Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பன்றிக்காய்ச்சல் இலவச தடுப்பூசி விரைவில் மருந்துகள் பெறப்படும்

Print PDF

தினகரன் 27.09.2010

பன்றிக்காய்ச்சல் இலவச தடுப்பூசி விரைவில் மருந்துகள் பெறப்படும்

கோவை, செப். 27: ஏழைகளுக்கு பன்றிக்காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி போட மருந்துகள் விரைவில் பெறப்படும் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலர் சுப்புராஜ் கூறினார்.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 180க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 24 பேர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை முதன்மை செயலர் வி.கே.சுப்புராஜ் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் சிகிச்சை சிறப்பு வார்டை நேற்று பார்வையிட்டார். பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது:

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதுவரை 800 பேர் கண்டறியப்பட்டு 700 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 100 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். கோவை மாவட்டத்தில் நிலைமை கட்டுக்குள் தான் உள்ளது. பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டாலும் அதுபற்றிய விவரங்களை உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிக்கு தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்தில் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் மாநகராட்சி சுகாதார மையங்களில் தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. 28ம் தேதி (நாளை) முதல் கோவை அரசு மருத்துவமனையிலும் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசிக்கு ரூ225ம்,மூக்கில் செலுத்தும் மருந்துக்கு

ரூ100ம் கட்டணமாக வசூலிக்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்படாது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு இலவச தடுப்பூசி போட தேவையான மருந்துகளை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் மருந்துகள் பெறப்பட்டு தடுப்பூசி போடும் பணி துவங்கவுள்ளது. இவ்வாறு சுப்புராஜ் கூறினார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், ஆர்எம்ஓ சிவப்பிரகாசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

நோயாளிகளுக்கு காய்கறி சூப்

பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசு செயலர் சுப்புராஜ் நேரில் விசாரித்தார். அப்போது நோயாளிகள் பலருக்கு வெளியில் இருந்து உணவு வாங்கி தரப்படுவது, நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்கள் அடிக்கடி வெளியில் சென்று வருவது தெரியவந்தது.

பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் இருந்தே தினமும் காலையில் காய்கறி சூப் வழங்கவேண்டும். நோயாளிகளுக்கான உணவையும் அரசு மருத்துவமனையில் இருந்து தான் தரவேண்டும். எக்காரணம் கொண்டும் வெளியில் இருந்து உணவு தரக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

 

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு டாமிபுளூ மாத்திரை வினியோகம் பன்றி காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

Print PDF

தினகரன் 24.09.2010

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு டாமிபுளூ மாத்திரை வினியோகம் பன்றி காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

கோவை, செப் 24:கோவை மாநகரில் பன்றி காய்ச்சல் பரவினால் உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவமனைகளுக்கு 5 ஆயிரம் டாமிபுளூ மாத்திரை வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை வரை 37 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 20 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். புறநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநரகம் முடுக்கி விடப்பட்டுள்ளது. தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி பகுதியில் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் மாநில சுகாதாரத்துறை இணை இயக்குநர் அமுதாதேவி, மாநகராட்சி நல அலுவலர் அருணா மற்றும் மாநகராட்சி மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர். புறநகர் பகுதிகளை போல் மாநகராட்சியில் பன்றி காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் வெகு குறைவு. பன்றி காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்ட புலியகுளம், சாய்பாபா காலனி போன்ற பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் இணை இயக்குநர் அமுதாதேவி கூறுகையில், "மாநகராட்சி பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனாலும் பரவாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மாநகராட்சி மருத்துவமனைகளில் மட்டும் டாமிபுளூ மாத்திரை 5 ஆயிரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது போதுமானதாகவே இருக்கும். தேவைப்பட்டால் மேலும் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," என்றார்.

 

பன்றி காய்ச்சல் தடுப்பு தீவிரம் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு டாமிபுளூ மாத்திரை வினியோகம்

Print PDF

தினகரன் 24.09.2010

பன்றி காய்ச்சல் தடுப்பு தீவிரம் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு டாமிபுளூ மாத்திரை வினியோகம்

கோவை, செப் 24: கோவை மாநகரில் பன்றி காய்ச்சல் பரவினால் உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவமனைகளுக்கு 5 ஆயிரம் டாமிபுளூ மாத்திரை வினி யோகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை வரை 37 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 20 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். புறநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநரகம் முடுக்கி விடப்பட்டுள்ளது. தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி பகுதியில் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் மாநில சுகாதாரத்துறை இணை இயக்குநர் அமுதாதேவி, மாநகரா ட்சி நல அலுவலர் அருணா மற்றும் மாநகராட்சி மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர். புறநகர் பகுதிகளை போல் மாநகராட்சியில் பன்றி காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் வெகு குறைவு. பன்றி காய்ச் சல் அறிகுறி கண்டறியப்பட்ட புலியகுளம், சாய்பாபா காலனி போன்ற பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள் ளது.

பின்னர் இணை இயக்குநர் அமுதாதேவி கூறுகை யில், "மாநகராட்சி பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனாலும் பரவா மல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மாநகராட்சி மருத்துவமனைகளில் மட்டும் டாமிபுளூ மாத்திரை 5 ஆயி ரம் இருப்பு வைக்கப்பட்டுள் ளது. இது போதுமானதாகவே இருக்கும். தேவைப்பட்டால் மேலும் வழங்கு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," என்றார்.

பள்ளிகளுடன் இன்று ஆலோசனை:

பன்றி காய்ச்சல் அதிக பாதிப்பு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கே ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் 12 வயதுக்குட்பட்டவர்கள் அதிகளவில் மருத்துவமனைக ளில் சிகிச்சை பெறுகின்றனர். பள்ளிகளில் குழந்தைகளுக்கு தேவையான தடு ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, முன்னெச்சரிக் கை பரிசோதனை நடத்துவது, பாதிக்கப்பட்டவர்க ளுக்கு விடுப்பு அளிப்பது குறித்து இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி முதல்வர்கள் பங்கேற்கும் ஆலோ சனை கூட்டம் நடக்கிறது.

 


Page 162 of 519