Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

அகற்றும் பணியில் 440 பேர் மும்முரம் : மெரினாவில் குவிந்தது 100 டன் குப்பை

Print PDF

தினகரன்          19.01.2011

அகற்றும் பணியில் 440 பேர் மும்முரம் : மெரினாவில் குவிந்தது 100 டன் குப்பை


சென்னை, ஜன.19:

காணும் பொங்கல் தினமான நேற்றுமுன்தினம் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் குவிந்தனர். இவர்கள் தங்களுடன் கொண்டு வந்த உணவு மற்றும் தின்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு பொட்டலம் கட்டிவந்த இலை, பிளாஸ்டிக் கவர், வாட்டர் பாக்கெட் உள்ளிட்டவற்றை அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போடாமல் கீழே வீசிச் சென்றனர்.

இதனால் மெரினா கடற்கரை நேற்று காலை குப்பை கூளமாக காட்சியளித்தது. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:

காணும் பொங்கலான நேற்று மெரினாவுக்கு சுமார் 5 லட்சம் பேர் வந்தனர். பெசன்ட் நகர் கடற்கரையில் சுமார் 2 லட்சம் பேர் குவிந்தனர். இவர்கள் தாங்கள் கொண்டுவந்த உணவை சாப்பிட்டுவிட்டு பேப்பர், பிளாஸ்டிக் கவர் மற்றும் வாட்டர் பாக்கெட் ஆகியவற்றை மணல் பரப்பிலும், மெரினா புல்வெளியிலும் வீசியுள்ளனர்.

இவற்றை அகற்ற இந்த 2 இடங்களிலும் மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 440 பேர் ஈடுபடுத்தப்பட்டு சுமார் 100 டன் குப்பை, மணலை தூய்மைப்படுத்தும் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டன. கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, தானியங்கி இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது. பனகல் பூங்கா, ஜீவா பூங்கா, தி.நகர் நடேசன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா உட்பட மாநகராட்சி பூங்காக்களில் மட்டும் 150 டன் குப்பை அகற்றப்பட்டன. இவ்வாறு மேயர் கூறினார்.

ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ப்பை தொட்டிகள்

“மெரினா கடற்கரையில் குப்பை போடாமல் இருக்க தற்போது பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட 120 நவீன குப்பை தொட்டிகள் வைக்கப்பட உள்ளது. ஒரு தொட்டி விலை 12 ஆயிரம். பல கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ள மெரினா கடற்கரை மற்றும் பூங்காக்களை தூய்மையாக பராமரிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று மேயர் தெரிவித்தார்.

 

 

மரத்தின் வேர் பரவியதால் சாக்கடை அடைப்பு கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF
தினகரன்        13.01.2011

மரத்தின் வேர் பரவியதால் சாக்கடை அடைப்பு கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நகராட்சி அதிரடி நடவடிக்கை
 
பொள்ளாச்சி நேரு கல்யாண மண்டப வீதியில் கழிவு நீர் தேங்கிய சாக்கடையில் மோட்டார் பொருத்திய வாகனம் மூலம் கழிவு நீர் வெளியிற்றப்பட்டது.
 
பொள்ளாச்சி, ஜன 13:

பொள் ளாச்சி நேரு திருமண மண்டப வீதியில் அரச மரத்தின் வேர் பரவியதால் சாக்கடையில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் மின் மோட்டார் பொருத்திய லாரி மூலம் கழிவு நீரை அப்புறப்படுத்தியது.

