Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சாத்தான்குளம் பேரூராட்சிக்கு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம்

Print PDF

தினகரன்     10.08.2012

சாத்தான்குளம் பேரூராட்சிக்கு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம்

சாத்தான்குளம், : சாத்தான்குளம் பேரூராட்சியில் ரூ.72 ஆயிரத்தில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் இல்லாததால் சுகாதாரத்துறையிடம் இருந்து வாடகைக்கு பெற்று வார்டு பகுதிகளில் மருந்து புகை அடிக்கப்பட்டது. இதனால் தெருக்களில் கொசு மருந்து அடிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தற்போது பேரூராட்சிக்கு ரூ.72 ஆயிரத்தில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டது.இதையடுத்து சாத்தான்குளம் 9வது வார்டு முத்தாரம்மன் கோயில் தெருவில் கொசு மருந்து அடிக்கும் பணியை பேரூராட்சித் தலைவர் ஜோசப் தொடங்கி வைத்தார். பின்னர் அனைத்து தெருக்களிலும் அடிக்கப்பட்டது.

இதில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி முருகேசன், துணைத்தலைவர் வீரக்குமார், கவுன்சிலர்கள் சரவணன், இந்திரா, ஜாக்குலின், முன்னாள் கவுன்சிலர் குற்றாலிங்கம், அதிமுக பிரமுகர் ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

சுரண்டை பேரூராட்சி பகுதியில் பன்றி வளர்த்தால் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்     10.08.2012

சுரண்டை பேரூராட்சி பகுதியில் பன்றி வளர்த்தால் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

சுரண்டை, : சுரண்டை பேரூராட்சி செயல் அலு வலர் சாமுவேல்துரைராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சுரண்டை தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் முழு சுகாதார பணிகள் போர்க் கால அடிப்படையில் நடந்து வருகின்றன.  ஊருக்குள் பன்றிகளை வளர்ப்பதால் பொது சுகாதாரம் கெடு கிறது. மேலும் பன்றி காய்ச் சல் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. நோய்களை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக பன்றி வளர்ப்பவர்கள் மீது பொது சுகா தார சட்டப்படி காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே பன்றிகள் வளர்ப்பவர்கள் பேரூராட்சி பகுதியில்   இல்லாமல் காட்டுப்பகுதியில்  வளர்க்க வேண்டும். அதையும் மீறி பன்றிகளை ஊருக்குள் வளர்த்து தெருக்களில் அலையவிட்டால்  முன்னறிவிப்பின்றி பேரூராட்சி சுகா தார பணியாளர்கள் மூலம் பன்றிகளை பிடிப்பதுடன் அதற்கான செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பேரூராட்சி தலைவர் ஜெயராணி வள்ளி முருகன், துணைத்தலைவர் பழனி மற்றும் கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்புடன் சுகாதார பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Last Updated on Friday, 10 August 2012 11:44
 

ஊட்டி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை

Print PDF

தினமலர்     10.08.2012

ஊட்டி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை

ஊட்டி : ஊட்டி கோடப்பமந்து கால்வாய் கழிவுநீர், போட்ஹவுஸ் ஏரியில் கலக்காமல் தடுக்கும் நடவடிக்கைகளை, ஊட்டி நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடப்பமந்து கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஊட்டி ஏரியில் நேரடியாக கலக்கிறது. இதனால், ஏரி நீர் மாசுப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் மாநில செயலர் சங்கர், கடந்த 7ம் தேதி ஊட்டி ஏரியை பார்வையிட்டார். அவரது அறிவுரைப்படி, ஊட்டி கோடப்பமந்து கால்வாய் கழிவுநீர், ஏரியில் கலப்பதை தடுக்கும் பணியை, ஊட்டி நகராட்சி நிர்வாகம் துவக்கி உள்ளது. கால்வாயில் இருந்து வரும் கழிவுநீர், ஏரி கரையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு முழுமையாக செல்லும் வகையில், அங்குள்ள தடுப்புகளின் மீது, தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கப்பட்டு வருகிறது.

நகராட்சி கமிஷனர் சிவக்குமார், பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர், இப்பணிகளை பார்வையிட்டனர். அதிகாரிகள் கூறுகையில், "ஊட்டி நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், கோடப்பமந்து கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர், ஏரியில் கலக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தற்காலிகமாக, மணல் மூட்டைகளை அடுக்கும் பணிகள் நடக்கிறது,' என்றனர்.

 


Page 103 of 519