Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதார சீர்கேடுகள் காரணமாக சமாதானபுரத்தில் ஓட்டல் மூடல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினகரன்               02.12.2010

சுகாதார சீர்கேடுகள் காரணமாக சமாதானபுரத்தில் ஓட்டல் மூடல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

நெல்லை, டிச. 2: சுகாதார சீர்கேடுகள் காரணமாக சமாதானபுரத்தில் நேற்று ஒரு ஓட்டலை மாநகராட்சி அதிகாரிகள் மூடினர். மழைக்காலங்களில் நெல்லை மாநகராட்சி ஓட்டல்களில் சுகாதாரம் பேணப்படுவதில்லை. சில ஓட்டல்களில் சமையலறை கள் கழிவுநீர் நிறைந்து ஈக் களின் கூடாரமாக உள்ள தாக மாநகராட்சி கமிஷனர் சுப்பையனுக்கு புகார்கள் சென்றன. இதன்பேரில் சுகாதார துறை அதிகாரிகள் ஓட்டல்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை துண்டு பிர சுரங்களாக அளித்தனர்.

சில ஓட்டல்கள் அதை யும் மீறி அசுத்தமாக காட்சியளியளித்து வருகின்றன. இதை கண்காணிக்க உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, அரசகுமார், முருகன், பெருமாள், பாலு, துப்புரவு மேற்பார்வையாளர்கள் சுப்பிரமணியன், பேச்சிபாண்டி, மணிகண்டன், செல்லப்பா, பாலு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நேற்று இக்குழுவினர் பாளையிலுள்ள 6 ஓட்டல்களில் சோதனை நடத்தினர்.

இதில் சமாதானபுரத் தில் உள்ள ஒரு ஓட்டல் சமையலறை அசுத்தமாக காட்சியளித்தது. உடனடியாக அதை அதிகாரிகள் இழுத்து மூடினர். அங்குள்ள குறைபாடுகளை அறிக்கை யாக தயாரித்து ஓட்டல் ஊழியர்களிடம் அளித்தனர். 3 தினங்கள் தொழில் நடத்த தடை விதித்ததோடு, குறைகளை சரி செய்தபிறகே கடையை திறக்க வேண்டு மென உத்தரவிட்டனர்.

தொடர்ந்து மனகாவலம்பிள்ளை பூங்கா அருகேயுள்ள ஓட்டலில் பாஸ்ட்புட் உணவில் கலக்க வைக்கப்பட்டிருந்த அஜினமோட்டா பாக்கெட்டுகளை அதிகாரிகள் அழித்தனர். ‘மாநகராட்சி விதிமுறைகளை பின்பற்றி ஓட்டல்கள் சூடான வெந்நீரை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதோடு, சுத்தம் பேணவும் முன்வரவேண்டும். அதை மீறும் பட்சத்தில் ஓட்டல்கள் சீல் வைக்கப்படும்என அதிகாரிகள் குழு எச்சரித்துள்ளது. பாளையில் உள்ள ஹோட்டல்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

 

மலைபோல் குவியும் குப்பைகள் மழையால் துர்நாற்றம் அதிகரிப்பு புதிய இடம் தேடி அலையும் நகராட்சி

Print PDF

தினகரன்             02.12.2010

மலைபோல் குவியும் குப்பைகள் மழையால் துர்நாற்றம் அதிகரிப்பு புதிய இடம் தேடி அலையும் நகராட்சி

குமாரபாளையம், டிச.2: குமாரபாளையம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. துர்நாற்றம் காரணமாக இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குமாரபாளையம் நகராட்சியில் தினமும் 10 டன் குப்பைகள் வெளியாகிறது. இந்த குப்பைகளை கொட்டி, தரம் பிரிப்பதற்கு உரக்கிடங்கு இல்லை. குப்பை கிடங்கு அமைக்க அரசு ரூ15 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கு தேவையான இடம் கிடைக்காததால் நகராட்சி குப்பைகளை சேமிக்கவோ, தரம் பிரிக்கவோ, மறு சுழற்சி செய்து உரம் தயாரிக்கவோ முடியாத நிலை உள்ளது. நகராட்சியின் பல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் எடுத்துவரப்பட்டு காவேரி நகர் புது பாலத்தின் அருகே சாலையோரம் கொட்டப்படுகிறது.

