Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் வசதி இல்லை தனியார் பராமரிப்பில் பஸ் நிலையம் நகராட்சி நிர்வாகம் முடிவு

Print PDF

தினகரன் 13.10.2010

பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் வசதி இல்லை தனியார் பராமரிப்பில் பஸ் நிலையம் நகராட்சி நிர்வாகம் முடிவு

பொள்ளாச்சி, அக். 13: பொள்ளாச்சி நகரில் உள்ள புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டுகளில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து அதிகமானதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே உள்ள இடத்தில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் இப்பணி துவங்கப்பட்டு விரைவாக முடிக்கப்பட்டது. தற்போது, நகரில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகள் என இரு பஸ் ஸ்டாண்டுகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு பஸ் ஸ்டாண்டுகளிலும் துப்புரவு பணிகள், பயணிகளுக்கான குடிநீர் வசதி, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணி களை நகராட்சி நிர்வாகமே மேற்கொண்டு வந்தது.

தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக பல கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தங்குதல், அசுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றால் பயணிகள் முகம் சுளிக்கும் அளவிற்கு பஸ் ஸ்டாண்டில் சுகாதாரக் கேடு ஏற்பட்டது. மேலும் பயணிகளுக்கு சரிவர குடிநீர் கிடைப்பதில்லை, பஸ் ஸ்டாண்டின் உட்புறங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல், சுவர் விளம்பரங்கள் எழுதுதல் என பஸ் ஸ்டாண்டுகளில் அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுதொடர்பாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். பஸ் ஸ்டாண்டுகளில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாததால் பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண பஸ் ஸ்டாண்டுகளை பராமரிக்கும் பணியினை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி கூறியதாவது: பழைய பஸ் ஸ்டாண்டிலும், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டிலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நகராட்சியில் போதுமான ஊழியர்கள் இல்லை. ஆகவே இப்பணிகளை கவனிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்குதல், துப்புரவு பணி களை மேற்கொண்டு குப்பை கள் தேங்காமல் சுத்தமாக வைத்தல், இரவு நேரங்களில் கண்ட இடங்களில் படுத்து தூங்குபவர்களை பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேற்றுதல், தெரு விளக்குகளை முறையாக பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை தனியார் மேற்கொள்வார்கள். இதற்கென ஆண்டுக்கு சுமார் ரூ. 6 லட்சம் செலவாகும் என்று மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இறுதி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இரு பஸ் ஸ்டாண்டுகளையும் பராமரித்து பாதுகாக்கும் பணி விரைவில் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு ராஜேஸ்வரி கூறினார்.

 

கொசுத் தொல்லையைத் தடுக்க நடவடிக்கை தேவை

Print PDF

தினமணி 12.10.2010

கொசுத் தொல்லையைத் தடுக்க நடவடிக்கை தேவை

விருதுநகர், அக். 11: விருதுநகரில் சுகாதாரச் சீர்கேட்டை விளைவிக்கும் குப்பைகளால் கொசுத் தொல்லைகள் அதிகரித்துள்ளதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

விருதுநகர் நகராட்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். ஆணையர் ஜான்சன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் விவாதம், தலைவர் பதில் வருமாறு:

இந்திரா: 36-ம் வார்டில் தெருவிளக்குகள் எரியவில்லை. விளக்குகள் எரிய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

பாலகிருஷ்ணன்: தெருவிளக்குகளைப் பராமரிக்க ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது எனக் கடந்த கூட்டத்தில் தெரிவித்தனர். ஆனால் நகரில் பல இடங்களில் இன்னும் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. எனவே கூடுதலாக ஆள்களை நியமிக்க வேண்டும்.

கார்த்திகா கரிக்கோல்ராஜ் (தலைவர்): ஏற்கெனவே ஆள்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. தினசரி வேலை ஆள்களும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறி வர மறுக்கின்றனர். இங்குள்ள எலெக்ட்ரிசியன்கள் மின் கம்பம் ஏற மறுக்கிறார்கள். புதிய ஆள்களை நியமிக்க நிதி ஆதாரம் இல்லை. மேலும் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. எனவே மின்வாரியம் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயக்குமார்: தெருவிளக்குகள் சம்பந்தமாக உடனே நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு அனுமதியுடன் ஆள்களை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர் ஜான்சன்: வருவாய் அதிகமுள்ள நகராட்சியில் மட்டும் சிறப்பு நியமனம் செய்து கொள்ள அனுமதி உண்டு. எனவே தாற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படும்.

சுவேதா: எனது வார்டில் குப்பை, கழிவுநீர் தேங்கி தெருக்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இருந்து வருகிறது. பலமுறை சுகாதாரப் பணியாளர்களை அழைத்து அவற்றை அகற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனால் ஆள்கள் பற்றாக்குறை எனக் கூறி இன்னும் அப்புறப்படுóத்தாமல் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் இடமாக உள்ளது. தற்போது தெருக்களில் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

பவுன்ராஜ்: எனது வார்டில் இது போலவே கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது. மேலும் குப்பைகள் அள்ளப்படாமல் அப்படியே உள்ளது.

கார்த்திகா கரிக்கோல்ராஜ் (தலைவர்): இந்தப் பிரச்னைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் குழாய் இணைப்புகள் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலைகள் முடிந்ததும் குடிநீóர் குழாய் இணைப்பு வழங்கப்படும். சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ 9 கோடி வந்துள்ளது. எனவே விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும்.

 

கம்பம் ஓட்டல்களில்சுகாதார பிரிவினர் சோதனை

Print PDF

தினமலர் 12.10.2010

கம்பம் ஓட்டல்களில்சுகாதார பிரிவினர் சோதனை

கம்பம்:கம்பத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நகராட்சியின் சுகாதார பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி சுகாதாரமற்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட மீன் பொறியல்களை பறிமுதல் செய்தனர். கம்பம் மெயின் ரோட்டில், பாலம் அருகில் உள்ள அசைவ ஓட்டலில் விற்கப்படும் மீன் பொறியல்கள் சுகாதாரமற்ற வகையில் இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் குழு ஓட்டலில் ஆய்வு நடத்தியது. அங்கிருந்த பத்து கிலோ மீன் பொறியல் மற்றும் மீன் குழம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்த மீன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் "குறிப்பிட்ட ஓட்டலில் விற்கப்படும் மீன் பற்றி புகார் வந்தது. சோதனை நடத்தி மீன் பொறியல்களை பறிமுதல் செய்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட மீன் பொறியலின் சாம்பிள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். முடிவு வந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


Page 151 of 519