Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பள்ளபட்டி பேரூராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் பணியாளர்கள் தீவிரம்

Print PDF

தினகரன் 08.10.2010

பள்ளபட்டி பேரூராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் பணியாளர்கள் தீவிரம்

அரவக்குறிச்சி, அக். 8: அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டி பேரூராட்சி சார்பில் தெருக்களில் புகை மருந்து அடித்து கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கோடை காலம் முடிந்து மழைக்காலம் காலம் தொடங்கியுள்ள இந்நிலையில், ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் சாக்கடைகளில் கொசு உற்பத்தியாகும். இதன் மூலம் டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் பொதுமக்களை தாக்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கையாக நோய் பரவுதலை தடுக்கும் வகையில், பேரூராட்சி தலைவர் தோட்டம் பசீர்அகமது ஆலோசனையின்படி பள்ளபட்டி பேரூராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் செந்தில் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் தீவிர கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் கொசு ஒழிப்பு மருந்துப் புகை அடிக்கும் இயந்திரம் மூலம் தெருக்களில் அடிக்கப்பட்டது. இதனை பேரூராட்சி தலைவர் தோட்டம் பசீர்அகமது பார்வையிட்டார். பேரூராட்சி உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஜாபர்அலி, பிச்சை, ஜமால் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

 

கோவை மாநகராட்சி பகுதியில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு ஒரு லட்சம் நோட்டீஸ் விநியோகம்

Print PDF

தினகரன் 08.10.2010

கோவை மாநகராட்சி பகுதியில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு ஒரு லட்சம் நோட்டீஸ் விநியோகம்

கோவை, அக். 8: பொதுமக்களிடம் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு லட்சம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட இருப்பதாக மாநகராட்சி மேயர், கமிஷ னர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் பன்றிக்காய்ச்சல் தடுப்பது குறித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் பரவும் முறை, தடுப்பு முறை குறி த்து ஒரு லட்சம் நோட்டீஸ் மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்டது. இதனை பொதுமக்களிடம் சேர்க்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக், சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநி யோகத்தை நேற்று துவக்கி வைத்தனர்.

இதுகுறித்து மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் தெரிவித்ததாவது:

கோவையில் பன்றிக்காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிப்புள்ளோருக்கு டேமி ப்ளூஎன்ற மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகரம் முழுவதிலும் நோட்டீஸ் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோட்டீஸ் விநியோகிக்கப்படும். மேலும் 72 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் மூலம் இந்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பன்றிக்காய்ச்சல் குறித்து தெளிவான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

 

பெரியாறு கால்வாய் குப்பையை அகற்றுவது யார்: நகராட்சி, பொதுப்பணித்துறை மோதல்

Print PDF

தினமலர் 08.10.2010

பெரியாறு கால்வாய் குப்பையை அகற்றுவது யார்: நகராட்சி, பொதுப்பணித்துறை மோதல்

மேலூர்: தண்ணீர் வரும் முன் பெரியாறு கால்வாயை சுத்தப்படுத்திய குப்பையை கரைகளில் குவித்து வைத்துள்ளனர். அவை மீண்டும் கால்வாயில் சரிந்து விழுவதுடன், அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது.

அக். 2ல் வைகை அணையில் இருந்து ஒரு போக சாகுபடி பகுதியான மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கால்வாயில் தண்ணீர் வரும் முன், பெரிய கால்வாய்கள், சிறிய கால்வாய்கள் மற்றும் மதகு ஆகியவை சுத்தம் செய்யப்படும். விவசாயிகள் வசம் ஒப்படைக்கப்படும் இப் பணி, இந்த ஆண்டு பொதுப் பணித்துறை சார்பில் மேற் கொள்ளப்பட்டது. கால்வாயில் கடந்த ஓராண்டில் தேங்கியிருந்த குப்பையை இயந்திரங்களின் உதவியுடன் அள்ளி இரு கரைகளிலும் போடப்பட்டது. மலை போல் உயர்ந்துவிட்ட இக்குப்பை அப்புறப்படுத்தாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. மேலூர் நகராட்சிக்குட்பட்ட இடத்தில் செல்லும் பெரியாற்று கால்வாயில் அதிகளவு குப்பை அகற்றப்பட்டன. அள்ளிய குப்பையை அகற்றாமல் அங்கேயை விட்டு விட்டதால், அவ்வப்போது பெய்யும் மழையில் இவை சரிந்து மீண்டும் கால்வாயில் விழ ஆரம்பித்துள்ளது. இத்துடன் இதில் இருந்து கடும் துர்நாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளதால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் அப்துல் ரசீத்திடம் கேட்ட போது : நகராட்சி எல்கைக்குட்பட்ட இடங்களில் கொட்டப்படும் குப்பையை நகராட்சி தான் அள்ள வேண்டும். நாங்கள் வாய்க்காலை சுத்தம் செய்யப் போவதை முன் கூட்டியே நகராட்சியிடம் தெரிவித்து, இருவரும் சேர்ந்து பணிகளை மேற் கொள்வோம் என்று கூறினேன். அவர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாலும், தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நாங்கள் குப்பைகளை அள்ளி கரைகளில் போட்டுள்ளோம். இவற்றை அப்புறப்படுத்த வேண்டியது நகராட்சி நிர்வாகம் தான் என்று கூறினார்.

நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அய்யனார் கூறியதாவது : கால்வாயை சுத்தம் செய்து, அதில் இருக்கும் மண்ணை அப்புறப்படுத்த வேண்டியது பொதுப் பணித்துறையினரின் வேலை. எங்களிடம் இருக்கும் ஒரு டிராக்டரை வைத்துக் கொண்டு, இவ்வளவு குப்பையை நாங்கள் அள்ள முடியாது. கடந்த ஆண்டும் நாங்கள் குப்பையை அள்ளவில்லை. கரைகளில் கிடக்கும் குப்பையை அள்ள வேண்டியது பொதுப் பணித்துறையினர் தான் என்று கூறினார்.

அரசு அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி, தங்கள் பொறுப்புகளை தட்டி கழிக்கின்றனர். இதனால் பெரிதும் பாதிப்பு அடைவது இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தான். இந்த குப்பையை அகற்ற வேண்டியது யார் ? என்பதை இவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் முடிவு செய்து, உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

 


Page 153 of 519