வெயில் காலங்களில் குப்பையின் பல பகுதிகள் உலர்ந்து காணப்படும். பழைய பேப்பர் பொறுக்குபவர்கள், சேகரித்து எடுத்துச் செல்வர். அழுகிய பொருட்கள் உள்ளிட்டவற்றை எலிகள், காக்கைகள் உண்ணும். சில நேரங்களில் ஏற்படும் தீ விபத்து காரணமாக குப்பைகள் எரிந்து, சிறிய துகள்களாக மாறிவிடும். இதனால் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை என்பது யாருக்கும் தொல்லை கொடுக்காத கழிவுப் பொருளாக மட்டுமே இதுவரை இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குப்பைகள் உலர்வதற்கு வாய்ப்பு இல்லை. மழை பொழிவின் போது பறவை உள்ளிட்ட உயிரினங்கள் வெளியே வருவதில்லை. இதனால் நகராட்சி குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன. தொடர் மழை காரணமாக இந்த குப்பைகளில் இருந்து பயங்கர துர் நாற்றம் வீசுகிறது. காவேரி நகர் பகுதியில் வசிப்பவர்கள், கடந்து செல்வோர் உள்ளிட்ட பலரும் இந்த நாற்றத்தில் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து நகர மன்ற தலைவர் சேகரிடம். கேட்ட போது, ‘நகராட்சி பகுதியின் விரிவாக்கத்துக்கு தகுந்தாற்போல், குப்பைகளை அழிக்கும் பணிக்கு முக்கியத்துவம் இல்லை என்பது உண்மைதான். குப்பை கொட்டுவதற்கு போதுமான இடம் கிடைக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் இருக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குப்பையில் இருந்து பயனுள்ள மின்சாரம், உரம் போன்றவை தயாரிக்க அனுமதி கேட்டு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளோம். விரைவில் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்என அவர் தெரிவித்தார்.

பயனில்லை..

நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் யாருக்கும் பயனில்லாமல் வீணாகிறது. சின்னச், சின்ன ஊராட்சிகளில் கூட குப்பைகள் பயனுள்ள முறையில் மறு சுழற்சி செய்யப்படுகிறது. மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டு மண்புழு உரம் தயாரிப்பது முதல், மின்சாரம் தயாரிப்பது வரை பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. முறையான இட வசதி இல்லை என்ற ஒரே காரணத்தால் குமாரபாளையம் நகராட்சியில் தினமும் வெளியாகும் 10 டன் கழிவுகள் பயனில்லாமல் வீணாகிறது.

குமாரபாளையம் நகராட்சியில் தினமும் 10 டன் குப்பைகள் வெளியேற்றப்படுகிறது. இடவசதி இல்லை என்ற காரணத்தால் இந்த குப்பைகள் தீயில் எரிந்து நாசமாகிறது. தற்போது மழை காலம் என்பதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. குப்பைகளை தரம் பிரித்து, பயனுள்ள வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பொது மக்கள் அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து

Print PDF

தினமணி                01.12.2010

பொது மக்கள் அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து

கோவை, நவ. 30: பொதுமக்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

கோவை மாநகராட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்படும் முறை குறித்து பெரும்பாலான கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்தனர். கலைஞர் காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. அதிலும் புகைப்படம் எடுக்காதவர்கள், புகைப்படம் எடுத்தும் அட்டை கிடைக்காதவர்கள் நிறைய பேர் உள்ளனர். எனவே அனைத்து பொதுமக்களுக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ஆர்.வெங்கடாசலம் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் நடைபெற்ற விவாதம்:

.சுப்புலட்சுமி (.தி.மு.): தில்லை நகர் பகுதியில் பன்றிக் காய்ச்சலுக்கு இரண்டு பேர் பலியானார்கள். இதனையடுத்து பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி போட பொதுமக்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் கலைஞர் காப்பீட்டுத் திட்ட அட்டை இருந்தால் மட்டும்தான் தடுப்பூசி என்று கூறுகின்றனர். இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எங்கள் பகுதியில் குப்பை அள்ள வந்து கொண்டிருந்த டிராக்டர் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக சிறிய குப்பை வண்டிகளை அனுப்ப வேண்டும் என்றார்.

