Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மேயர் துரைசாமி பேச்சு காலரா வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்

Print PDF

தினகரன்    06.08.2012

மேயர் துரைசாமி பேச்சு காலரா வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்

ஆலந்தூர், : மாரடைப்பில் இறந்தவரை காலராவில் இறந்ததாக கூறி வதந்தி பரப்புகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம் என்று மேயர் சைதைதுரைசாமி கூறினார்.புழுதிவாக்கம் இந்து காலனி நலச்சங்க 25ம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு சங்க செயலாளர் என்.மதிவதனன் தலைமைவகித்தார். பொருளாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். நிர்வாகி நாகராஜன் வரவேற்றார்.

இதில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:

உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உணவு முறையை மாற்றி கொள்ளுங்கள். ஊறுகாய்போன்ற ஊறு விளைவிக்கும் பொருட் களை தவிர்த்து விடுங்கள். நோய் வராமல் பார்த்து கொள்ளுங்கள்.இப்போது சென்னையில் காலரா இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள்.மாரடைப்பால் இறந்தவரை காலராவில் இறந்ததாக திரித்து கூறுகிறார்கள்.இதை யாரும் நம்ப வேண்டாம். எல்லா நாட்டிலும் காலரா வந்து போகும். இங்கு முறையான சிகிச்சை அளிப்பதால் நோயாளிகள் நல்லபடியாக வீடுதிரும்புகின்றனர்.

நலச்சங்கத்தினர் வைத்துள்ள கோரிக்கை களை நிறைவேற்றி தருவேன். உங்கள் குறைகளை தொலைபேசி மூலம் எனக்கு தெரியப்படுத்தினால்உடனே சரி செய்யப்படும்.இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.மேடவாக்கம் பிரதான சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும், பாதாள சாக்கடை,மற்றும் குடிநீர் திட்ட பணியை விரைவில் முடிக்க வேண்டும், குழந்தைகள் முதல் முதியோர் வரை அடிக்கடி விழுந்து எழும் குண்டும் குரூயுமானசாலைகளை உடனே சீரமைக்க வேண்டும், ஆதம்பாக்கத்தில் இருந்து புழுதிவாக்கத்துக்கு தனியாக பஸ் விட வேண்டும் என்று மேயரிடம் நலச்சங்கம்சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

விழாவில்  சிட்லப்பாக்கம்   ராஜேந்திரன்  எம். பி,  கே. பி. கந்தன் எம்.எல்.ஏ,  மண்டல  குழு  தலைவர் ராஜாராம், கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், மணிகண்டன்,நலச்சங்க நிர்வாகிகள் விக்னேஷ் பாபு, மனோகர், சவுமியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மதுரையில் குப்பை லாரிகளில் இருந்து ரோடுகளில் குப்பை விழாமல் தடுக்க நடவடிக்கை: மேயர் ராஜன்செல்லப்பா பேட்டி

Print PDF

மாலை மலர்   04.08.2012

மதுரையில் குப்பை லாரிகளில் இருந்து ரோடுகளில் குப்பை விழாமல் தடுக்க நடவடிக்கை: மேயர் ராஜன்செல்லப்பா பேட்டி


மதுரையில் குப்பை லாரிகளில் இருந்து ரோடுகளில் குப்பை விழாமல் தடுக்க நடவடிக்கை: மேயர் ராஜன்செல்லப்பா பேட்டி

மதுரை, ஆக. 4-மதுரை மாநகராட்சி பகுதிகளை மாசில்லா மதுரை என்ற திட்டத்தின் மூலம் மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் துப்புரவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
 
வார்டுகள் வாரியாக துப்புரவு பணிகள் நடந்து வரும் நிலையில் இன்று மதுரையில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களான பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் தெப்பக குளம் மாரியம்மன் கோவில் பகுதிகளில் துப்புரவு பணி நடந்தது.  
 
