Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தொற்றுநோய் தடுப்புப் பயிற்சி

Print PDF
தின மணி               21.02.2013

தொற்றுநோய் தடுப்புப் பயிற்சி

செய்யாறை அடுத்துள்ள பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு தொற்று நோய்களை தடுப்பது குறித்து பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் ரத்தினவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தொற்று நோய்கள், நீரினால் பரவும் நோய்கள், கொசுக்களால் பரவும் நோய்கள் உள்ளிட்டவை குறித்தும் அவற்றை தடுப்பது குறித்தும் செயல்விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார்.

பெருங்கட்டூர், தென்கழனி, அசனமாப்பேட்டை, வடமணப்பாக்கம், தென்னம்பட்டு, பெருமாந்தாங்கல்,கொடையம்பாக்கம், அழிவிடைதாங்கி ஆகிய ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வி.ஜி.ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கே.சம்பத், பெருமாள், தனசேகர் ஆகியோர் பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Last Updated on Thursday, 21 February 2013 12:04
 

சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்:கீழ்குந்தா பேரூராட்சி எச்சரிக்கை

Print PDF
தின மணி                   19.02.2013

சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்:கீழ்குந்தா பேரூராட்சி எச்சரிக்கை

பொது சுகாதாரத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் கோழிக் கழிவுகளை கொட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செயல் அலுவலர் ந.மணிகண்டன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கீழ்குந்தா பேரூராட்சிக்குள்பட்ட மேல் பஜார், கீழ்குந்தா சாலை, கீழ் பஜார், மின்வாரிய முகாம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் அதிகளவில் கோழி இறைச்சிக் கடைகள் உள்ளன.

இந்தக் கடைகளில் சேகரிக்கப்படும் கோழிக் கழிவுகள் சாலையோரத்திலேயே கொட்டப்படுகின்றன.

இதனால் பொது சுகாதாரத்துக்கு பங்கம் ஏற்படுவதுடன், கழிவுகளை உண்ணவரும் காட்டுப்பன்றி, சிறுத்தை, நாய் உள்ளிட்ட விலங்குகளால் பொதுமக்களும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கோழிக்கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் வழிகாட்டுதல்படி, அப்புறப்படுத்த வேண்டும் என பல முறை வலியுறுத்தியும், கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்கள் அதைக் கடைபிடிக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

இது பேரூராட்சி நிர்வாகத்தை அவமதிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

எனவே, சாலையோரத்தில் கோழிக் கழிவுகளை கொட்டுவதை இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவை மீறும் கடைகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களது கடை உரிமமும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated on Thursday, 21 February 2013 11:38
 

பாதாள சாக்கடைக் குழாயில் ஆலைக்கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கக் கோரிக்கை

Print PDF
தின மணி                   19.02.2013

பாதாள சாக்கடைக் குழாயில் ஆலைக்கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கக் கோரிக்கை

பாதாள சாக்கடைக் குழாயில் ஆலைக்கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பி.வெங்கடேசன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. இணைப்பொதுச்செயலர் புருஷோத்தமன் வரவேற்றார். பொதுச்செயலர் எம்.மருதவாணன் பேசினார்.

தீர்மானங்கள்: கடலூர் நகராட்சி கம்மியம்பேட்டை, மஞ்சக்குப்பம் பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட எரிவாயு தகன மேடை 3 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு விடாமல் உள்ளதால் துருப்பிடித்து மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஜவான்பவன் இணைப்புச் சாலையில், பாலங்களில் உள்ளது போல் தடுப்புக் கட்டைகள் அமைக்க வேண்டும்.

நகரில் பாதாள சாக்கடை திட்டம்  இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் ஆமா வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. முழுமை பெற்ற இடங்களிலோ குழாயில் உள்ள மண், கல் உள்ளிட்ட பொருட்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் ஓடாத சாக்கடை குழாயில் பலர் இணைப்பு கொடுத்து கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பாதாள சாக்கடை மூடிகளைத் திறந்து கழிவு நீர் மற்றும் ஆலைக் கழிவுகள் லாரிகள் மூலம் கொட்டப்படுகிறது.

இதனால் சாக்கடை குழாயில் பணியாற்றுபவர்களை விஷவாயு தாக்கும் அபாயம் உள்ளதை சம்மந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Last Updated on Thursday, 21 February 2013 11:29
 


Page 93 of 519