கருமேனி ஆற்றில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வலியுறுத்தல்
Saturday, 20 November 2010 10:28
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 20.11.2010
கருமேனி ஆற்றில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வலியுறுத்தல் சாத்தான்குளம், நவ.19: சாத்தான்குளம் கருமேனி ஆற்றில் குப்பைக் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
சாத்தான்குளம் திமுக. நகரச் செயலர் ஏ.எஸ்.ஜோசப் தலைமையில் கல்விக் கழக நிறுவனர் சுப்பிரமணியம், பன்னம்பாறை ஊராட்சித் தலைவர் சந்திரா, திமுக கிளைச் செயலர் செல்வராஜ், இயற்கை யோகா நலவாழ்வு சங்கச் செயலர் ராமகிருஷ்ணன், திமுக ஒன்றிய பொருளாளர் முஸ்தபா உள்ளிட்ட 50-க்கு மேற்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரனிடம் அளித்த மனு: ÷சாத்தான்குளத்தில் உள்ள கருமேனி ஆற்றின் வழியாக மழைக்காலங்களில் வைரவன்தருவை, புத்தன்தருவை குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. ÷தற்போது இந்த ஆற்றில் பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால் ஆறு மேடாகியுள்ளது.
குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு வைரவன்தருவை, புத்தன்தருவை குளங்களில் தங்குகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் குளத்தின் அடியில் படிவதால் மழைநீர் நிலத்தடியில் இறங்க வழியில்லை. இதனால் நிலத்தடி நீரின் தன்மை மாறாமல் போய்விடும். இது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் சுகாதார சீர்கேடும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை ஆற்றில் கொட்டாமல் பேரூராட்சிக்கென்று தனியாக இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டும் என்றனர் அவர்கள்.
÷ இது சம்பந்தமாக பன்னம்பாறை ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை பன்னம்பாறை ஊராட்சித் தலைவர் சந்திரா ஆட்சியரிடம் அளித்தார்.
|
கொசு ஒழிப்பு வாகனங்களின் பின்னால் சிறுவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: மேயர் வேண்டுகோள்
Saturday, 20 November 2010 10:26
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 20.11.2010
கொசு ஒழிப்பு வாகனங்களின் பின்னால் சிறுவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் : மேயர் வேண்டுகோள்
![](http://www.dinamani.com/Images/article/2010/11/20/smoke.jpg)
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் , சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள எஸ்.எம்.நகரில் வெள்ளிக்கிழமை கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்.
சென்னை , நவ.19: கொசு ஒழிப்பு வாகனங்களின் பின்னால் சிறுவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் 10 மண்டலங்களில் உள்ள சாலைகளில் கொசுப்புழுக்கள் மற்றும் கொசு ஒழிக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை சிந்தாதிரிப்பேட்டை எஸ்.எம்.நகரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது :
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து தெருக்களிலும் 180 புகைப்பரப்பு இயந்திரங்களும், வாகனத்தில் பொருத்தப்பட்ட பெரிய 27 புகைப்பரப்பு இயந்திரங்களின் மூலமும் கொசு ஒழிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
பேருந்து செல்லும் சாலைகள் மற்றும் குறுகிய சாலைகளில் சுமார் 3,300 கிலோ மீட்டர் நீளத்துக்கு புகைப்பரப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் 1,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் புகைப்பரப்பும் வாகனங்கள் தங்கள் தெருக்களில் வரும்போது வீட்டின் கதவுகள் , ஜன்னல்களை திறந்து வைத்து, வீட்டின் உள்ளே போகுமாறு பார்க்க வேண்டும்.
கொசு ஒழிப்பைத் தடுக்க புகைப்பரப்பும் வாகனங்கள் வரும்போது , சிறுவர்கள் வண்டியின் பின்னால் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கடந்த ஒரு வாரமாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வீடுகளில் இருந்த உபயோகமற்ற 27 டன் பொருள்கள் அகற்றப்பட்டன என்றார் மேயர். மாநகராட்சி ஆய்வாளர் தா.கார்த்திகேயன், சுகாதாரத்துறை துணை ஆணையர் ஆஷிஷ் குமார், மாநகராட்சி ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, சுகாதார அலுவலர் டாக்டர் குகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் மலேரியா பாதிப்பு : தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி
Saturday, 20 November 2010 07:28
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 20.11.2010
திண்டுக்கல்லில் மலேரியா பாதிப்பு : தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் நகராட்சி பகுதியில் தேங்கியுள்ள கொசுக்களால் மலேரியா பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெறாததால் பல வார்டுகளில் ஆள் விழும் அளவிற்கு பள்ளங்கள் உள்ளன. மழை நீர் இப்பள்ளங்களில் குளம்போல் தேங்கியுள்ளது. இதுதவிர நகரில் முக்கிய குளங்கள் கொசு உற்பத்தி தலமாக உள்ளது. மலேரியா: கடந்த செப்டம்பரில் 42 பேரும், அக்டோபரில் 77 பேரும் இம்மாதத்தில் இதுவரை 7 பேரும் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடவடிக்கை: நகராட்சி சுகாதார அதிகாரி வரதராஜன் கூறுகையில்,"48 வார்டுகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சுகாதார ஆய்வாளர் தலைமையில் 21 பேர் கொண்ட சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் மேல்நிலை தொட்டிகளில் மருந்து ஊற்றுதல், மிஷின் உதவியால் புகை மருந்து தெளித்தல் போன்ற மலேரியா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்,'என்றார்.
|
|
|
|
Page 131 of 519 |