Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் நகராட்சி அறிவுறுத்தல்

Print PDF

தினகரன்          29.11.2010

குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் நகராட்சி அறிவுறுத்தல்

குளித்தலை, நவ.29: குளித்தலை பகுதியில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலும் கடந்த 9ம்தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதுகுறித்து குளித்தலை நகராட்சி தலைவர் அமுதவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குளித்தலை பகுதியில் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். இதன் மூலம் தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கலாம்.

 

கோவில்பட்டி, புதூரில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்               29.11.2010

கோவில்பட்டி, புதூரில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்

கோவில்பட்டி, நவ. 29: கோவில்பட்டி, புதூரில் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கலெக்டர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் சுகாதார அலுவலர்கள் கடந்த ஒரு மாதமாக ஆய்வு செய்து வருகின்றனர். நகராட்சி கமிஷனர் விஜயராகவன் உத்தரவின்படி கோவில்பட்டி பாரதிதாசன் தெருவில் உள்ள கடையில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது உணவு மாதிரியாக ரவை பாக்கெட் எடுக்கப்பட்டு மதுரையில் உள்ள அரசு பகுப்பாய்விற்கு நகராட்சி உணவு ஆய்வாளர்கள் முத்துகுமார், வெங்கடேஷ் ஆகி யோர் அனுப்பி வைத் தனர்.

மேலும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான சாக்லெட், போன்விட்டா, குளுக்கோஸ் பாக்கெட்டு களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். காலாவதியான உணவு பொருட் களை விற்பனை நிலையங்களில் வைக்கக்கூடாது என்றும், இவைகளை கடை உரிமையாளர்கள் உடனுக்குடன் அழிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நகராட்சி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நக ராட்சி கமிஷனர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

புதூர்: புதூர் ஒன்றிய பகுதியில் உணவு ஆய்வாளர் ஜெய்சங்கர், கயத்தார் மற்றும் கழுகுமலை பேரூ ராட்சி உணவு ஆய்வாளர் பொன்னுராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் உணவு விடுதிகள், டீக்கடைகள், பலசரக்கு கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.2050 மதிப்பிலான காலாவதியான டீத்தூள், அயோடின் கலக்காத உப்பு, தூதுவளை, துளசி, கொய்யா, சைனா மிட்டாய், பிஸ்கெட், கான்பப்ஸ், பச்சை பட்டாணி, அரிசி மாவு, தடை செய்யப்பட்ட சாயங்கள், மைதா, சாயம் கலந்த அப்பளம், காரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் உணவு விடுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், சமையல் அறை, உணவு மூலப்பொருள் இருப்பு அறை, கைகழுவுமிடங்களை சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கினர். புதூர் பகுதி கடைகளில் சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

 

குப்பை சேகரம் செய்யும் பணி, கம்பம் நகராட்சியில் தனியார்மயம்

Print PDF

தினமலர்                    28.11.2010

குப்பை சேகரம் செய்யும் பணி, கம்பம் நகராட்சியில் தனியார்மயம்

கம்பம்: கம்பத்தில் குப்பை சேகரம் செய்யும் பணிகளை தனியார் மயமாக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. தனிநபர் வீட்டு கழிப்பறைகள் 73 சதவீதம் உள்ளது. 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் விதிகளுக்குட்பட்ட கழிப்பறைகள் கிடையாது. சாக்கடையை பொறுத்தவரை 104 கி.மீ., தூர நீளத்திற்கு செல்கிறது. பழுதான, பராமரிக்கப்படாத சாக்கடைகளே அதிகம். இதனால் கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது. தினமும் 22 மெட்ரிக் டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. ஒருநபர் 400 கிராம் வரை குப்பைகளை உருவாக்குவதாக நகராட்சி கூறுகிறது. குப்பைகளை அள்ளுவதோ, அள்ளிய குப்பைகளை குப்பை கிட்டங்கியில் கொண்டு சென்று சேர்ப்பதோ இல்லை. இதனால் பல தெருக்களில் துர்நாற்றம் வீசி வருகிறது.

 பணியிடம் காலி: நகராட்சியில் அனுமதிக்கப்பட்ட(20 ஆண்டுகளுக்கு முன்) துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 135 ஆகும். தற்போது 24 பணியிடங்கள் காலியாக உள்ளது. மக்கள் தொகை, நகர் விரிவாக்கம் போன்றவற்றை கணக்கில் கொண்டால், துப்புரவு பணியாளர்கள் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். நகராட்சியின் செலவு, வருவாயில் 49 சதவீதத்தை தாண்டுவதால் புதிய பணியாளர்களை நியமிக்க முடிவதில்லை. முடிவு: குப்பை சேகரம் செய்யும் பணியை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 24 பணியிடங்களுக்கு மாதந்தோரும் வழங்கப்படும் சம்பளம் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 984 என்றும், அதற்கு தகுந்தாற்போல, டெண்டர் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு துப்புரவு பணியாளருக்கு நாள் ஒன்றிற்கு கூலியாக ரூ. 123 தர மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.

Last Updated on Monday, 29 November 2010 11:53
 


Page 126 of 519