வெ..உதயக்குமார் (எதிர்கட்சித் தலைவர்): பாதாளாச் சாக்கடை திட்டத்தில் தோண்டப்பட்ட குழிகளை உடனுக்குடன் மூட வேண்டும். அதில் விழுந்து நிறைய பேர் அடிபடுகிறார்கள். மரணங்கள் சம்பவிக்கும் முன்பு மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

ஆர்.எஸ்.திருமுகம் (ஆளும்கட்சித் தலைவர்): உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சமயத்தில் திட்ட சாலைகள் போடப்பட்டன. முக்கிய சாலையை இணைக்கும் குறுக்குச் சாலைகள் பள்ளமாக உள்ளது. இதனை செப்பனிட வேண்டும். நஞ்சுண்டாபுரம் சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து போடச் செல்லும் பொதுமக்கள் பேருந்து வசதி இன்றி நடந்தே செல்கின்றனர். எனவே அந்த மையத்தை ராமநாதபுரம் பகுதிக்கு மாற்றித்தர வேண்டும் என்றார்.

சி. பத்மநாபன் (சி.பி.எம்): வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் குறித்த கணக்கெடுப்பை சரிவர நடத்தி விடுபட்டவர்களை சேர்க்க வேண்டும். விடுபட்டவர்கள் நலத்திட்ட உதவிகளை பெற சிரமப்படுகின்றனர். உக்கடம், சொக்கம்புதூர் மயானங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

என்.முருகேசன் (சி.பி.எம்): மாநகராட்சியின் பல பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. மாறாக பலஇடங்களில் பகல் 11 மணி வரை கூட விளக்குகள் எரிகிறது. இரவில் எரியாத விளக்குகள் எரியவும், பகலில் எரியும் விளக்குகள் அணையவும் உரிய நடவடிக்கை தேவை. வார்டுகள் தோறும் கொசு மருந்து தெளிப்பான் அவசியம் என்றார்.

பி.நாச்சிமுத்து (தி.மு.): குடிசைப்பகுதி மாற்று திட்டத்தின் கீழ் எனது வார்டில் 55 வீடுகள்கட்ட அனுமதி கிடைத்தது. சாலை, குடிநீர் வசதி செய்யப்பட்டும், 18 வீடுகள் கட்டப்படாமல் கிடக்கிறது. ஒப்பந்ததார்களிடம் சொல்லி பணியை முடுக்கி விட வேண்டும் என்றார்.

.சோபனா (காங்கிரஸ்): குடிசைப்பகுதி மாற்றுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான காசோலை, குறித்த நேரத்தில் தரப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. பயனாளிகள் புகைப்படம் எடுத்து கொடுத்தால், வேறு கோணத்தில் எடுத்து வாருங்கள் என திருப்பி அனுப்படுகின்றனர் என்றார்.

எச்.மெகர்பன் (.தி.மு.): மேட்டுப்பாளையம் சாலையில் குழிகள் தோண்டப்பட்டு கிடக்கிறது. இதனை விரைவில் மூட நடவடிக்கை தேவை. காய்கறி மார்க்கெட்டில் அனுமதி பெறாத வியாபாரிகள் உள்ளனர். இதனால் குப்பைகள் அதிகம் சேர்கிறது. மாநகராட்சி பேருந்து நிலையத்தின் பின்புறம் கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கிறது என்றார்.

ஆணையர் அன்சுல் மிஸ்ரா பேசியது:

குடிசை மாற்றுத் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதிஉதவியுடன் நடக்கிறது. இதனால் புகைப்பட ஆவணங்கள் முறையாகக் கேட்கப்படுகிறது. மாநகராட்சியில் 36 ஆயிரம் தெருவிளக்குகள் உள்ளன. இதில் பராமரிப்பில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

வார்டுக்கு ஒரு கொசு மருந்து தெளிப்பான் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை பெயர் மாற்றம் செய்ய கோரும் விண்ணப்பத்துடன் உரியவரின் புகைப்படம் இணைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இடைத்தரகர்களின் ஆதிக்கக்தை நீக்க உதவும் என்றார் ஆணையர்.

Last Updated on Wednesday, 01 December 2010 10:44
 


Page 122 of 519