிரமணியன் உடனிருந்தனர்.
 

இலவச கொசுவலை திட்டம் உற்பத்தியாளர்களுக்கு மாநகராட்சி அழைப்பு

Print PDF
தினகரன்             07.03.2013

இலவச கொசுவலை திட்டம் உற்பத்தியாளர்களுக்கு மாநகராட்சி அழைப்பு


சென்னை, : மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மாநகரில் கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களில் இருந்து பொது மக்களை பாது காக்கும் வகையில், நீர்வழிப்பாதை ஓரங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிசை வாழ் மக்களுக்கு இலவச கொசுவலை வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக கொசுவலைகள் மிக அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றன.

எனவே, அதிக அளவில் கொசுவலைகள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடம் இருந்து (ஆண்டு ஒன்றுக்கு ரூ 10 கோடிக்கு மேல் விற்பனை செய்பவர்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அவர்கள் விருப்ப கடிதம், நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கொசுவலை மாதிரிகளுடன் சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட வளாகம், மாநகர சுகாதார அலுவலரிடம் வரும் 13ம்தேதி மாலை 5மணிக்குள் நேரில் அளிக்க கேட்டுக் கொள்கிறோம்.
 

குடியிருப்புக்குள் புகுருந்த ஆட்டு கொட்டகை புழுக்கள்; நகராட்சி நிர்வாகம் அதிரடியால் மக்களுக்கு நிம்மதி

Print PDF
தினமலர்                  07.03.2013

குடியிருப்புக்குள் புகுருந்த ஆட்டு கொட்டகை புழுக்கள்; நகராட்சி நிர்வாகம் அதிரடியால் மக்களுக்கு நிம்மதி


குன்னூர்: குன்னூர் நகரின் மையப் பகுதியில் ஆட்டு கொட்டகையிலிருந்து வெளியேறிய புழுக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், பெரும் பிரச்னை ஏற்பட்டது.

குன்னூர் நகராட்சி உட்பட்ட ராஜாஜி நகரில், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் ஜெயசீலன் என்பவர், தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடு வளர்ந்து வருகிறார். இந்நிலையில், இந்த கொட்டைகளிலிருந்து கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான புழுக்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தன. மேலும், இந்த பகுதியில் கடும் நுர்நாற்றம் வீசியதுடன், பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

கொட்டகையை ஒட்டிய வீட்டினுள் இந்த புழுக்கள் ஊடுறுவியதால், அங்கு வசிக்கும் கமாலுதீன் என்பவரது 2 வயது மகன் இப்ராஹிமுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், ஆட்டு கொட்டகையை ஆய்வு செய்தனர். அப்போது, "கடந்த ஓராண்டாக, இங்கு உரம் தயாரிக்க சாணம் சேமித்து வைக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும், இறந்த ஆட்டின் உடல்களும் கிடந்தது. இறந்த ஆடுகளை அகற்றாமல், அங்கேயே விடப்பட்டதால் அவற்றின் உடலிலிருந்து புழுக்கள் உற்பத்தியாகி, அவை பிற குடியிருப்புகளுக்குள் பரவியுள்ளன' என்பது தெரியவந்தது.

இதன் பின்<, துப்புரவு ஊழியர்களை கொண்டு கொட்டகையிலிருந்து சேமித்து வைக்கப்பட்ட சுமார் ஒரு டன் உரம் அகற்றப்பட்டது.

இந்த உரத்தை அகற்றும் போது, அப்பகுதியில் கடும் நுர்நாற்றம் வீசியது. துப்புரவு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும், அப்பகுதியை கடந்த சென்றவர்களுக்கும் வாந்தி ஏற்பட்டது.

நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியை முழுவதும் தூய்மைப்படுத்தி, "பிளீச்சிங் பவுடர்' மற்றும் பூச்சி கொல்லி மருந்தை தெளித்தனர்.

இது குறித்து சுகாதார ஆய்வாளர் மால்முருகன் கூறுகையில், ""குடியிருப்புகளிடையே சுகாதாரமற்ற முறையில் கொட்டகை அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களில் இப்பகுதியில் யாரும் ஈடுபட கூடாது. கொட்டகைகளை குடியிருப்பு இல்லாத பகுதிகளில் அமைக்க வேண்டும்,'' என்றார்.
 


Page 86 of 519