Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஊட்டி மார்க்கெட் ‘பளிச்‘ ஆனது

Print PDF

தினகரன்            09.12.2010

ஊட்டி மார்க்கெட் பளிச்ஆனது

ஊட்டி, டிச. 9: ஊட்டி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 200 பேரை கொண்டு ஊட்டிமார்க்கெட் பகுதியில் நேற்று முழு தூய்மை மேற்கொள்ளப்பட்டது.

ஊட்டி மார்க்கெட் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கடை உள்ளது. அங்குள்ள சில கடைக்காரர்கள் அவ்வப்போது வீசியெறியும் குப்பையால் மார்க்கெட் வளாகமே குப்பை குளமாக காட்சியளித்தது, மார்க்கெட் பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றி சுகதார சீர்கேடு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று நகராட்சி நிர்வாகம் 200 துப்புரவு பணியாளர்களை கொண்டு முழு தூய்மை பணியை மேற்கொண்டது. இதனால் ஊட்டி மார்க்கெட் பளிச் ஆனது.

 

பன்றி வளர்ப்போருக்கு எச்சரிக்கை

Print PDF

தினமணி          08.12.2010

பன்றி வளர்ப்போருக்கு எச்சரிக்கை

மதுரை, டிச. 7 : மதுரை மாவட்டத்தில் பன்றி வளர்க்கும் உரிமையாளர்கள் பன்றிகளை பொது இடங்களில் சுற்றித் திரிவதை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது:

பொதுமக்கள் கூடும் இடம், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், சுகாதார வளாகங்கள், பஸ் நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், தொற்றுநோய் பரவும் விதமாகவும் பன்றிகள் சுற்றித் திரிவதாக புகார்கள் வருகின்றன.

நகர்ப்புறங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிப் பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிந்தால், சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் பன்றிகளைப் பிடித்து அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, பொது இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதை மீறும் உரிமையாளர்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 08 December 2010 10:14
 

துர்நாற்றம் வீசிய திருத்தங்கல் செங்குளம் சீரமைப்பு பணி துவக்கம்

Print PDF

தினகரன்             07.12.2010

துர்நாற்றம் வீசிய திருத்தங்கல் செங்குளம் சீரமைப்பு பணி துவக்கம்

சிவகாசி, டிச. 8: தொடர் மழைக்கு நிரம்பியும், கடும் துர்நாற்றம் வீசிய திருத்தங்கல் செங்குளம் கண்மாயை நகராட்சி சுகாதாரத்துறையினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் மழையால் திருத்தங்கல் செங்குளம் கண்மாய் நிரம்பியது. விவசாயத்திற்கும், நிலத்தடி நீருக்கும் பயன்படும் கண்மாயின் பராமரிப்பு சரிவர இல்லாததால் முட்செடிகள் வளர்ந்திருந்தது. மேலும் பிளாஸ்டிக், பாலிதின் குப்பைகள் கண்மாயில் வீசப்பட்டன. இதனால், கண்மாயின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்த மழையால் கண்மாய் நிரம்பியது. ஆனால், கண்மாய் நீரில் பாசிபடர்ந்தும், கழிவு பொருள்கள் மிதந்தும் காணப்பட்டன. கண்மாய் நீரில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் மீண்டும் பாதித்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் செங்குளம் கண்மாயை சுத்தப்படுத்தும் பணியினை நகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று மேற்கொண்டனர். செங்குளம் கண்மாயில் மிதந்த பிளாஸ்டிக் கழிவுகளை துப்புரவு ஊழியர்கள் அகற்றினர். மேலும் கரைபகுதியில் பிளிசிங் பவுடர் கரைசலை ஊற்றினர்.

கண்மாய் கரையோரங்களில் வளர்ந்திருந்த முட்செடிகளை அகற்றினர். இன்னும் ஒரிரு நாட்களில் செங்குளம் கண்மாய் சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெறும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

 


Page 119 of 519