தினகரன் 04.10.2010
வடவள்ளி பேரூராட்சியில் ரூ19 லட்சத்தில் 3 இடங்களில் மூலிகை விளையாட்டு பூங்கா
தொண்டாமுத்து£ர், அக்.4:கோவை அருகே வடவள்ளி பேரூராட்சி 16வது வார்டு ஐஓபி காலனி, 11வது வார்டு அருண் நகர் ஆகிய இடங்களில் தலா.ரு.4 லட்சத்து 50 ஆயிரத்திலும், 3வது வார்டு ராஜ் ரெசிடென்சி பகுதியில் ரூ9
லட்சத்து 75 ஆயிரத்தில் மூலிகை செடிகளுடன் விளையாட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பூங்கா திறப்பு விழாவுக்கு பேரூராட்சி துணை தலைவர் போலீஸ் சிவசாமி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சந்திரன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் அமிர்தவல்லிசண்முகசுந்தரம் மூலிகை பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். விழாவில் நேசம் அறக்கட்டளை நிறுவன தலைவர் சண்முகசுந்தரம், வார்டு உறுப்பினர்கள் குமுதம்குப்புசாமி, துரைராஜன், ராயப்பன், சின்னதங்கம், வேலுசாமி, ஜெயபிரகாஷ், கலைஞர் தமிழ் பேரவை ஒன்றிய செயலாளர் மருதமலை குப்சன், முன்னாள் கவுன்சிலர் மருதமலை ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.