Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நாய்களை பிடித்து இன விருத்தி கட்டுப்பாடு செய்ய மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர்                         25.07.2012

நாய்களை பிடித்து இன விருத்தி கட்டுப்பாடு செய்ய மாநகராட்சி முடிவு

சென்னை:தெரு நாய்களை பிடித்து, இன விருத்தி கட்டுப்பாடு செய்ய, மேலும், ஒரு தொண்டு நிறுவனத்தை, சென்னை மாநகராட்சி அனுமதிக்க <உள்ளது.சென்ன மாநகர பகுதியில், 1.30 லட்சம் நாய்கள் சுற்றித்திரிவது தெரிய வந்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. தெருநாய்களுக்கு, இன விருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்வதோடு, தடுப்பூசி போடும் பணியை, தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மாநகராட்சி செய்து வருகிறது. நாட்டில் முதன் முறையாக, 1996ம் ஆண்டு, சென்னை மாநகராட்சியில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. விலங்கியல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாகிய, எஸ்.பி.சி.ஏ., புளூகிராஸ் ஆப் இந்தியா, பீப்பிள் பார் அனிமல் ஆகிய அமைப்புகள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன.

 சென்னை மாநகராட்சி தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளில், இன விருத்தி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதையடுத்து நாய்களை பிடித்து இன விருத்தி கட்டுப்பாடு செய்ய, கூடுதலாக ஒரு அமைப்பை அனுமதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. "இன்டர்நேஷனல் டிரஸ்ட் ஆப் பீஸ்' என்ற தொண்டு நிறுவனத்தை அனுமதிக்க உள்ளது.இந்த நிறுவனம் ஏற்கனவே, கத்திவாக்கம், மாதவரம் நகராட்சிகளில், நாய்களை பிடித்து, இன விருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதற்கான கட்டமைப்பு வசதிகள் அந்த நிறுவனத்திடம் <உள்ளதால், அதை பயன்படுத்திக் கொள்ள வகை செய்யப்படும் என தெரிகிறது.3,607 நாய்கள் கருணை கொலைசென்னையில் மாதம் ஒன்றுக்கு, 1,400 நாய்கள் பிடிக்கப்பட்டு, இன விருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தடுப்பூசியும் போடப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் (ஏப்., 2009 முதல் மார்ச் 2012 வரை), 54,919 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. 51,238 நாய்களுக்கு இன விருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மிக மோசமாக, நோய் பரப்பும் நிலையில் இருந்த, 3,607 நாய்கள், கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளன. தற்போது, 1.3 லட்சம் நாய்கள் மாநகரில் சுற்றித்திரிவதாக உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லை விரிவாகியுள்ளதால், ஒரு மாதத்தில் பிடிக்கும் நாய்களின் எண்ணிக்கை, 1,700 முதல் 1,900 வரை உயரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம்: 20 இடத்தில் கட்ட மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர்        20.12.2011

மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம்: 20 இடத்தில் கட்ட மாநகராட்சி திட்டம்

திருச்சி: திருச்சி மாநகரில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய் செலவில் 20 இடங்களில் கழிப்பிடங்கள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு சலுகைகள் அரசால் அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் சாய்வுதள மேடை, அவர்கள் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பிடம் ஆகிய, அரசால் கட்டி தரப்பட்டு வருகிறது. இதற்கு முன் முதல்வராக இருந்த கருணாநிதியும், தற்போது முதல்வராக உள்ள ஜெயலலிதாவும் மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படும் துறைமீது முதல்வர் ஜெயலலிதா தனிக்கவனம் செலுத்தி வருகிறார். திருச்சி மாநகரின் பல இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக பயன்படுத்தும் வகையில் கழிப்பிடங்கள் இல்லை என்பது குறையாக உள்ளது. அந்தக் குறையைப் போக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசின் உத்தரவுப்படி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த கழிப்பிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழிப்பிடமும் தலா ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இரண்டு இடங்கள், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்தி சந்தை, ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி கோவில், திருவானைக்காவல், அம்மாமண்டபம், பொன்மலைப்பட்டி மாநகராட்சி திருமண மண்டபம், தேவர்ஹால், மலைக்கோட்டை கோவில் வளாகம். இப்ராகீம் பூங்கா, ஓயாமரி சுடுகாடு, கருமண்டபம் மின்மயான வளாகம், வடக்கு தேவித்தெரு நூலக வளாகம், காஜாபேட்டை நூலக வளாகம், செங்குளம் காலனி நூலக வளாகம், உறையூர் மேட்டுத்தெரு நூலக வளாகம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலக வளாகங்கள் என 20 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் நேச கழிப்பிடங்கள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 

மாநகராட்சி செவிலியர்கள் சீருடையில் மாற்றம் : புடவைக்கு பதிலாக பேன்ட், சட்டை

Print PDF

தினமலர்        20.12.2011

மாநகராட்சி செவிலியர்கள் சீருடையில் மாற்றம் : புடவைக்கு பதிலாக பேன்ட், சட்டை

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. புடவைக்குப் பதில் தனியார் மருத்துவமனைகள் போல், செவிலியர்கள் பேன்ட், சட்டை மற்றும் தொப்பிக்கு மாறுகின்றனர். சென்னை மாநகராட்சியில், மாவட்ட குடும்ப நலத் துறையின் கீழ், 93 நகர நல்வாழ்வு மையங்களும், 24 மணி நேரமும் இயங்கும், 10 மகப்பேறு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. விரிவாக்கப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையும், நகராட்சி மருத்துவமனைகளையும், சுகாதாரத் துறையுடன் கலந்து பேசி, மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி, மகப்பேறு மருத்துவமனைகளில், பணியாற்றும், 82 செவிலியர்கள் தற்போது வெள்ளைப் புடவை, வெள்ளை ஜாக்கெட் அணிந்து பணிபுரிகின்றனர். அறுவைச் சிகிச்சையின்போது, இந்த சீருடை, சிரமமாக உள்ளதாகவும், காலத்திற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதை பரிசீலித்த மாநகராட்சி, தற்போது மகப்பேறு மருத்துவமனையில் உள்ள, 82 செவிலியர்களின் சீருடையை பேன்ட், சட்டைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதன்படி, இளநீலநிற பேன்ட், இளநீலநிற சட்டை, வெள்ளை நிற தொப்பி, வெள்ளை நிற பெயர் பேட்ஜ் சீருடையாக அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி கூறியதாவது: மாநகராட்சியின், 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மருத்துவமனையில், பணியாற்றும் செவிலியர்கள் சீருடையில், காலத்திற்கேற்ப மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஓராண்டுக்கு சீருடைப்படியாக, 1,200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதே தொகை தொடர்ந்து வழங்கப்படும். வசதியை கருதி, மாநகராட்சி பிற மருத்துவமனைகளிலும், சீருடையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து, பரிசீலித்து அமல்படுத்தப்படும். இவ்வாறு சுகாதார அதிகாரி கூறினார். மாநகராட்சியில் புதிதாக இணைந்த பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களும், மகப்பேறு மருத்துவமனைகளும், மாநகராட்சியில் கட்டுப்பாட்டில் வந்தபின், அந்த மருத்துவமனை செவிலியர்களுக்கும் இந்த சீருடை மாற்றத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

- ஆர்.குமார் -

 

 


Page 111 of 519