Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நகராட்சி ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறியும் முகாம்

Print PDF

தினமணி 29.09.2010

நகராட்சி ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறியும் முகாம்

விழுப்புரம், செப். 28: விழுப்புரம் நகராட்சி ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறிதல் முகாம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

÷விழுப்புரம் அரிமா குடும்பம் மற்றும் நகராட்சி இணைந்து நடத்திய இந் நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் ஆர்.குபேரன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ் தொடங்கி வைத்தார். உஸ்மான் டயாபெடிக் சென்டர் டாக்டர் எச். பஷீர்அகமது, நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள், உணவு முறைகள் குறித்து நகராட்சி ஊழியர்களுக்கு விளக்கினார். பின்னர் சுமார் 50 ஊழியர்களுக்கு நீரிழிவு பரிசோதனை செய்யப்பட்டது.

÷தொடக்க நிகழ்ச்சியில் செயலர் வி.மகேஷ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் எம்.முத்துமாணிக்கம். அரிமா நிர்வாகிகள் ஏ.கோபி, எம்.பி.வடிவேல், டி.பழனியப்பன், ஏ.ராஜேந்திரன், ஏ.பி.நீலமேகவண்ணன், எம்.சரவணன், எம்.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

÷நகராட்சி ஆணையர் அ.க.சிவக்குமார், பொறியாளர் கு.பார்த்தீபன், பணி மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்.அழகப்பன் நன்றி கூறினார்.

 

குடிநீரை காய்ச்சிக் குடியுங்கள்

Print PDF

தினமணி 29.09.2010

குடிநீரை காய்ச்சிக் குடியுங்கள்

கோபி, செப்.28: கோபியில் குடிநீரை காய்ச்சிக் குடிக்கும்படி பொதுமக்களுக்கு கோபி நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோபி பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பவானி ஆற்றிலிருந்து நீரேற்றம் செய்யப்படும் தண்ணீர் கோபி நகராட்சிப் பகுதிக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதனால் கோபி நகராட்சிக்கு உள்பட்ட வார்டு பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி பயன்படுத்த ஆணையாளர் குப்பமுத்து கேட்டுக் கொண்டுள்ளர்.

 

கவுன்சிலர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

Print PDF

தினமலர் 29.09.2010

கவுன்சிலர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு நேற்று பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த மாநகராட்சி மன்றக் கூடத்தில் கவுன்சிலர்களுக்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும் என்று கவுன்சிலர்கள், கோரிக்கை வைத்தனர். மன்றக் கூட்டம் முடிந்ததும் கவுன்சிலர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது. 92 கவுன்சிலர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கடந்த ஒரு வாரத்தில் 15 ஆயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும், பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள் குடிசை பகுதிகளில் வினியோகிக்கப்பட்டதாகவும், மேயர் தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 29 September 2010 08:16
 


Page 160 of 519