Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசு ஒழிப்புக்கு நகராட்சி அழைப்பு

Print PDF

தினமலர் 13.10.2010

கொசு ஒழிப்புக்கு நகராட்சி அழைப்பு

நாமக்கல்: "நாமக்கல் நகராட்சியில் உள்ள தண்ணீர் தொட்டி, கிணறுகளில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் அபேட் மருந்து தெளிக்கப்பட உள்ளது' என, நகராட்சி சேர்மன் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் நகராட்சி பொது சுகாதார பிரிவில், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுப்புழு ஒழிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. .டி.எஸ்., என்ற வகை கொசு புழுக்களை கட்டுப்படுத்தும் அபேட் மருந்து அனைத்து தண்ணீர் தொட்டிகளிலும் தெளிக்கப்பட உள்ளது. எனவே நகர மக்கள், பணியாளர்கள் கொண்டு வரும் கொசுப்புழு ஒழிப்பு மருந்தை பெற்று வீட்டில் தண்ணீர் தொட்டிகளில் ஊற்றிக் கொள்ள வேண்டும். வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் குழாய்களுக்கு வலை கட்ட வேண்டும். செப்டிக் டாங்க் தொட்டியில் உடைப்பு இருந்தால், அதை சரி செய்து கொசு உற்பத்தியாகும் அனைத்து வழிகளையும் அடைத்து, நகராட்சி கொசு உற்பத்தி இல்லாத நகரமாக விளங்க உதவ வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்க: மாநகராட்சி கமிஷனர் அறிவுரை

Print PDF

தினமலர் 13.10.2010

கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்க: மாநகராட்சி கமிஷனர் அறிவுரை

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் கொசுக்கள் மூலம் நோய்கள் பரவுவதை தடுக்க, மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: *மழை நீர் மற்றும் குடிநீரில் உற்பத்தியாகி பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. *வீட்டில் உள்ள மழை நீர் தேங்ககூடிய பயன்படுத்தாத உரல், தேங்காய் மூடி, டயர், பெயின்ட் டப்பாக்கள், பூந்தொட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். *வீட்டில் குடிநீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். *தண்ணீரில் உள்ள புழுக்கள் சிறிது நாட்களில் கொசுவாக மாறிவிடும். எனவே, தண்ணீர் சேகரிக்கும் தொட்டிகளில் சிறிய புழுக்கள் இருந்தால், நீரை துணியால் வடிகட்ட வேண்டும். *பயன்படுத்தாத கிணறுகள் மற்றும் நீர்த்தொட்டிகளில் கம்பூசியா வகை மீன்களை வளர்ப்பதால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தலாம். இதற்கு மாநகராட்சி மலேரியா பிரிவை அணுகவும். *செப்டிங் டேங்க் காற்று போக்கியில் கொசுவலையை கட்டி வைக்கவும். செப்டிங் டேங்கை ஓட்டை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். *குளிர் காய்ச்சல் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலப்பாளையத்தில் குப்பை, இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

Print PDF

தினகரன்   13.10.2010

மேலப்பாளையத்தில் குப்பை, இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

நெல்லை, அக்.13: மேலப்பாளையத்தில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுபுற சுகா தாரம் பாதிப்பு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சி நிர்வாக வசதிக்காக நெல் லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளின் கழிவுகள், கழிவுநீர் ஓடையிலிருந்து அள்ளப்படும் குப்பைகள், இறைச்சிகடைகளின் கழிவுகள் ஆகியவற் றை மண்டல பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் கொட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதில் நெல்லை மண்டல பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை பேட்டை சுத்தமல்லி பம்பிங் ஸ்டேஷன் அருகிலும், பாளை மண்டலத்தில் அள்ளப்படும் குப்பைகளை கேடிசிநகர் அருகே உள்ள கிருபாநகர் பகுதியிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் அள்ளப்படும் குப்பைகள் மாநகராட்சி ஆடறுப்பு மனை அருகே நாங்குனேரி சாலை பகுதியிலும் கொட்டப்பட்டுவருகிறது. ராமையன்பட்டி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபட்டது. இதனால் ராமையன்பட்டி கிராம மக்கள் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகையால் தற்போது கிருபாநகர், பேட்டை சுத்தமல்லி, மேலப்பாளையம் பகுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலப்பாளையத்தில் ஆடு, மாடு, கோழி மற்றும் தெருவுக்கு ஒரு மீன்கடை என இறைச்சிகடைகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன.

இதில் கோழி இறைச்சிக்கடைகள் துவங்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் புற்றீசல் போல மேலப்பாளையம் முழுவதும் கோழி கடைகளின் ஆதிக்கம் உள் ளது. ஆடு மற்றும் மாட்டிறைச்சி கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு களை விட கோழி இறைச்சி கடைகளிலிருந்து வெளி யாகும் கழிவுகள் அதிகமாகும்.

இங்குள்ள தெருக்களிலிருந்து கொண்டுவரப்படும் குப்பைகள், இறைச்சி கழிவு கள் நாங்குனேரி சாலை பகுதி யில் கொட்டப்படுகிறது. இதனால் நெல்லை நகர், அமுதா நகர், சுவிசேஷ நகர், பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதி பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தற் போது மழை பெய்துள்ள தால் இறைச்சி கழிவுகளிலிருந்து வெளியாகும் துர்நாற்றம் அதிகரித்து பொது மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்க ளை பயமுறுத்தி வரும் பன்றி காய்ச்சல் நோய் கோழி கழிவுகளிலிருந்து பரவுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன. ஆகையால் அதிகளவில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகளில் முக் கிய பங்குவகிப்பது பிளாஸ் டிக் பைகள். இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுப்புற சுகா தாரம் பாதிக்கிறது. நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பிளாஸ் டிக் பொருட்களுக்கு கட் டாய தடைவிதிக்க வேண் டும்.

நகர்புறத்தில் புற்றீசல் போல் தோன்றும் மீன்கடை கள், இறைச்சிகடைகள் மீது மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகர பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை மக்கும் மக்காத குப்பையாக தரம்பிரித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகை யில் குப்பைகளை அழிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்பதே சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலபாளையம் சந்தை அருகே உள்ள நாங்குனேரி சாலை பகுதியில் மலைபோல் குப்பை கொட்டப்பட்டுள்ளது.

 


Page 150 of 519