Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஆணையர் கார்த்திகேயன் பேட்டி மழை பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் மாநகராட்சி

Print PDF

தினகரன் 07.10.2010

ஆணையர் கார்த்திகேயன் பேட்டி மழை பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் மாநகராட்சி

சென்னை, அக்.7: சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட தா.கார்த்திகேயன் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் ரிப்பன் மாளிகையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பருவ மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தீயணைப்பு, காவல் துறை, வருவாய், உட்பட 30க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டது. மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மழை பாதிப்புகளை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

சுரங்கப்பாதைகளில் மழைநீரை அகற்ற ஏற்கனவே 60 மோட்டார் பம்புசெட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 78 குதிரை சக்தி கொண்டதாகும். இது தவிர 88 மோட்டார் பம்புகள் மண்டல அலுவலகங்களில் தயாராக உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கும் மக்களை தங்க வைக்க 54 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு உணவு வழங்க 4 பெரிய சமையல் கூடம் மற்றும் 15 சிறிய சமையற் கூடங்களும் இருக்கிறது.

மேலும், மழை கடுமையாக இருந்தால் அந்த நேரங்களில் தடுப்பு பணிகளை விரைவுபடுத்தி கண்காணிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கலாம் என்று அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாய்கள் மூலமே மழைநீரை வடியச்செய்ய வேண்டும். சில இடங்களில் கழிவுநீர் குழாய்கள் வழியாக மழைநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கழிவு நீரேற்ற நிலையங்களில் பாதிக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் தலைமைச் செயலாளர் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதை கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கொசுமருந்து அடிக்கப்படுகிறதா? கண்காணிக்க செயற்பொறியாளர்

சென்னையில் குப்பை தேக்கமின்றி அகற்றப்படும். சாலைகளில் உள்ள பள்ளங்களை தார்க்கலவை கொண்டு சரி செய்யப்படும். இது போர்க்கால அடிப்படையில் செய்யப்படும். புதிதாக தார்சாலை போடும் போது அதன் தரம் உறுதி செய்யப்படும். கொசுத்தொல்லை கட்டுப்படுத்தப்படும். இதற்காக சம்மந்தப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சரியாக செய்கிறார்களா, ஒவ்வொரு நாளும் எந்தந்த பகுதிகளில் கொசுமருந்து அடித்தார்கள், புகைபரப்பினார்கள் போன்ற விவரங்கள் மண்டல அளவில் பெறப்பட்டு கண்காணிக்கப்படும். இந்த மூன்று முக்கிய பணிகளும் நல்ல முறையில் தினமும் நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் அந்தஸ்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். தெருவிளக்குகள் பராமரிப்பும் உறுதி செய்யப்படும். பெருங்குடி குப்பை வளாகத்தில் குப்பையில் இருந்து மின்சாரம், உரம் போன்றவை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்து தனி நபர் ஒருவர் அப்பீல் செய்துள்ளார். அந்த அப்பீலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

 

கொசு ஒழிப்புக்கு முன்னுரிமை : மாநகராட்சி கமிஷனர்

Print PDF

தினமலர் 07.10.2010

கொசு ஒழிப்புக்கு முன்னுரிமை : மாநகராட்சி கமிஷனர்

சென்னை : ""நகரில் குப்பை அகற்றும் பணி, கொசு ஒழிப்பு மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறோம்,'' என மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.

நேற்று அவர் அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சியில், ஏற்கனவே நடக்கும் பணிகள், தொடர்ந்து நடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொசு ஒழிப்பு பணிக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படும். கொசு ஒழிப்பு பணியில், ஈடுபடும், மலேரியா துறை ஊழியர்கள் எவ்வாறு பணி புரிகிறார்கள் என்பதை ஆய்வு செய்து, முறையாக மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

கொசு ஒழிப்பு புகை அடிக்கும் வாகனங்களில், நான்கு ரிப்பேராக உள்ளது. அவை சரி செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படும். நகரில், குப்பை எடுக்கும் பணியும் தீவிரப்படுத்தப்படும். சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்வதோடு, புதியதாக போடப்படும் சாலைகள், தரமாக போட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சியில், மண்டலம் வாரியாக பணிகளை ஆய்வு செய்ய மண்டல அதிகாரிக்கும் மேலாக, கண்காணிப்பு பொறியாளர் அந்தஸ்தில், முக்கிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய குப்பைக் கொட்டும் வளாகங்களில், குப்பையில் இருந்து உரம் மற்றும் செங்கல் தயாரிக்கும் பணி விரைவில் துவங்கப்படும்.

மழைக்காலத்தை சமாளிக்க, மாநகராட்சி ஆயத்தமாக உள்ளது. மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள பன்னிரெண்டு சுரங்கப் பாதைகளில், அறுபது மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில், தண்ணீர் தேங்கினால் வெளியேற்ற எண்பது மோட்டார் பம்புகள் மாநகராட்சி வசம் தயார் நிலையில் உள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டு, குடியிருப்புகளை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு உணவு வழங்க, போதுமான உணவுப் பொருட்கள் இருப்பு உள்ளது.

ஒரு மணி நேரத்தில் 80 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கும் வகையில், 19 உணவு கூடங்கள் உள்ளன. அளவுக்கு அதிகமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், நிவாரணம் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, பத்து மண்டலங்களுக்கும் ஐ..எஸ்., அதிகாரிகள் மேற்பார்வை அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

Last Updated on Thursday, 07 October 2010 07:46
 

நகராட்சி குப்பையை கொட்ட காவனூர் கிராமத்தினர் மீண்டும் எதிர்ப்பு

Print PDF
தினமணி 06.10.2010

நகராட்சி குப்பையை கொட்ட காவனூர் கிராமத்தினர் மீண்டும் எதிர்ப்பு

அரக்கோணம்,​​ அக்.5: அரக்கோணம் நகராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளை காவனூர் சில்வர்பேட்டையில் கொட்டுவதற்கு சில நாள்களாக அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவனூர்,​​ சில்வர்பேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கொட்டும் தளத்தினால் ​ அப்பகுதியில் வசிப்போர் சுகாதார சீர்கேடுகளை சந்தித்து வருவதாக காவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் தலைமையில் 3 நாள்களாக வீடுகளில் கருப்புக் கொடி

ஏற்றும் போராட்டம் நடத்தப்படுகிறது.​ அத்துடன் குப்பை கொட்டும் வாகனங்களையும் அப்பகுதியினர் தடுத்து நிறுத்தி வந்தனர்.

அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நகர்மன்றத்தின் அவசரக் கூட்டத்தில்,​​ குப்பைகள் கொட்டுவதை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,​​ திங்கள்கிழமை காலை குப்பை கொட்ட வந்த நகராட்சி ஊழியர்களை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.​ இப்போராட்டத்தில் இந்திய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் வி.எஸ்.ஐசக் ,​​ பாமக மாவட்டச் செயலர் பெ.​ சண்முகம்,​​ அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் ஏ,எம்.பார்த்தீபன் ஆகியோரும் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை கோட்டாட்சியர் முகுந்தன்,​​ வட்டாட்சியர் பழனிவேலு,​​ நகராட்சி ஆணையர் மனோகரன்,​​ டிஎஸ்பி மகேந்திரவர்மன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.​ அதையடுத்து திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட குப்பைகளை மட்டும் கொட்டுவதற்கு கிராமத்தினர் அனுமதித்தனர்.

 


Page 155 of 519