பொள்ளாச்சி நகராட்சியின் 4வது வார்டுக்குட்பட்ட பகுதி வெங்கடேசா காலனி. இங்குள்ள நேரு திருமண மண்டப வீதியின் ஒரு புற சாக்கடையில் கடந்த சில வாரங்களாக கழிவு நீர் சீராக வெளியேறாமல் அப்படியே தேங்கத் துவங்கியது. இதுகுறித்து பொதுமக்களும், அப்பகுதி வார்டு கவுன்சிலரான முரளி (ம.தி.மு.க.) உள்ளிட்டோர் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் செய்தனர். இதனையடுத்து மின் மோட்டார் பொருத்திய லாரி மூலம் மேற்படி பகுதி யில் சாக்கடையில் தேங்கி நின்ற கழிவு நீரை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதா வது, நேரு திருமண மண்ட பவ வீதியின் ஒரு பகுதியில் சாக்கடையை ஒட்டி மிகப்பெரிய அரச மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் வேர்கள் அதிகமாக சாக்கடைக்குள் பரவியுள்ளதால் கழிவு நீர் சீராக வெளியேறாமல் தடைபடுகிறது. கழிவு நீர் அய்யப்பன் கோயில் ரோடு வழியாக வெளியேறும் விதத்தில் அமைக்கப்பட்ட இந்த சாக்கடையில் ஒரு புறம் மேடாக அமைந்துள் ளது. இக்காரணங்களால் கழிவு நீர் சரிவர வெளியேறாமங் அங்கேயே தேங் கியது.தகவல் அறிந்ததும் உடனடியாக மின் மோட்டார் பொறுத்திய லாரி மூலம் தேங்கிய கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. அரச மரத்தின் ஒரு பகுதி வேர்களை மட்டும் அப்புறப்படுத்த வேண்டும் அல்லது சாக்கடையில் கழிவு நீர் செல்ல ஏதுவாக சீரமைக்க வேண்டும். சாக்கடை கழிவு நீர் அங்கு தேங்காதவாறு விரைவில் இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
Last Updated on Thursday, 13 January 2011 07:25
 

உரிமம் பெறாத பால்வியாபாரிகளுக்கு கராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

Print PDF

தினகரன்       13.01.2011

உரிமம் பெறாத பால்வியாபாரிகளுக்கு கராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

பொள்ளாச்சி, ஜன 13:

பொள் ளாச்சி நகரில் சைக்கிள், மொபட் ஆகிய வாகனங்களில் உரிமம் பெறாமல் பால் வியாபாரம் செய்பவர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் நேற்று வெங்கட்ரமணன் ரோடு, மார்க்கெட் ரோடு சந்திப்பு பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் அவ்வழியாக சைக்கிள் மற்றும் மொபட்களில் வந்த பால் வியாபாரிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிடிபட்டவர்களில் எவரும் பால் விற்பனைக்கான உரிமம் பெற வில்லை என்பது தெரியவந்தது. அடுத்த மாத இறுதிக்குள் பால் வியாபாரிகள் நகராட்சியில் கட்டணத்தை செலுத்தி உரிமம் பெற வேண்டும் என்று அதிகாரி கள் எச்சரிக்கை செய்தனர்.

இதுகுறித்து நகர்நல அலுவலர் குணசேகரன் கூறியதாவது, நகராட்சி எல்லைக்குள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் சைக்கிள் மற் றும் மொபட்களில் கேன் களை கட்டி பால் விற்பனை செய்து வருகின்றனர். எந்த உணவு பொருளை விற்பனை செய்வதாக இருந்தாலும் நகராட்சியில் அதற்கான கட்டணத்தை செலுத்தி உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது வியாபாரி எந்த முகவரியில் வசிக்கிறார்?. அவர் விற்கும் பொருள் எங்கு, எவரிடம் வாங்கப்படுகிறது என்ற அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு உரிமம் பெறுவதன் மூலம் உணவு பொருளில் எதாவது கலப்படம் அல்லது தீங்கு ஏற்படும்போது சம்பந்தப்பட்ட வியாபாரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும். இதுபோன்ற உரிமங்களை ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். ஆனால் நகரில் கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு பால்வியாபாரியும் உரிமம் பெறவில்லை. இதனால் நகராட்சிக்கு வரு வாய் இழப்பும் ஏற்படுகிறது. சைக்கிள் மற்றும் மொபட்களில் பால் வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டு உரிமக் கட்டணமாக ரூ. 125 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்த உரிமத்தை பெற வேண்டும். தாமதமானால் அதற்கு மிகக் குறைந்தபட்ச தொகை அபராதமாக விதிக்கப்படும்.
தற்போது நகரில் ஆங் காங்கு வாகன சோதனை நடத்தி பால்வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகும் உரிமம் பெறாமல் பால் வியாபாரம் செய்தால் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


 


Page 114 of 519