Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பன்றி காய்ச்சல் தடுப்பூசி போடுவதற்கு தனி இடம்

Print PDF

தினகரன் 23.09.2010

பன்றி காய்ச்சல் தடுப்பூசி போடுவதற்கு தனி இடம்

தர்மபுரி, செப்.23: தர்மபுரி நகரமன்ற கூட்டம் தலைவர் ஆனந்த குமார் ராஜா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆணையாளர் அண்ணா துரை, கவுன்சிலர்கள் நாட்டான் மாது, சந்திரமோகன், வேணுகோபால், மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நகராட்சி வார்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ12 லட்சத்தில் 14 பிளாஸ்டிக் டேங்க் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகர சாலை ஓரங்களில் இரவை பகலாக்கும் வகையில் ரூ25 லட்சத்தில் லைட் வெளிச்சம் ஏற்படுத்தப் பட உள்ளது. இதற்கான நிதி சென்னை நகர ஊர் அமைப்பு இயக்குனரிடம் கேட்கப்பட்டுள்ளது. நகர பகுதியில் உள்ள குமாரசாமிபேட்டை, சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளி, உருது பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், மராமத்து பணிகள் மேற்கொள்ளவும் ரூ22லட்சம் நிதி ஒதுக்கீடு கேட்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தி.மு.. கவுன்சிலர் சந்திரமோகன் பேசும்போது, பன்றி காய்ச்சல் தொற்று நோயால் தமிழகத்தில் உயிர்பலி ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் பன்றி காய்ச்சலுக்கான தடுப்பூசி மற்றும் மருந்து வழங்கப்படுகிறது. அந்த மாதிரி மருந்துகளை தர்மபுரி நகராட்சி பகுதியில் வழங்க தனி இடத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று பேசினார். அதற்குபதில் அளித்து தலைவர் பேசு கையில், பன்றிகாய்ச்சலுக்கான தடுப்புஊசி தர்மபுரி நகராட்சிக்கு இன்னும் வரவில்லை. வந்தபிறகு மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி தனி யாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தர்மபுரி கவுன்சிலர் கோரிக்கை

கிருஷ்ணகிரியில் நடந்த தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் கறிக்கோழி வளர்ப்போர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினர். உள்படம்: சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ராமகவுண்டர் பேசினார்.

 

பன்றிக்காய்ச்சல் பீதி எதிரொலி கொசு ஒழிக்கும் பணி இன்று துவக்கம் விழுப்புரம் நகராட்சி தீவிரம்

Print PDF

தினகரன் 23.09.2010

பன்றிக்காய்ச்சல் பீதி எதிரொலி கொசு ஒழிக்கும் பணி இன்று துவக்கம் விழுப்புரம் நகராட்சி தீவிரம்

விழுப்புரம், செப். 23: பன்றிக்காய்ச்சல் பீதி எதிரொலி யால் விழுப்புரம் நகராட்சியில் இன்று முதல் கொசு ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல், டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய் களை கட்டுப்படுத்துவதற்கு கொசுக்களை ஒழிப்பதற் கான ஆலோசனைக்கூட் டம் விழுப்புரம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நகர்மன்ற தலைவர் அலுவலகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் சிவக்குமார், பூச்சியியல் ஆய் வாளர் முனுசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையா ளர் சிவகுரு, சுகாதார ஆய் வாளர் மூர்த்தி, கவுன்சிலர்கள் ஸ்ரீவினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், விழுப்புரம் நகராட்சியில் கொசுக்களை ஒழிக்க 15 பேர் குழு அமைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் கொசுமருந்து அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேங்காய் ஓடு, பாட்டில்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படும். தொடர்ந்து 6 நாட்களுக்கு 36 வார்டுகளிலும் புகை மருந்து அடிக்கப்படவுள்ளது.

நகரில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் கொசுக்கள் வராமல் இருக்க ஆயில்பால் போடப்படும். முக்கியமாக மசூதி, கோயில்கள், பள்ளக்கூடங்கள் போன்ற இடங்களில் பரவலாக கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்றார்.

பின்னர் சுகாதாரத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் 12பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த 12 பேரோடு தொடர்புடைய உறவினர்கள், நண்பர்களை கண்டறிந்து சுமார் 70 பேருக்கு மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் போதுமான அளவுக்கு மாத்திரைகள் உள்ளது என்று தெரிவித்தார்.

 

தாமரைக்குளத்தில் கொசு மருந்து அடிப்பு

Print PDF

தினமணி 22.09.2010

தாமரைக்குளத்தில் கொசு மருந்து அடிப்பு

பெரியகுளம், செப். 20: தேனி மாவட்ட ஆட்சியர் ஆணையின் பேரில், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் பொருட்டு, கொசு மருந்து அடிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

இப் பேரூராட்சிப் பகுதியில் உள்ள வீதிகள், சாக்கடைகள் உள்பட 15 வார்டுகளிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் வி.அன்பழகன், நிர்வாக அலுவலர் பி.காமாட்சி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் இப் பணி நடைபெற்றது. மேலும், தண்ணீர் தொட்டிகளை மூடிவைக்குமாறும், குடிநீரை காய்ச்சி குடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


Page 164 of 519