Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

உணவை பிளாஸ்டிக் பையில் வைத்து சாப்பிட்டால் ஆபத்து

Print PDF

தினமலர்                 27.07.2012

உணவை பிளாஸ்டிக் பையில் வைத்து சாப்பிட்டால் ஆபத்து

 கரூர்: "சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும்' என கரூர் மாசு கட்டு பாடு வாரிய உதவி பொறியாளர் சதீஸ்குமார் தெரிவித்தார்.

கரூர் நகராட்சி அலுவலகத்தில் குறைந்தளவுள்ள மைக்ரான் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மாசுகட்டுபாடு வாரிய பொறியாளர் சதீஸ் குமார் கூறுகையில், " 40 மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்து விட்டு, கீழே போடுவதால் அவை அழிய 500 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதனால் மண்ணும், தண்ணீரும் கெட்டு போய்விடும்.

சூடான பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை வைத்து சாப்பிடுவதால், அதில் உள்ள டயாக்சீன் மூலம் புற்றுநோய் ஏற்படும்.அசைவ வகைகளை பிளாஸ்டிக் பைகளில் ரத்தத்துடன் வாங்கி சென்று சமைத்து சாப்பிடும் போது, உடலுக்குள் பிளாஸ்டிக் சென்று விடும். எனவே, பிளாஸ்டிக் பொருட்களை உணவு பொருட்களோடு சேர்த்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், சூடான உணவு வகைகளை பிளாஸ்டிக் பையில் வைத்து சாப்பிட கூடாது. சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தைக்கும் பெரியளவில் பாதிப்பு ஏற்படும்' என்றார்.

கராட்சி தலைவர் செல்வராஜ், கமிஷனர் ரவிச்சந்திரன், மாசுகட்டுபாடு வாரிய உதவி பொறியாளர் சம்பத்குமார், வர்த்தக கழக தலைவர் ராஜூ, பாசன வாய்க்கால் சங்க தலைவர் ராஜாமணி பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

 

குப்பை குழியில் மனித உறுப்பு; மருத்துவமனை பற்றி தீவிர விசாரணை

Print PDF
தினமலர்                 27.07.2012

குப்பை குழியில் மனித உறுப்பு; மருத்துவமனை பற்றி தீவிர விசாரணை

குன்னூர் : "குன்னூர் நகராட்சி குப்பை குழியில் மனித உறுப்பு வீசிய மருத்துவமனை கண்டறிப்பட்டால், அந்த மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்குழியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மனித உறுப்புகள் உட்பட மருத்துவ கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்பட்டது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குன்னூர் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நகராட்சி கமிஷனர் சண்முகம் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை ஆய்வாளர் மால்முருகன் தலைமையில், சுகாதரத்துறை ஊழியர்கள் குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

நகராட்சிகளின் மண்டல இயக்குனர் உத்தரவின் பேரில், தீவிர ஆய்வு பணி நடக்கிறது.
"குப்பை குழியில் மனித உறுப்பு வீசிய மருத்துவமனை குறித்து கண்டறிப்பட்டால், அந்த மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என சுகாதார ஆய்வாளர் மால் முருகன் தெரிவித்தார்.

 

சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.200 அபராதம்

Print PDF
தினமலர்                 27.07.2012
 
சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.200 அபராதம்

மதுராந்தகம் : சாலைகளில் குப்பை கொட்டினால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மதுராந்தகம் நகராட்சி அறிவித்து உள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதியிலிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. மாவட்டத்திலேயே, முதன் முறையாக, இந்த பாராட்டத்தக்க நடைமுறை அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

அனைத்து உள்ளாட்சிகளிலும் குப்பை பிரச்னை தலைவிரித்து ஆடு கிறது. திடக்கழிவு மேலாண்மைக்கு, குப்பையில் இருந்து மின்சாரம், குப்பை உரத்தில் காய்கறி சாகுபடி என, பல திட் டங்கள் அறிவிக்கப் பட்டாலும், செயல்பாட்டிற்கு வருவதாக தெரியவில்லை.

எடுக்க, எடுக்க, எடுக்க...மதுராந்தகத்தில், வாரம்தோறும் திங்கட்கிழமை சந்தை நடைபெறும். மருத்துவமனை சாலை, ஜி.எஸ்.டி. சாலை, போன்றவற்றில் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால், பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் குப்பை மலை போல் குவிகிறது. நகராட்சி சார்பில் குப்பை அகற்றப் பட்டாலும், தொடர்ந்து, சாலைகளில் குப்பை வீசப்படுவதால், அவற்றை முழுமையாக அகற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.எடுக்க, எடுக்க, சாலைகளில் குப்பை குறையாததால், நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. நேற்று முன்தினம், மாலையில் நடந்த, நகராட்சி கூட்டத்தில், சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையிலான தீர்மானம் கொண்டு வரப் பட்டது.
 
அபராதம் அதன்படி, முதல் கட்டமாக,மதுராந்தகம் நகராட்சியில் உள்ள பிரதான சாலைகளில் குப்பை கொட்ட தடை விதிக்கப் பட்டு உள்ளது. இதை மீறி குப்பை கொட்டுவோருக்கு, இரண்டு முறை அறிவுரை வழங்கப்படும். அதன் பின்னரும் தொடர்ந்தால், 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று, நகராட்சி அறிவித்து உள்ளது.

இது குறித்து, நகராட்சி தலைவர், மலர்விழிகுமார் கூறும்போது,""முதல் கட்டமாக பிரதான சாலைகளில், குப்பை கொட்ட தடை விதித்து உள்ளோம். இதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. படிப்படியாக, தெருக்களிலும், குப்பை கொட்ட தடை விதிக்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

குப்பை கொட்ட தடை செய்யப் பட்டு உள்ள பகுதிகளில், குப்பையை சேகரிக்க மாற்று ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. அந்த பகுதிகளில், தினமும் காலை 6.30 மணியில் இருந்து 11 மணி வரை, மூன்று லாரிகளில் நகராட்சி ஊழியர்கள் குப்பையை சேகரிக்க வருவர். அவர்களிடம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் சேரும் குப்பையை, ஒப்படைக்கலாம்.உரிமம் ரத்துதடையை மீறி, சாலைகளில் குப்பை கொட்டும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும், தொடர்ந்து மீறும் நிறுவனங்கள் மீது, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் முடிவாகி உள்ளது.
 
இது குறித்து, வியாபாரிகள் சங்க செயலர் மீரான் கூறும்போது,""எங்களில் பலர் ஏற்கனவே இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறோம். மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும், என்பதற்காக நகராட்சி எடுத்துள்ள முடிவை வரவேற்கிறோம்,'' என்றார்.
 


Page 110 of 519