Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சென்னையில் ஆறு இடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

Print PDF

தினமலர் 21.09.2010

சென்னையில் ஆறு இடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

சென்னை:"பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, சென்னையில் ஆறு இடங்களில் போடப்படுகிறது' என, மாநகர மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையில் உள்ள ஆறு பகுப்பாய்வு கூடங்களில், பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டத்தை, வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி பகுப்பாய்வு கூடத்தில் மேயர் சுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:பொதுமக்களும், சிறுவர்களும் பன்றிக் காய்ச்சல் நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, இரண்டு செயல்களை அவசியம் பின்பற்ற வேண்டும். ஒன்று, கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

மற்றொன்று, வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள பகுப்பாய்வு கூடம், .வெ.ரா., சாலை பகுப்பாய்வு கூடம், சூளை செல்லப்ப முதலி தெருவில் உள்ள பகுப்பாய்வு கூடம், சைதாப்பேட்டை கருணாநிதி வளைவு அருகில் உள்ள பகுப்பாய்வு கூடம், திருவான்மியூர் கிழக்கு தெரு காமராஜர் அவென்யூவில் உள்ள பகுப்பாய்வு கூடம், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சி ரத்தப் பரிசோதனை நிலையம் ஆகிய ஆறு இடங்களிலும் மாநகராட்சி சார்பில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி போடப்படுகிறது.சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டைக் காட்டிலும், இந்த பகுப்பாய்வு கூடங்களில் மூக்கு மூலம் தெளிக்கப்படும் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு 100 ரூபாயும், ஊசி மூலம் போடப்படும் தடுப்பூசிக்கு 200 ரூபாயும் என, குறைந்த விலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போடப்படுகிறது.தடுப்பூசிகள் போடப்படும் இந்த ஆறு இடங்களிலும் காலை 8 முதல் மாலை 3 மணி வரை போடப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் இலவசமாக போடுவது பற்றி அரசின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக போடப்படும்.இவ்வாறு சுப்ரமணியன் பேசினார்.

 

அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ50 குறைப்பு

Print PDF

தினகரன்       21.09.2010

அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ50 குறைப்பு

சென்னை, செப்.21: பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து மற்றும் ஊசிக்கான கட்டணம், அரசு மருத்துவமனைகளில் 50 ரூபாய் வரை குறைத்துள்ளது.

சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 2 வகையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து (நாசோவாக்) ரூ150க்கும், ஊசி மூலம் போடும் தடுப்பூசி (வாக்சி புளூ எஸ்) ரூ250க்கும் போடப்பட்டு வந்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக போடப்படும் என்றும், தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் போடும் தடுப்பூசி ரூ50 குறைக்கப்பட்டது. அதன்படி, தடுப்பு மருந்துக்கு ரூ100, தடுப்பூசிக்கு ரூ200 என நேற்று முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதுதவிர, சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம், .வெ.ரா.பெரியார் சாலை, பெரம்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு மையத்தில் தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது, சென்னையில் மட்டும்தான் கிங் இன்ஸ்டிடியூட், 6 மாநகராட்சி பகுப்பாய்வு மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எளிதாக கிடைக்க வகை செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அதிக விலைக்கு தடுப்பூசி போடுவதற்கு தடை விதித்து, குறைந்த விலையிலேயே தடுப்பூசி போட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

முட்டை அலர்ஜியா? தடுப்பூசி வேண்டாம்

கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வக மருத்துவர் கூறியதாவது: சளி, இருமல், காய்ச்சல், தலைவலி ஆகிய அறிகுறிகளுடன் வந்தால் அவர்களுக்கு தடுப்பூசி போட மாட்டோம். அவர்கள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பன்றிக்காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி, முட்டையிலிருந்து தயாரிக்கப்படுவதால் முட்டை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுபவர்களுக்கும், 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடக் கூடாது.

சைனஸ், ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகிய நோயாளிகளுக்கு மூக்கு வழியாக செலுத்தும் மருந்தை அளிக்காமல் கையில் போட்டுக் கொள்ளலாம். இதுவரை கிங் இன்ஸ்டிடியூட்டில் 5 ஆயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் வராமல் இருப்பதற்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

மாநகராட்சியின் 6 முகாம்களில் 5,000 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் தயார்; 2 மணி நேரத்தில் 535 பேர் ஊசி போட்டு கொண்டனர்

Print PDF

மாலை மலர் 20.09.2010

மாநகராட்சியின் 6 முகாம்களில் 5,000 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் தயார்; 2 மணி நேரத்தில் 535 பேர் ஊசி போட்டு கொண்டனர்

மாநகராட்சியின் 6 முகாம்களில் 5,000 பன்றிக் காய்ச்சல்
 
 தடுப்பூசிகள் தயார்;
 
 2 மணி நேரத்தில் 535 பேர் ஊசி போட்டு கொண்டனர்

சென்னை, செப். 20- சென்னையில் பரவி வரும் பன்றிக்காய்ச்சலை தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது. கிண்டி கிங் இன்ஸ் டிடியூட்டில் மட்டுமே முதலில் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்ள அங்கு அதிக அளவில் மக்கள் குவிந்தனர். எனவே பொதுமக்கள் வசதிக்காக சென்னை மாநகராட்சி சார்பில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் ஊசி போடும் பணி நேற்று தொடங்கியது. சைதாப்பேட்டை, சூளை, .வெ.ரா.பெரியார் சாலை, திருவான்மியூர், பெரம்பூர் ஆகிய 5 இடங்களில் உள்ள மாநகராட்சி பகுப் பாய்வு கூடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

மூக்கின் வழியே செலுத்தும் மருந்துக்கு ரூ.100-ம், ஊசி போட்டுக் கொள்ள ரூ. 200-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நேற்று வள்ளுவர் கோட்டம் பகுப்பாய்வு கூடத்தில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று ஒரே நாளில் 703 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இவர்களில் 451 பேர் மூக்கின் வழியாகவும், 252 பேர் கையிலும் ஊசி போட்டுக் கொண்டார்கள்.

அதிக அளவில் கூட்டம் அலைமோதுவதால் தற் போது 5 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் தயாராக உள்ளது. மேலும் தேவைப்பட்டால் உடனடியாக வரவழைக்கப்படும் என்று மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார். இன்று காலையில் இருந்தே மாநகராட்சி 6 தடுப்பூசி மையங்களிலும் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் தடுப் பூசி போடும் பணி தொடங்க வில்லை. பகல் 11 மணிக்குப் பிறகு தடுப்பூசி போடப்பட்டது. 6 மையங்களிலும் 2 மணி நேரத்தில் 535 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இன்று காலை பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிக்கான புதிய விலை பற்றிய அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே ஊசி போடுவது தாமதம் ஆனது என்று ஊழியர் ஒருவர் கூறினார்.

 


Page 166 of 519