Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசு ஒழிப்புப் பணியை தீவிரமாக்க வேண்டும்

Print PDF

தினமணி           23.08.2012

கொசு ஒழிப்புப் பணியை தீவிரமாக்க வேண்டும்

விழுப்புரம், ஆக. 22: விழுப்புரம் நகராட்சிக் கூட்டம் அதன் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் பேசியது:

சாகுல் ஹமீது: கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. தெருக்களில் கொசு மருந்து அடிப்பதற்கு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். மருந்து அடிக்கும் போது அந்தந்த வார்டு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுச் செல்ல வேண்டும் என்றார்.தொடர்ந்து இதனை அனைத்து உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

 

குடிநீரை காய்ச்சிகுடிக்க அட்வைஸ்

Print PDF

தினமலர்     23.08.2012

குடிநீரை காய்ச்சிகுடிக்க அட்வைஸ்

ஆத்தூர்: ஆத்தூர் நகர் பகுதி மக்கள், மழை காலத்தில் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும், என்று நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, ஆத்தூர் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி வெளியிட்ட அறிக்கையில், ஆத்தூர் நகர் பகுதியில், 33 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது, மழை பெய்து வருவதால், தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால், குடிநீரை கொதிக்க வைத்து ஆறியவுடன் பருக வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 23 August 2012 09:07
 

வயிற்றுப்போக்கு தடுப்பு நடவடிக்கை மேட்டூர் நகராட்சி பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை

Print PDF

தினகரன்           18.08.2012

வயிற்றுப்போக்கு தடுப்பு நடவடிக்கை மேட்டூர் நகராட்சி பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை

மேட்டூர், : சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட தூக்கணாம்பட்டி மற்றும் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் 40க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிக்குள்ளாகினர்.

மாசு கலந்த குடிநீரை அருந்தியதால் அவர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.இந்நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து ஊற்றி சுத்தப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் சுண்ணாம்பு பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கழிவு நீர் கலந்த குடிநீரை வெளியேற்றி விட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்த பின்னர் குடிநீர் விநியோகம் செய்யலாம் என முடிவு செய்துள்ளனர். இதன்படி, குடிநீர் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Last Updated on Saturday, 18 August 2012 09:49
 


Page 99 of 519