Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்க திட்டம்

Print PDF

தினமணி 08.10.2010

பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்க திட்டம்

கோவை,​​ அக்.7: கோவை மாநகராட்சி முழுவதும் ஒரு லட்சம் பன்றிக்காய்ச்சல் ​ விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு பன்றிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

​ ​பன்றிக்காய்ச்சல் ​ பரவும் விதம்,​​ தடுப்பு முறைகள்,​​ நவீன சிகிச்சை ​ முறைகள்,​​ தடுப்பு ஊசி மற்றும் மருந்து உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் தயார் செய்யப்பட்டது.​ துண்டுப் பிரசுர விநியோக துவக்க நிகழ்ச்சி,​​ மாநகராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.​ மாநகராட்சி மேயர் ஆர்.​ வெங்கடாசலம் இதனை துவக்கி வைத்தார்.​

ஆணையர் அன்சுல் மிஸ்ரா,​​ சுகாதாரக் குழுத்தலைவர் நாச்சிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.​ மாலை வரை 10 ஆயிரம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.​

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 28 ஆயிரம் மாணவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் இந்த பிரசுரங்களை விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக,​​ மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அருணா தெரிவித்தார்.

 

மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ​ சோதனை

Print PDF

தினமணி 08.10.2010

மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ​ சோதனை

கோவை,அக்.​ 7: தரமற்ற தண்ணீரை நிரப்புவதாக வந்த புகாரை அடுத்து,​​ ​ மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

கோவை டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில்,​​ தரமற்ற தண்ணீரை நிரப்புவதாக பொது மக்களிடம் இருந்து மாநகராட்சி ​ நிர்வாகத்திற்கு புகார் வந்தது.​ இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில்,​​ அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை சோதனையிட்டனர்.​ சுத்திகரிப்பு இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.​ தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கேன்களில் லேபிள்கள் முறையாக ஒட்டப்படாதது கண்டறியப்பட்டது.​ குடிநீரில் சுகாதாரக் குறைபாடு உள்ளதா என அறிய,​​ தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ​ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தண்ணீரின் தரத்தில் குறைபாடு இருப்பது உறுதியானால் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என,​​ மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா ​ தெரிவித்தார்.

 

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி தீவிர நடவடிக்கை

Print PDF

தினமணி 08.10.2010

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி தீவிர நடவடிக்கை

கம்பம்,​​ அக்.​ 7:​ தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பராவாமல் தடுப்பதற்காக தெருக்களின் கழிவு நீர் ஓடைகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நகராட்சியின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.​ ​

​ ​ ​ ​ ​ உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சி பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து,​​ மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் நகராட்சிப் பகுதியில் சுகாதாரத் துறையினர் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.​ நகராட்சியின் சார்பில் அனைத்து வார்டுகளிலும்,​​ கழிவுநீர் ஓடைகளில் கொசு மருந்து அடிக்கும் பணியில் கூடலூர் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

​ ​ ​ ​ கொசு மருந்து அடிக்கும் பணியினை நகராட்சி தலைவர் ஜெயசுதாசெல்வேந்திரன்,​​ ஆணையர் சுந்தரம்,​​ நகராட்சி சுகாதர மேற்பார்வையாளர் சரவணன்,​​ சுகாதார ஆய்வாளர்கள் குமார்,​​ தினேஷ் ஆகியோர் நேரில் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

​ ​ ​ டெங்கு போன்ற தொற்று நோய்கள் பராவாமல் இருக்க தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும்,​​ தண்ணீரைக் காய்ச்சி குடிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாக நகராட்சித் தலைவர் ஜெயசுதா செல்வேந்திரன் தெரிவித்தார்.​​​

 


Page 152 of 519