Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காய்ச்சல் பாதிப்பு பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் : சேலம் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 20.10.2010

காய்ச்சல் பாதிப்பு பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் : சேலம் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

சேலம்: "சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் ஃபோன் மூலம் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்' என்று மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி தலைமையில் ஏடிஸ் கொசு ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள் ஆகியோருக்கு கொசு ஒழிப்பு குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. கொசு ஒழிப்பு பணியை முறையாக மேற்பார்வையிடவும் அறிவுரை வழங்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்துக்கு பின், மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மழை காலங்களில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகிறது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு 10 வார்டுகள் வீதம் அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 20 கை புகை தெளிப்பான்கள் மற்றும் நான்கு வண்டிகள் மூலம் புகை தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கடிதம் வழங்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் அக்., 20, 21, 22 ஆகிய தேதிகளில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படுகிறது. தியேட்டர்களில் கொசு ஒழிப்பு குறித்த விளம்பரம் செய்யப்பட உள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளிலும் தினசரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு, தனிக்குழு மூலம் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று கொசு ஒழிப்புப் பணி மேற்கெள்ளப்படுகிறது.எனவே, காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களின் விபரம் தெரிவித்தல் மற்றும் ஆலோசனைகளை 2210667 என்ற ஃபோன் எண்ணிலும், 96776 66257, 94435 14508, 98657 24276 ஆகிய மொபைல் ஃபோனிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் கூறலாம். மழை நீர் தேங்காமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 21 October 2010 05:39
 

ரூ20 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டது பனையூர் ஏரி சீரமைப்பு பாதியில் நிறுத்தம்

Print PDF

தினகரன் 19.10.2010

ரூ20 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டது பனையூர் ஏரி சீரமைப்பு பாதியில் நிறுத்தம்

துரைப்பாக்கம், அக். 19: சோழிங்கநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பனையூர் குடுமியாண்டித்தோப்பு ஏரி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. தற்போது ஏரியின் கிழக்குப் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் ஏரியே இருக்காது, எனவே ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சோழிங்கநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில், ஏரியை சீரமைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை செயல் அலுவலர் சம்பத், மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, கலெக்டருக்கு அறிக்கை வழங்கினர்.

அதை ஏற்று, பேரூராட்சி நிர்வாகம் ஏரியை சீரமைத்து கரையைப் பலப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதற்காக பேரூராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது. ரூ20 லட்சத்துக்கு டெண்டர் எடுத்தவர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணியை தொடங்கினார்.

பணி 30 சதவீதம் நடந்த நிலையில், பணியை நிறுத்தும்படி செயல் அலுவலர் சம்பத் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பணி நிறுத்தப்பட்டது. இப்பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செயல் அலுவலர் சம்பத்திடம் கேட்டதற்கு, "ஏரியை சீரமைக்கும் பணிக்கான டெண்டர் கடந்த மாதம் விடப்பட்டு ஒப்பந்ததாரரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. பணி தொடங்கி நடந்து வந்தது. இப்போது ஏன் பணி நிறுத்தப்பட்டது என்று நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. உயர் அதிகாரிகளிடமும், பேரூராட்சி தலைவரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.

 

 

சிவகங்கை மாவட்டத்தில் காலாவதி உணவு பொருட்கள் அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினகரன் 18.10.2010

சிவகங்கை மாவட்டத்தில் காலாவதி உணவு பொருட்கள் அதிகாரிகள் ஆய்வு

சிவகங்கை, அக். 18: சிவகங்கை மாவட்டத்தில் காலாவதியான உணவுப்பொருட்கள் குறித்து உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை ஆகிய 3 நகராட்சிகளிலும், மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட 12 பேரூராட்சிகளிலும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூட்டாக சேர்ந்த ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்ததில் உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்த கலப்பட உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இனிவரும் காலங்களில் பாதுகாப்பான உணவு பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

 


Page 145 of 519