Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற 60 மோட்டார் பம்புகள்; கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

Print PDF

மாலை மலர் 07.10.2010

சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற 60 மோட்டார் பம்புகள்; கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற
 
 60 மோட்டார் பம்புகள்;
 
 கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

சென்னை, அக். 7- வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் சுமார் 600 கிலோ மீட்டர் நீள மழைநீர் வடிகால் தூர் வாரப்பட்டுள்ளது. இன்னும் 200 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. வட சென்னையில் பி.கால்வாய், தென் சென்னையில் மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இவற்றை நேரில் பார்வையிட்ட மேயர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

வீராங்கல் ஓடை விருகம் பாக்கம் கால்வாய், கொளத்தூர், மாதவரம் உபரிகால்வாய், பி.கால்வாய், நல்லான் கால்வாய் போன்றவை தூர் வாரப்பட்டு வருகின்றன.

12 சுரங்கப்பாதைகளில் மழைநீரை வெளியேற்றவும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை அகற்றவும் 60 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழைநீர் அதிகம் தேங்கினால் அவற்றை துரிதமாக வெளியேற்ற 50 எச்.பி. திறன் கொண்ட 7 மோட்டார்கள் ரூ.40 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ளது.

அனைத்து மண்டல அலுவலகங்களிலும் எங்கும் எளிதாக எடுத்து செல்லும் வசதியுடன் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிக மழை பெய்து வெள்ளம் வந்தால் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல 54 மீட்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசம்

Print PDF

தினமணி 07.10.2010

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசம்

சேலம், அக். 6: சேலம் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

÷சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சலுகைக் கட்டணத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடும் பணியை புதன்கிழமை காலை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

÷பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் இன்ஹேலர், தடுப்பூசி என இரண்டு வகைகளாக உள்ளன. இதில் இன்ஹேலர்கள் வெளி மார்க்கெட்டில் ரூ 200 முதல் ரூ 400 வரையிலும், தடுப்பூசிகள் ரூ 400 முதல் ரூ 600 வரையிலும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் பொதுமக்களுக்கு சலுகை விலையில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு சார்பில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்ஹேலர்கள் ரூ 115-க்கும், தடுப்பூசி ரூ 225-க்கும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இங்கு தடுப்பூசி போடப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவது குறித்து அரசு திட்டமிட்டு வருகிறது. அடுத்த ஒரு வாரத்தில் இலவச தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் ஆட்சியர்.

Last Updated on Friday, 08 October 2010 07:45
 

புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற்றும் திட்டப்பணிகள் தீவிரம்

Print PDF

தினகரன் 07.10.2010

புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற்றும் திட்டப்பணிகள் தீவிரம்

விழுப்புரம், அக். 7: விழுப்புரம் புதிய பஸ்நிலையம் கடந்த 2000ம் ஆண்டு திறப்பு விழா கண்டது. தினமும் ஆயிரக்கனக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் மழைக்காலத்தில் பஸ்நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் ஓட்டுநர்கள், பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். மழை நீரை வெளியேற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திட்டமிடப்பட்டது. அதற்காக ரூ.1.25 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பஸ் நிலையத்தில் இருபுறமும் வாய்க்கால் அமைத்து பின்னர் அந்த நீரை பம்புசெட் மூலம் அங்கு கட்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் சென்றடைய செய்யும் வகையில் திட்டமிடப்பட்டது. அந்த ஆழ்துளை கிணற்றில் வந்து சேரும் மழை நீரை சாலமேடு ஏரிக்கு திருப்பி விடும் வகையில் திட்டப்பணி கடந்த ஆண்டு துவங்கியது.

இதுவரை பணிகள் முழுமையாக முடியவில்லை. மழை பெய்தால் பஸ்நிலையத்தின் புதுவை பஸ் கள் நிற்கும் இடத்தில் மழை நீர் தேங்கியிருக்கும். கடந்த சில வாரத்திற்கு முன்பு பெய்த மழைக்கு கூட மழை நீர் குளம்போல் தேங்கியிருந்தது. இதற்கு காரணம் பணிகள் முடிக்கப்படாதது தான்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மழை காலம் தொடங்கவிருக்கும் நிலையில் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. என்ன காரணம் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மழை காலம் தொடங்குவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் புதுவை பஸ்நிற்கும் பகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இதுபோல் புதிய பஸ்நிலையத்தை சுற்றியுள்ள பெருந்திட்ட வளாகம், கிழக்கு விஜிபி நகர், கமலா நகர் கோர்ட் வளாகம் போன்ற பகுதிகளில் மழை காலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கும். மழை நீர் வெளியே செல்ல வழியில்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே பஸ்நிலையத்திற்கு வழி வகுத்தாற்போல் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 


Page 154 of 519