Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தேனி, கம்பம் பகுதிகளில் உணவுப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை

Print PDF

தினமணி                 01.08.2012

தேனி, கம்பம் பகுதிகளில் உணவுப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை

தேனி, ஜூலை 31: தேனி, கம்பம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனை  நடத்திய  உணவுப்  பொருள்  கட்டுப்பாட்டு  அதிகாரிகள்,    மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான காலாவதியான மற்றும் தரமற்ற குழந்தைகள் உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட   உணவுப்   பொருள்  கட்டுப்பாட்டு நியமன அலுவலர் ராஜா, ஆய்வாளர்கள் அறிவுச்செல்வம்,   மதன்குமார்,  பாலமுருகன்,  ஜனகன் ஆகியோர் தேனி, கடற்கரை நாடார் தெருவில் உள்ள மிட்டாய்,பிஸ்கட் உள்ளிட்ட சிறுவர்களுக்கான  உணவுப்   பொருள்கள்மொத்த விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தினர்.

அதில், 3  கடைகளில்  இருந்து  தயாரிப்பாளர்  முகவரி  மற்றும்  தயாரிப்பு தேதி அச்சிடப்படாத உணவுப்  பொருள்  பாக்கெட்கள் மற்றும்   காலாவதியான  உணவுப்   பொருள்  பாக்கெட்களை பறிமுதல்  செய்து, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

இதேபோன்று,  கம்பம்  வாரச்சந்தை  வளாகத்தில்   உள்ள   மிட்டாய்   விற்பனைக்   கடைகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான, தரமற்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.இந்த  சோதனையில்  மொத்தம்  ரூ.1 லட்சம்  மதிப்பிலான  தரமற்ற  உணவுப்   பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினமலர்      01.08.2012

காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

தேனி:தேனியில் உணவு கட்டுபாட்டு அலுவலர்கள் நடத்திய சோதனையில், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜா தலைமையில், அலுவலர்கள் அறிவுசெல்வம், பாலமுருகன், ஜனகன், சரவணன் ஆகியோர் மூன்று மொத்த விற்பனை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு சிறுவர்களுக்கு கேடு விளைவிக்கும் தின்பண்டங்கள், காலாவதியான மிட்டாய் போன்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம்.

கம்பம்: கம்பம் வாரச் சந்தையில் இந்த குழுவினர் சோதனை நடத்தினர். இதில் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் உணவு பொருட்கள், "சாக்லெட்', "கிரீம்' மற்றும் காலாவதியான ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்களை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 

பாலாறு சுத்தமாகிறது!

Print PDF

தினமணி                    31.07.2012

பாலாறு சுத்தமாகிறது!

ஆம்பூர், ஜூலை 30:  ஆம்பூர் பாலாற்றைச் சுத்தப்படுத்தும் பணியை ஆம்பூர் நகராட்சி திங்கள்கிழமை மேற்கொண்டது.

பாலாற்றில்   கொட்டப்பட்டுள்ள  கழிவுகளை  அகற்றுமாறு  நகர்மன்றத்  தலைவர்   சங்கீதா பாலசுப்பிரமணி உத்தரவிட்டார்.  

சுகாதார  ஆய்வாளர்கள் சிவக்குமார்,  மணிவண்ணன்  தலைமையில்  துப்புரவுப்  பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம்  மூலம்  பாலாற்றில்  கொட்டப்பட்டுள்ள    கழிவுகளை    டிராக்டர்கள்  மூலம் அகற்றி அவை நகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

 


Page 107 of 519