இந்த பணிகளை மேயர் ராஜன்செல்லப்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
மதுரை மாநகராட்சியை தூய்மையாக நகராக மாற்ற முதல்வர் அம்மா ஆலோசனையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாசில்லா மதுரை என்ற திட்டத்தை செயல்படுத்தி பகுதி வாரியாக தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
 
இன்று முக்கிய பஸ் நிலையங்கள் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளன. குப்பைகள் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. அப்படி செல்லும் லாரிகளில் இருந்து குப்பைகள் ரோடுகளில் விழுவதாக புகார்கள் வருகின்றன. எனவே அதனை தடுக்கும் வகையில் குப்பை லாரிகளில் விலையுயர்ந்த தார்ப்பாய் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு மதுரை மாசில்லாத நகரமாக உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
 
மேயருடன் கமிஷனர் நந்தகோபால், தெற்கு மண்டலத்தலைவர் சாலை முத்து, மேற்கு மண்டலத் தலைவர் ராஜபாண்டியன், உதவி கமிஷனர் தேவதாஸ், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல், கவுன்சிலர்கள் குமுதா, குமார், வக்கீல் ரமேஷ், நிலையூர்முருகன், திடீர்நகர் பால்பாண்டி உள்பட பலர் உடன் சென்றனர்.  இந்த துப்புரவு பணியின் போது பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலைய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. மதுரை பீ.பி.சாவடி பகுதியில் மேற்கு மண்டலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் துப்புரவு பணி நடந்தது.

 

ஈமு கோழி நிறுவனங்களுக்கு தடை விதிக்க காங்கயம் நகராட்சி மறுப்பு

Print PDF

தினமணி                 01.08.2012

ஈமு கோழி நிறுவனங்களுக்கு தடை விதிக்க காங்கயம் நகராட்சி மறுப்பு

காங்கயம், ஜூலை 31: காங்கயம் பகுதியில் பெருகிவரும் ஈமு கோழி நிறுவனங்களுக்கு தடை விதிக்க காங்கயம் நகராட்சி மறுத்துவிட்டது.

காங்கயம் நகராட்சி கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஜி.மணிமாறன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் எம்.தமிழரசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் 18-வது வார்டு உறுப்பினர் ஜி.வளர்மதி பேசியது: காங்கயம் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்தம் மற்றும் கட்டணக் கழிவறைகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மக்கள் ஏமாறாமல் இருக்க கட்டண விபரம் குறித்து அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். இதே போல, சந்தையிலும் விற்பனைக்கு கொண்டு வரும் பொருள்களுக்கு விதிக்கப்படும் கட்டண விவரம் குறித்த அறிவிப்புப் பலகைகளும் அமைக்கப்பட வேண்டும்.

 நகராட்சித் தலைவர் ஜி.மணிமாறன்: நகராட்சிக்கு சொந்தமான் கழிவறை மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக அந்தக் குத்தகைதாரர்களுக்கு நகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

 கவுன்சிலர் சிபகத்துல்லா (5-வது வார்டு): காங்கயம் நகராட்சிப் பகுதியில் புற்றீசல் போல முளைக்கும் ஈமு கோழி நிறுவனங்களை தடை செய்ய நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

 நகராட்சித் தலைவர்: ஆட்சியர், காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து பெருகிவரும் ஈமு கோழி நிறுவனங்களில் பொதுமக்கள் பணம் செலுத்துகின்றனர். அவர்களது சொந்தப் பொறுப்பில் பணம் செலுத்துவதால், நகராட்சி சார்பில் தடை எதுவும் விதிக்க இயலாது.

கவுன்சிலர் த.சத்யா தமிழரசு (17-வது வார்டு) : எனது வார்டில் குடிநீர்ப் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. கடந்த 20 நாள்களாக குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் பாதிப்பில் உள்ளனர். குடிநீர் சீராகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சித் தலைவர்: குடிநீர்ப் பிரச்னையைப் போக்க ஒவ்வொரு வார்டிலும் ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏ.அமானுல்லா (14-வது வார்டு): நகராட்சி சார்பில் நகரில் நடக்கும் கூட்டங்களில் வார்டு உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. இந்தக் குறையைப் போக்க வேண்டும்.

நகராட்சித் தலைவர்: இனிமேல் நடைபெறும் கூட்டங்களில் வார்டு உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்கப்படும். கூட்டங்களில் அவர்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்படும்.

எம்.ராஜ் (7-வது வார்டு உறுப்பினர்): தாராபுரம் சாலையிலுள்ள ஆரம்பப் பள்ளிக்கு நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

நகராட்சித் தலைவர்: விதிகளின்படி, நகராட்சி செலவில் குடிநீர் வழங்க வழியில்லை. ஆனால், உரிய அதிகாரிகள் முறைப்படி கோரிக்கை வைத்தால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

 


Page 106 of 519