Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசு ஒழிப்பு பணி

Print PDF

தினகரன்           01.12.2010

கொசு ஒழிப்பு பணி

பட்டுக்கோட்டை, டிச.1: பட்டுக்கோட்டை நகராட்சியில் நேற்று முன்தினம் கொசுஒழிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியாகும் கலன்களை அழித்தல், வீடு வீடாக சென்று சுகாதார கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுடன் முதிர் கொசு அழிப்பு பணிக்காக புகை மருந்து அடித்தல் போன்ற பணிகளை நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் கண்டியன் தெருவில் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், நடராஜன், மாரிமுத்து மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் செய்திருந்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கொசு ஒழிப்பு பணியில் 17 பேர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் இவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

 

வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை

Print PDF

தினகரன்                 01.12.2010

வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை

திருமங்கலம், டிச.1: ஒரு வாரமாக மழைநீர் சூழ்ந்துள்ள திருமங்கலம் குடியிருப்பு பகுதியில் கால்வாய் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

தொடர் மழையால் திருமங்கலம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. இதிலிருந்து வெளியேறிய தண்ணீர் திருமங்கலத்தில் மம்சாபுரம், அண்ணா நகர், அசோக் நகர், என்.ஜி.. நகர், குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்தது.

கலெக்டர் காமராஜ் உத்தரவின் பேரில் தண்ணீர் தேங்குவதற்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்பேரில் 67 வீடுகள் முற்றிலுமாக இடிக்கப்பட்டன. 250 வீடுகள் பகுதியாக அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பை அகற்றியதால் குவிந்த செங்கல், மண் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை உடனே அகற்ற சாலையோரம் ஜே.சி.பி. மூலம் கால்வாய் தோண்டும் பணி நடக்கிறது.

திருமங்கலம் தாலுகா காவல்நிலையத்திலும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வட்டார வள மையக் கட்டிடம் ஆகியவற்றை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அரசு பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், காவல்நிலையம், வட்டார வள மையத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

அரசு & தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் குப்பை அள்ளும் திட்ட ஒப்பந்தம் இணையத்தில் வெளியிட வேண்டும்

Print PDF

தினகரன்             01.12.2010

அரசு & தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் குப்பை அள்ளும் திட்ட ஒப்பந்தம் இணையத்தில் வெளியிட வேண்டும்

புதுடெல்லி, டிச.1: அரசு & தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் வீடுகளில் குப்பை சேகரிக்கும் திட்டம் குறித்த ஒப்பந்த விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று மாநகராட்சிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர் ராகேஷ் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநகராட்சியிடம் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், அரசு & தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படும், வீடுகளில் குப்பை சேகரிக்கும் திட்டம் குறித்து மக்களிடம் தெரிவிக்கப்படவில்லை. இத்திட்டத்தில் அரசுடன் இணைந்து செயல்படும் தனியார் நிறுவனம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதேபோல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எந்த அங்கீகார சான்றும் தரப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில், குப்பை அள்ளும் திட்டத்தை நடத்துவதாக கூறி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் நலச்சங்கத்திடம் வந்து குப்பை தொட்டிகளை தங்கள் பொறுப்பில் கொடுக்கும்படி கேட்டுகின்றனர். இதனால் குப்பை சேகரிக்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள், அதற்கு அளிக் கப்பட்டுள்ள சான்று விவரம் ஆகியவற்றை பற்றிய தகவல் தர வேண்டும் என்று கூறியிருந்தார். மாநகராட்சி சார்பில் இதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அவர் தலைமை தகவல் ஆணையரிடம் இந்த விவரங்களை தரக்கேட்டு விண்ணப்பித்தார். தலைமை ஆணையர் சைலேஷ் காந்தி இந்த மனுவை விசாரணை செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட உத்தவு:

மாநகராட்சி கமிஷனர் உடனடியாக, அரசு & தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் குப்பை சேகரிக்கும் திட்ட ஒப்பந்தம் விவரத்தை தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதை வரும் 20ம் தேதிக்குள் செய்ய வேண்டும். இந்த விவரம் இருந்தால்தான் பொதுமக்கள் தங்களிடம் வரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் உண்மையானவர்கள்தானா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் விவரத்தையும் மாநகராட்சி கமிஷனர் வரும் 20ம் தேதிக்குள் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு சைலேஷ் காந்தி உத்தரவிட்டார்.

 


Page 123 of 519