Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஆத்தூர் நீர்தேக்கத்தில் தூர்வாரும் பணிமுட்புதர்கள் அகற்ற நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர்           16.08.2012

ஆத்தூர் நீர்தேக்கத்தில் தூர்வாரும் பணிமுட்புதர்கள் அகற்ற நகராட்சி நடவடிக்கை

திண்டுக்கல்:ஆத்தூர் நீர் தேக்கத்தின் அருகில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு தூர் வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் ஆத்தூர் நீர்தேக்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. 24 அடி உயரமுள்ள நீர் தேக்கத்தில் 22 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம். நீண்டகாலமாக இந்த நீர்தேக்கத்தில் தூர் வாரப்படாததால் நீர்மட்டம் குறைந்ததோடு, சகதி, வண்டல் மண் படிந்து காணப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் முட்புதர்கள் ஆக்கிரமித்திருந்தன.திண்டுக்கல் நகராட்சி சார்பில் மராமத்து பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.

வண்டல் மண்ணை இலவசமாக அள்ளிக்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. அதேப்போன்று தூர் வாரும் பணியும் துவக்கப்பட்டுள்ளது. தேவையில்லாத முட் புதர்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.நகராட்சி தலைவர் மருதராஜ் கூறுகையில்,"ஆத்தூர் நீர் தேக்க பகுதியில் 30 ஆண்டுகளாக மராமத்து பணிகள் நடைபெறவில்லை. கொள்ளளவு வெகுவாக குறைந்ததோடு, பார்வையாளர்கள் செல்ல முடியாத அள விற்கு முட்புதர்கள் குவிந்திருந்தன. முட்புதர்கள் அகற்றப்பட்டு நீர்தேக்கத்தை முழுமையாக பார்க்கும் வகையில் அப்பகுதி மாற்றப்பட்டுள்ளது,'' என்றார்.

 

சுகாதாரமான முறையில் இறைச்சி விற்க வேண்டும் :அதிகாரிகள் எச்சரிக்கை

Print PDF

தினமலர்                    15.08.2012

சுகாதாரமான முறையில் இறைச்சி விற்க வேண்டும் :அதிகாரிகள் எச்சரிக்கை

உடுமலை : சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் என, சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.விதிமுறைகளை பின்பற்றாமல் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்வது குறித்து, புகைப்படங்களுடன் "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, உடுமலை நகராட்சி சுகாதாரத்துறையினர், ஆய்வு மேற்கொண்டனர்.உடுமலை நகர் நல அலுவலர் டாக்டர் சோமசுந்தரம் கூறுகையில்,""நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இறைச்சி சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆட்டு இறைச்சி விற்பனை செய்பவர்களிடம், நகராட்சி ஆடுவதை கூடத்தில் ஆடுகளை வெட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். சுகாதாரமான முறையில் கடைகளை பராமரிக்கவும்; விற்பனை செய்ய வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

உணவு பாதுகாப்பு அலுவலர் காமராஜ் கூறியதாவது:இறைச்சி கடைகள் ஆய்வு செய்யப்பட்டு, அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார கேடான மற்றும் சாக்கடை யோரம் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது; இறந்த இறைச்சிகளை விற்பனை செய்ய கூடாது என தெரிவிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு அறுவறுக்க தக்க வகையில், இறைச்சிகளை வைக்கவோ, வெட்டவோ கூடாது. நாய் உள்ளிட்ட விலங்குகள் இறைச்சிகளுக்காக சுற்றும் வகையில், தெருக்களில் இறைச்சிகளை கொட்ட கூடாது. இறைச்சி கழிவுகளை ரோட்டிலோ, திறந்த வெளியிலோ கொட்டாமல் அதற்குரிய குப்பை தொட்டிகளில் போட வேண்டும். இறைச்சி விற்பனை செய்யுமிடம் "டைல்ஸ்' ஒட்டிய அறையாக இருக்க வேண்டும்; கடைகளில் தினசரி கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும். இறைச்சி விற்பனை செய்பவர்கள், மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Thursday, 16 August 2012 06:09
 

மாநகராட்சி கமிஷனர் உத்தரவு சுகாதாரமற்ற இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை

Print PDF

தினமலர்      14.08.2012

மாநகராட்சி கமிஷனர் உத்தரவு சுகாதாரமற்ற இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிக்கடை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, கமிஷனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாநகராட்சிஎல்லைக்குள், இறைச்சிக்கடைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருகின்றன; மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, "தினமலர்' நாளிதழில் படங்களுடன் நேற்று செய்தி வெளியிடப் பட்டது.அதன் எதிரொலியாக,சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக இறைச்சி கடைகளின் சுகாதார தன்மை குறித்து ஆராயவும், ஆடுவதை கூடம் பயன்பாடு குறித்து கண்காணிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

நகர் நல அலுவலர் (பொறுப்பு) ராமச்சந்திரன் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில்,"சீல்' வைக்காமல் விற்கப்படும் ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்வதுடன், அபராதம் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. இறைச் சிக்கடைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதாக தகவல் வெளியாகியிருந்தது குறித்து சுகாதார ஆய்வாளர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

ஒவ்வொரு வார்டிலும் உள்ள இறைச்சி கடைகளை நேரடியாக ஆய்வு செய்து, சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென சுகாதார ஆய்வாளர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.பன்றி இறைச்சி கடைகள் இயங்குவது முற்றிலும் தடை செய்யப்படும். கோழி இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக, கோழி இறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஆட்டிறைச்சி கடைகள் மட்டுமின்றி, மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து இறைச்சிக்கடைகளும் சுகாதாரமான முறையில் இயங்குகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படும், என்றார்.

கமிஷனர் செல்வராஜிடம் கேட்ட போது,""ஆடுவதை கூடத்தில் கால்நடை டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாகவும் ஆடுவதை கூடங்கள் அமைக்கப் படும். கோழி, மாடு, பன்றி இறைச்சி கழிவுகளை அகற்றுவது தொடர்பாக நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். சுகாதாரமற்ற முறையில் இயங்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது,'' என்றார்.

Last Updated on Tuesday, 14 August 2012 06:16
 


Page 101 of 519