தினகரன் 09.12.2010
ஊட்டி மார்க்கெட் ‘பளிச்‘ ஆனது
ஊட்டி, டிச. 9: ஊட்டி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 200 பேரை கொண்டு ஊட்டிமார்க்கெட் பகுதியில் நேற்று முழு தூய்மை மேற்கொள்ளப்பட்டது.
ஊட்டி மார்க்கெட் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கடை உள்ளது. அங்குள்ள சில கடைக்காரர்கள் அவ்வப்போது வீசியெறியும் குப்பையால் மார்க்கெட் வளாகமே குப்பை குளமாக காட்சியளித்தது, மார்க்கெட் பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றி சுகதார சீர்கேடு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று நகராட்சி நிர்வாகம் 200 துப்புரவு பணியாளர்களை கொண்டு முழு தூய்மை பணியை மேற்கொண்டது. இதனால் ஊட்டி மார்க்கெட் பளிச் ஆனது.